அண்மையில் நாடளாவிய ரீதியில் பேசப்பட்டு வரும் ஒரு தொணிப்பொருள் பெண்களின் அரசியல் பிரவேசம் என்பது சவால் மிக்கதொரு பயணம்”. உண்மையில் பெண்களுக்கான பிரத்தியேக உரிமைகளை வென்றெடுக்கவும் அவர்களின் தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்தவும் பிரத்தியேக பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி தீர்வுகளை முன்வைப்பதற்குமான ஒரு அதிகாரம் பொருந்திய பெண் தலைமைத்துவம் அவசியமானதாகும். இதன்படி இலங்கையானது ஆசியாவின் நீண்டதொரு அரசியல் கலாசாரம் கொண்ட நாடுகளில் ஒன்றாகும் என்பதுடன் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆண்களும் பெண்களும் சமமான சந்தர்ப்பம் மற்றும் உரிமைகளை உடையவர்கள். ஆனால்; அரசியல் உரிமைகளை பொருத்தவரை பெண்கள் இரண்டாம் தர பிரஜைளாகவே கருதப்படுகின்றனர். காரணம் பெண்களின் அரசியல் பிரவேசம் (பாராளுமன்றம், மாகாணசபை, ஏனைய உள்ளுராட்சி தாபனங்கள்) மிக குறைவான வீதத்திலும் சவால்நிலைக்குட்பட்டதாகவும் நிலவுகிறது. இதற்கு எமது மலையக பிரதேசமும் விதிவிலக்கல்ல. இது குறித்து பின்வருமாறு சுருக்கமாக ஆராய்வோம்.
மலையகத்தை பொருத்தவரை நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை மற்றும் இரத்தினபுரி, கேகாலை (மலையகம் என்பது தேசிய ரீதியில் பரந்துபட்டது. கட்டுரையின் நோக்கத்திற்காக தேர்தல் மாவட்டங்கள் சுட்டிகாட்டப்பட்டுள்ளது) பிரதேசங்களிலிருந்து பெண்களின் பாரளுமன்றத்திற்கான அரசியல் பிரவேசம் மிகவும் பின்தங்கிய நிலையிலே இருக்கிறதென்பது வெளிப்படையான நிதர்சனம். இலங்கையில் 1931 ஆம் ஆண்டில் முதல் பெண் பாராளுமன்ற பிரவேசத்திலிருந்து தற்போது (2020) வரை 20 ற்கும் குறைவான பெண்களே தேர்தல் மற்றும் தேசிய பட்டியல் முறைமையினூடாக மலையகப் பிரதேசத்திலருந்து பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்துள்ளனர். அவ்வாறு மலையக பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற அங்கத்துவம் வகித்த பெண்கள் சிலர்:
நுவரெலிய -னுரரெவாடையமய ஆரனலையளெநடயபந சுநரெமய ஆநnமைந ர்நசயவா (21ஃ07ஃ1977 -20ஃ12ஃ1988 இ15ஃ02ஃ1989 -18ஃ08ஃ2000)இ
கண்டி -வுயஅயசய முரஅயசi ஐடயபெயசயவநெ 06ஃ1949 - 08ஃ04ஃ1952, பதுளை- ர்நஅய சுயவயெலயமநஇ இரத்தினபுரி - ளுரசயபெயni ஏளையமய நுடடயறயடய.
இதில் வெளிப்படையான விடயம், பல்லினம் சமுகம் கொண்டதும் நாட்டின் சிறுபான்மை மக்கள் செறிந்து வாழக்கூடிய மலையக பிரதேசங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பெண்கள் அனைவருமே நாட்டின் பெரும்பான்மை இனத்தினை சார்ந்த பெண்களே தவிர மலையக பிரதேசத்தின் சிறுபான்மை இனத்திலிருந்து எந்தவொரு பெண்களும் தெரிவு செய்யப்ட்டிருக்கவில்லை.
அப்படியிருக்க இதுவரை பாராளுமன்ற பிரதிநிதித்துவம் ஒன்றை பெற்றிருக்கவில்லை எனினும் அதற்கான முயற்சிகள் மேற்க்கொள்ளவில்லையென குறிப்பிட முடியாது. அதாவது மலையகத்தில் சிறுபான்மையின பெண் வேட்பாளர்கள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்டம் வரையில் மாத்திரமே வந்துள்ளனரே தவிர வெற்றிபெரும் கட்டத்தினை இதுவரை எட்டியிருக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். காரணம் நடைமுறையில் மலையக பெண்களின் பாராளுமன்றத்திற்கான அரசியல் பிரவேசம் சவாலுக்குரியதாக காணப்படுகின்றமை.
இவ்வாறு மலையக பெண்களின் பாராளுமன்றத்திற்கான அரசியல் பிரவேசம் சந்தர்ப்பம் சவாலுக்குரியதாகவும் பின்தங்கிய நிலையிலும் இருப்பதற்கான பொதுவான காரணங்களாக பின்வருவன அடையாளப்படுத்தப்படுகின்றது.
1. அரசியலில் ஆணாதிக்கமும் கட்சி அரசியலும்
மலையக அரசியல் கட்சிகளை பொருத்தவரை, அவற்றில் பெண் உறுப்பினர்களை விட கூடுதலாக ஆண் உறுப்பினர்களே உள்ளனர். தேர்தலில் களமிறங்கும் போதும் கட்சி ரீதியாக / சுயேட்சை குழு அடிப்படையிலோ போட்டியிடுவதிலும் பெண் வேட்பாளர்களை விட ஆண் வேட்பாளர்களே அதிகம். ஆக பொதுவெளியில் மலையக அரசியல் ஒரு ஆணாதிக்க அரசியலாகவே தோற்றமளிக்கின்றது.
மேலும் பாராளுமன்ற தேர்தலின் போது கட்சிகளில் பொதுவாக பெண்களை வேட்பாளர்களாக நிறுத்துவதும் அவற்றோடு; சாதாரண பின்னனி கொண்ட பெண்களை கட்சியில் உள்வாங்குவதும் மிக குறைவாகும். பெரும்பாலும் அரசியல் செல்வாக்கு கொண்ட கட்சியின் கொள்கைகளோடு முரண்படாது செல்லும் பெண்களை ஓரளவு உள்வாங்கியுள்ளது. இதிலிருந்து விடுத்து சுயேட்சையாக பெண்கள் தேர்தலில் களமிறங்கினாலும் (தேர்தலின் போது/முன்/பின்) ஆணாதிக்க சமுகத்தால் அவர்களுக்கெதிராக பின்வரும் இரு வழிமுறையிலான வன்முறைகளை சமீப காலத்தில் கட்டவிழ்க்கப்ட்டிருந்ததை அவதானிக்க கூடியதாகவிருந்தது.
1. குறித்த பெண்வேட்பாளர்களின் வெற்றியை தடுக்கும் முன்னேற்பாடாக அவர்கள் தொடர்பான பிழையான எதிர்மறை எண்ணங்களை (நடத்தை கெட்டவள், ஊழல் செய்பவர், திறமையில்லாதவர் போன்ற எண்ண கருக்கள்) மக்கள் மனதில் நேரடியாக ஃ மறைமுகமாக விதைத்தலும் குறித்த நபருக்கு அதனூடாக மன உளைச்சலை ஏற்படுத்தலும்.
2. பெண்களுக்கெதிராக முரட்டுத்தனமான வன்முறைகளை கட்டவிழ்த்தல் (உடல் ஊறு, ஆதன தீங்கு ஏற்படுத்தல், தாக்குதல்கள், அச்சுறுத்தல்)
2.மலையக பெண்களுக்கு அரசியல் பிரவேசம் தொடர்பில் ஆர்வம் இன்மையுடன் கூடிய அசமந்த போக்கு. ஆர்வம் உடையவர்களுக்கு போதியளவிலான வலுவூட்டல்களும் வழிகாட்டுதல்களும் கிடைக்கப்பெறாமை.
3.அரசியல் பிரவேசத்தின் முக்கியத்துவம் தொடர்பில் மலையக பெண்களுக்கு போதியளவிலான விழிப்பணர்வின்மையும் அரசியல் அறிவு மட்டம் குறைவாக காணப்படல்.
4.மலையக பெண்களின் தனிப்பட்ட, குடும்ப மற்றும் சமுக கலாசார சூழல் காரணிகள்.
5.மலையக பெண்களின் அரசியல் பிரவேசம் தொடர்பில் மக்களிடையே குறிப்பாக சக பெண்களிடையே கிடைக்கின்ற வரவேற்பு, ஊக்கமளிப்பும் கூடிய ஆதரவும் மிக குறைவு.
6.கட்சிகளில் பெண்களுக்கு போதுமானளவு இட ஒதுக்கீடு வழங்கப்படாமை.
7.கட்சி தவிர்த்த சுயேட்சை குழுவில் போட்டியிட்டாலும் அது போதியளவு அதிகார வலுப்படுத்த படாமை.
8.மலையகத்தில் தடைகள் தாண்டி தேர்தல் சவாலை வென்றெடுக்கும் அளவுக்கு ஆளுமையை வளர்த்து கொண்டுள்ள பெண்களின் எண்ணிக்கை குறைவு. சில பெண்கள் பாராளுமன்ற பிரவேசத்திற்கு முயற்சித்தாலும் பொதுவெளியில் அவர்களின் ஆளுமையில் திருப்தி அடையாத மக்கள் வாக்களிப்பதில்லை.
9.ஆளுமையும் அரசியல் அறிவும் உடைய பெண்களுக்கு தேர்தலில் போட்டியிட, பிரச்சாரம் செய்ய போதியளவு பண பலம் இல்லாமை.
10.இருப்பினும் வெறுமனே பண பலமும் அரசியல் பக்க பலமும் கொண்ட பெண்களுக்கு ஆளுமை விருத்தியுடன் முன்னேற்றகரமான அரசியல் பிரவேசத்தை முன்னெடுக்க முடியாமல் இருத்தல். இதுபோன்ற இன்னோரான காரணங்களை குறிப்பிட முடியும்.
இவ்வாறான சாவால்கள் எதுவாக இருப்பினும் மலையக பெண்களின் பாராளுமன்ற பிரவேசத்திற்கான நடைமுறையிலான சாத்தியப்பாடுகள் இருக்கின்றதா? என்றால் நிச்சயம் 100 க்கு 75ம% மேலான வீதமான வாய்ப்புக்கள் பின்வரும் குறிப்பிடும் விதத்தில் உள்ளது.
1. மலையகத்தில் தொழிற்சங்கங்களே அரசியல் கட்சிகளாக செயற்பட்டு வரும் வித்தியாமான போக்கு காணப்படும் நிலையில் மலையகத்தில் பெருந்தோட்ட துறையிலே ஆண்களை விட அதிக எண்ணிக்கையிலான பெண் தொழிலாளர்களே; ஈடுபடுவதுடன் தொழிற் சங்கத்திற்கும் பெண் தொழிலாளிகளின் சந்தா பணமே கூடுதலாக கிடைக்கப்பெறுகிறது. இதன்படி அதிகளவிலான பெண்களே தொழிற்சங்க உறுப்பினராகவும் உள்ளதுடன் சந்தா பணம் அதிகளவு பெண்களிடமிருந்தே பெற்றுக்கொள்ளப்படுகிறது. இருப்பினும் அதே விகித அடிப்படையில் பெண்களுக்கு கட்சியில் அங்கத்துவம் வழங்கப்படுகிறதா என்பது கேள்வி?
ஆக தொழிற் சங்கத்திற்கு ஆண்களிலும் பார்க்க பெண் தொழிலாளிகளினால் சந்தா பணமே கூடுதலாக செலுத்த முடியுமாக இருக்க கூடிய நிலையில், ஏன் அவ் தொழிற்சங்க பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு பெண்களுக்கான தனி ஒரு தொழிற்சங்கத்தினையும் கட்சியினையும்; உருவாக்கி அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேர்தலில் போட்டியிட முடிமான சந்தர்ப்பம் உள்ளது.
2. மலையகத்தினை பொருத்தவரை 1ஃ3 பங்கு பெண்களே பெருந்தோட்ட துறையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏனைய தொழிற் துறையில் (சட்டம், மருத்துவம, பொறியில், வர்த்தகம், ஏனைய நிர்வாக மற்றும் ஆசிரியர் துறை) ஈடுபட்டு வரும் பெண்களை பிரதிநிதித்துவம் படுத்தும் வகையில் மலையகத்தில் எந்தவொரு தொழிற்சங்களோ ஃ அமைப்புக்களோ இதுவரை உதயமாகியருக்கவில்லை. எனவே அவர்களை ஒன்றினைக்கும் வகையில் அமைப்புக்களை ஃ தொழிற்சங்களை உருவாக்கி அப் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் போட்டியிடலாம்.
3. மேலும் மலையக தேர்தல் கலாசாரத்தில் ஒரு ஆண் வேட்பாளர் போட்டியிட்டால் அவர்களுக்கு பெண்கள் சார்பில் அதிகமான வாக்குகள் அளிக்கப்படுகின்றது. ஆனால் பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டால் அவர்களுக்கு ஆண்கள் சார்பில் அதிகமான வாக்குகள் அளிக்கப்படுவதில்லை. காரணம் ஆண்கள் மட்டும் சமவாய்ப்பு சிந்தனையை செயற்படுத்துவதில்லை. அப்படி சமவாய்ப்பு சிந்தனையை சிந்திப்பார்களாயின் நிச்சயம் பெண் பிரதிநிதித்துவம ஒன்றினை பெறலாம்.
4. மேலும்; ஒரு குறிப்பிடத்தக்க சம்பவம் யாதெனில் கடந்த காலத்தில ஒரு குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினரால் மலையகத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் பெண்கள் தலைமையிலான ஒரு சுயேட்சை குழுவை களமிறக்கியப்போதும் அதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விளக்கமில்லாத தன்மையினாலும் கேலி கிண்டல்களுக்கு உட்பட்டதுடன்; அப்பெண் குழுவுக்கு சரியான வலுவூட்டல் இல்லாமையால் தேர்தலில் தோல்வியும் கண்டனர். ஆக சரியான அரசியல் வலுவூட்டல்களை வழங்குமிடத்து பெண்களும் பிரதிதநிதித்துவம் பெறலாம்.
இவ்வாறான சாத்தியப்பாடுகள் இருப்பினும் அரசியல் மட்டத்திலும் சமுதாய மட்டத்திலும் இது குறித்து சிந்திப்பது மிக குறைவாகும். இவற்றோடு பின்வரும் சமுக சீர்த்திருத்தங்களை மேற்கொள்வதினூடாக நிச்சயம் மலையக பெண்களின் நாடாளுமன்றத்திற்கான பிரவேசத்தினை உறுதிபடுத்த முடியும்.
1. மலையக அரசியல் கட்சிகள் சந்தா பணம் பெறும் விகிதத்திற்கேற்ப பெண்களுக்கான அங்கத்துவ இட ஒதுக்கீடு தொடர்பில் ஆலோசிக்க வேண்டும்.
2. மலையகத்தில் எத்தனையோ படித்த, பகுத்தறிவுடன் சிந்திக்க கூடிய அரசியல் அறிவு கொண்ட பொது நலனுடன் செயற்படக்கூடிய ஆளுமை கொண்ட பெண்கள் உள்ளனர். இவர்களை ஒன்றினைத்து அரசியல் துறையில் சரியான வலுவூட்டல்களை வழங்க வேண்டும்.
3. மேலும் பெண்களின் பிரதிநிதித்துவம், அது தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக அரசியல் கட்சிகளின் முகவர்கள், பெண் தொழிற்படுனர்கள் ஆகியோரை அறிவுறுத்தும் நிகழ்சி திட்டங்களை பிராந்திய ரீதியல் மலையகத்தில் செயற்படுத்த வேண்டும்.
4. மலையக ஆணாதிக்க சமுகத்தினுள் ஆணாதிக்க சிந்தனை மற்றும் தீர்மானங்களுக்கிடையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறான விடயங்களை முறையாக சிந்தித்து எம் சமுகம் செயற்படுமாக இருந்தால் மலையகத்தில் பிராந்திய ரீதியில் ஒரு வலுவான நேர்த்தியான அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதுடன் அபிவிருத்தியுடன் கூடிய மலையகத்தை கட்டியெழுப்ப முடியும். ஆனால் இதில் வேடிக்கை யாதெனில் பூனைக்கு யார் மணிக்கட்டுவது….?