Showing posts with label வறட்சி. Show all posts
Showing posts with label வறட்சி. Show all posts

Tuesday, 20 October 2020

வறட்சி




வறட்சி என்பது ஓர் இடத்தில் ஒரு பருவத்தில் பெய்யும் சராசரி மழை அளவானது குறையும் போது ஏற்படுகிறது. இது மாதக்கணக்கிலோ, வருடக் கணக்கிலோ நீடிக்கலாம்.


வறட்சியை நீக்குவதற்கு தேவையான மழைப் பொழிவு ஒன்றே தீர்வு என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் வறட்சியை வெல்லலாம். வறட்சியின் காரணமாக நாட்டின் பயிர்செய்கை, பொருளாதாரம், மக்களின் வாழ்க்கை முறை, சுற்றுப்புற சூழ்நிலை ஆகியவை பெரிதும் பாதிக்கப்படுகின்றன.


சிலி நாட்டில் உள்ள அடகாமா பாலைவனத்தில் 400 வருடங்களாக நீடித்த வறட்சி ஏற்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.


வறட்சியை அதன் பாதிப்பு மற்றும் கால அளவினைப் பொறுத்து நான்காகப் பிரிக்கலாம். அவை


1. வானிலை சார் வறட்சி


2. விவசாய வறட்சி


3. நீரியியல் சார் வறட்சி


4. சமூக பொருளாதார வறட்சி ஆகும்.


வழக்கமான மழைக் காலத்தில் பெய்யும் மழை அளவானது, சராசரி மழை அளவை விடக்குறையும் போது வானிலை சார் வறட்சி ஏற்படுகிறது. இதுவே மற்ற வறட்சிகளுக்கும் முக்கிய காரணியாகும்.


விவசாய வறட்சியில் பயிர் வளர்ச்சி குறைந்துவிடும். அதாவது மண்ணிலுள்ள நீரின் அளவு குறைந்து பயிர் பாதிப்படைந்து விவசாய உற்பத்தி குறைந்து விடும்.


மழையின் அளவானது குறைந்து விடுவதால், வறட்சியான கால நிலை தொடர்ந்து ஆறுகள், குளங்கள், ஓடைகள், ஏரிகள் முதலிய நீர்நிலைகள் வற்றிப் போவது நீரியியல் சார் வறட்சி ஆகும்.


தொடர்ந்த வறட்சியால் உற்பத்தி பாதிக்கப்பட்டு பொருளாதார பின்னடைவு ஏற்படுதலே சமூக பொருளாதார வறட்சி ஆகும்.


வறட்சியின் விளைவால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. விவசாயம் குறைவதால் பஞ்சம் ஏற்படும். இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம் பெயர்வது ஏற்படும்.


வறட்சியின் காரணமாக வெப்பநிலை அதிகரித்து உயிரினங்களுக்கு வெப்பத்தினால் ஏற்படும் நோய்கள் உண்டாகும். நீர் மற்றும் நிலவாழ் விலங்குகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உயிர் சூழ்நிலையில் மாற்றங்கள் உருவாகும்.


குறைந்த மழைப்பொழிவினால் நீர்மின் உற்பத்தி பாதிக்கப்படும். வறட்சியினால் தொழிற் உற்பத்தி பாதிக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும். உணவு மற்றும் தண்ணீருக்குச் சண்டையிடும் சூழ்நிலை உருவாகும். மழை குறைவதால் மண்வளம் குறையும்.


2050ஆம் ஆண்டினை நெருங்கும் போது வறட்சியின் பாதிப்பால் மட்டுமே தெற்காசிய நாடுகளின் விளைச்சல் 30% வரை பாதிக்கப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது

.

இலங்கையில் 2005 ஆம் ஆண்டின்  13ம் இலக்க அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின்படி அடையாளம்  காணப்பட்ட 21அனர்த்தங்களுள் வறட்சியும்ஒன்றாகும்.


வறட்சிக்கான காரணங்கள்


மழை பொய்த்துப் போவது, நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி காலியாக்குவது, நீர்த்தேக்கங்களில் நீரின்மை, தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்களை பயிர் செய்வது போன்றவையே  வறட்சி ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாகும்.


இவைமட்டுமின்றி, நீர்ப்பிடிப்புத் தன்மை குறைந்த மண் வகைகளும் வறட்சியை அதிகரிக்கின்றன. . பல மாவட்டங்களில் பரவலாகக் காணப்படும் செம்மண் நிலங்களின் நீர்ப்பிடிப்புத் திறனும் குறைவுதான். இப்படியாக மண்வகையும் வறட்சிக்கு முக்கிய காரணமாகும்.


வறட்சியை வெல்வது எப்படி?


வறட்சியால் நமது நாடு அடிக்கடி பாதிக்கப்படுவதால் அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து கொள்வது அவசியமாகிறது. வறட்சியானது ஓர் இயற்கை இன்னல் என்பதால் அதனை தடுக்க முடியாது. ஆனால் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் பாதிப்பிலிருந்து தப்பலாம்.


வறட்சியானது விவசாயிகளைத் தான் அதிகம் பாதிக்கும். எனவே வறட்சி பாதிப்பிலிருந்து காத்துக் கொள்வதற்கு சரியான வழி, வறட்சியைத் தாங்கும் பயிர்களை பயிரிடுவதுதான் செய்வது தான்.

வறட்சியைத் தாங்கும் நெல் ரகங்களைத் தேர்வு செய்து பயிர் செய்யலாம்.


நீர்நிலைகளை சீர்செய்து மழைநீரைத் தேக்குதல், நிலத்தடி நீரை செறிவூட்டுதல், பயிர் சுழற்சி முறையில் விவசாயம் செய்தல், பயன்படுத்திய நீரினை மறு சுழற்சி செய்து பயன்படுத்துதல், உள்நாட்டில் உள்ள அதிக நீர்வளமுள்ள நதியினை நீர்வளம் குறைவாக உள்ள நதியுடன் இணைத்தல் வறட்சியைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் வறட்சியை வெல்லலாம்.

வறட்சியும் இலங்கையும்




எமது நாட்டில் மழை வீழ்ச்சி குறைவடைந் துள்ளதால் நாட்டிற்குத் தேவையான மழை கிடைக்கவில்லை. அத்துடன் நீர் நிலைகளின் நீர்மட்டமும் குறை ந்துள்ளது. வரண்ட காற்றும் வீசு வதனால் நாட்டின் தட்ப வெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன், வரட்சியான காலநிலையும் நிலவுகின்றது.


இலங்கையானது புவியியல் ரீதியாக மத்திய கோட்டிற்கு அண்மையிலும், வெப்பமான காலநிலை நிலவக்கூடிய பிரதேசத்திலும் அமைந்துள்ளது. அத்துடன் இலங்கையை அச்சுறுத்தும் அனர்த்தங்களில் ஒன்றாக வரட்சி மாறி வருகின்றது. காலநிலை மாற்றங்களும், மனித நடவடிக்கைகளும் இவ்வனர்த்தம் ஏற்படுவதற்கான காரணங்களாகும். இலங்கையில் நிலவும் இந்த வரட்சியான காலநிலையால் வரட்சி தொடர்பாக மக்களை விழிப்பணர்வூட்டுவது அத்தியவசியமாகின்றது.


இலங்கைக்கு மழை கிடைக்கின்ற பருவப் பெயர்ச்சி மழைக்காலங்களில் குறைந்த மழை வீழ்ச்சியின் காரணமாக தென்கிழக்கு, வட மத்திய, வடமேற்கு பிரதேசங்களிலே வரட்சி ஏற்பட காரணமாக இருக்கின்றது. வரட்சிக்கு வரை விலக்கணமாக ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக 15 தினங்களுக்கு மழை கிடைக்கவில்லையாயின் அங்கு வரட்சி ஏற்படுவதாக கருது கின்றனர். சில நாடுகள் நாட்களைக் கொண்டும், வாரங்களைக் கொண்டும், மாதங்களைக் கொண்டும், வருட ங்களைக் கொண்டும் வரட்சியை வரையறை செய்கின்றன.


பொதுவாக இலங்கையில் பிராந்திய வரட்சி  3-4 வருடங்களுக்கு ஒருமுறை ஏற்படு கின்றது. மிகவும் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வரட்சி 10 வருடங்களுக்கு ஒருமுறை ஏற்படு கின்றது. வரட்சி ஏற்படுவதற்கு பிரதான காரணங்களாக குறைந்த மழைவீழ்ச்சி, காடழித்தல், சட்டத்திற்கு முரணான சூழலுக்குப் பொருந்தாத நிலப் பயன்படுத்துகை, திட்டமிடப் படாத பயிர்ச் செய்கைகள் என்பன காரணமாக அமைகின்றன.


வரட்சியானது பொருளாதாரம், சமூகம் சூழல் என்பவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.


பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புக்களாக விவசாய பயிர்கள் இறத்தல், அறுவடை குறைவடைதல், பயிர்ச் செய்கைக்கான நீரின் அளவு குறைதல், கைத்தொழில், சுற்றுலா நீர்மின் உற்பத்தி குறைதல், நிதி என்பவற்றில் தாக்கத்தை ஏற்படுத்து கின்றது.


சமூக பாதிப்புக்களாக மனஅழுத்தம், சத்தான உணவு குறைதல், மக்கள் உணவிலிருந்து பாதுகாப்பு குறைதல், கலாசார விழுமியங்கள் என்பவற்றில் வரட்சியின் தாக்கம் ஊடுருவுகின்றது. சூழலில் ஏற்படக்கூடிய பாதிப்புகளாக விலங்குகள், தாவரங்கள், மரம், செடி, கொடி இறத்தல், ஆறு, குளங்கள் வரண்டு போதல் மற்றும் மாசடைதல், குடிநீரின் அளவு குறைவடைவதோடு, நிலக்கீழ் நீர் மாசடைதல் அதன் தரம் குறைதல் போன்ற பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.


வரட்சி ஏற்படும்போது வழமையாக விவசாயத்துறையே முதலில் அதிகம் பாதிக்கப்படுகின்றது. ஏனெனில் பயிர்கள் மண் பற்றியுள்ள நீரிலேயே தங்கியுள்ளது. இது வரட்சியின் காலம் அதிகரிக்கும் போது மண்ணின் ஈரத்தன்மை குறைந்து கொண்டு செல்லும். மேலும் அதிகரிக்கும்போது அது நிலக்கீழ் நீரிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.


அதுமட்டுமல்லாது இலங்கையானது தனக்கு தேவையான மின்சக்தியில் 75% நீரை பயன்படுத்தியே உற்பத்தி செய்கின்றது. இதனால் நாட்டின் மின்சாரத் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்து கொள்வதற்கு முடியாமல் போவதுடன் பெரும் சிரமத்திற்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. அத்துடன் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான செலவும் அதிகரிக்கின்றது.


வரட்சி நிலவும் காலப் பகுதியில் விவசாய உற்பத்திகள் குறைவடைவது டன், உணவுப் பொருட்களின் விலையும் அப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கான செலவின மும் அதிகரிக்கும்.


இலங்கையில் மிகப் பெரிய அளவில் வரட்சி ஏற்பட்ட காலங்களாக 1935-1937,1947-1949, 1953-1956, 1974-1977, 1982, 1983, 1987,1989,2001,2004 ஆகிய ஆண்டுகளைக் குறிப்பிடலாம். இவ்வாண்டுகளில் 2001 ஆம் ஆண்டிலேயே மிகப் பெரிய வரட்சி அம்பாந்தோட்டை, மொனராகல, குருநாகல், புத்தளம், இரத்தினபுரி, பதுளை, அம்பாறை ஆகிய ஏழு மாவட்டங்களில் ஏற்பட்டது. 2001ஆம் மற்றும் 2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட வரட்சியினால் அதிகளவான மக்களும் பயிர்களும் பாதிப்படைந்துள்ளன.


2001 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வரட்சியினால் 370, 541 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதுடன் 104,399 ஹெக்டேயர் பயிர்களும் பாதிப்படைந்தன. இதன்போது நிவாரண சேவைகளுக்கும் ஏனைய நடவடிக்கைகளுக்குமாக இலங்கை ரூபா 381,415,000 செலவிடப்பட்டது. இதேபோல் 2004 ஆம் ஆண்டு வரட்சியினால் 2,198,521 மக்கள் பாதிக்கப்பட்டதுடன் 47, 105 ஹெக்டேயர் பயிர் நிலங்களும் பாதிப்படைந்தன.


வரட்சியினால் குறைந்த அளவில் பாதிப்படையக் கூடிய மாவட்டங்களாக கம்பஹா, கேகாலை, கொழும்பு, களுத்துறை, காலி, முல்லைத்தீவு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களை குறிப்பிடலாம்.


இலங்கையிலே இரண்டு பருவப் பெயர்ச்சி மழைக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் பெருமளவு வரட்சியின் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இரண்டு பருவப் பெயர்ச்சி மழைக்கு இடைப்பட்ட காலங்களில் ஜனவரி-மார்ச், ஓகஸ்ட் - செப்டெம்பர் ஆகிய காலங்களிலேயே அதிகளவான வரட்சி ஏற்பட்டுள்ளது.


வரட்சியானது ஏனைய அனர்த் தங்களிலிருந்து வித்தியாசமாக இருப்பதுடன் நீண்ட காலத்துக்கு பரந்த அளவில் மக்களை துன்புறுத் துவதுடன் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தி யிருக்கின்றது. வரட்சியானது மெதுவாக ஆரம்பித்து பின்னர் படிப்படியாக வளர்ச்சியடைந்து மாதம் அல்லது வருட கணக்கில் நீடித்து பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. வரட்சி ஏற்படுவதை முன்கூட்டியே அறிவது அல்லது அனுமானிப்பது கடினமானதாகும்.


வரட்சியினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்தல், ஆய்வுகளை மேற்கொள்ளல் போன்ற செயற்பாடுகள் இலங்கை போன்ற நாடுகளுக்கு இன்றியமையாததாக இருக்கின்றது.


வரட்சியை பல முறைகளில் பிரிக்கக் கூடியதாக இருந்தாலும் இலங்கைக்கு பொருந்தக் கூடியதாக மூன்று வகைகளாக பிரிக்கலாம்.


01. வானிலை வரட்சி: குறித்த பிரதேசத்திலே சாதாரணமாக கிடைக்கக்கூடிய மழை வீழ்ச்சியை பெறுகின்ற காலம்.


02. நீரியல் வரட்சி : திட்டமிட்ட முறைப்படி நீரை ரிபிசீ8 முடியாத காலம். இந்த காலத்திலே நிலக்கீழ் நீர் ஓட்டமானது சாதாரண நீர் மட்டத்தின் அளவை விட கீழ்மட்டத்தில் காணப்படும்.


03. விவசாய வரட்சி : மண்ணின் ஈரத்தன்மை அற்றுப் போவதால் பயிர்கள் இறத்தல்.


வரட்சியினால் ஏற்படும் சேதங்களை குறைக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்

 1. வரட்சி ஏற்பட்டதன் பின் வரட்சி பற்றிய ஆய்வுகளில் ஈடுபடல்.

 2. மழைவீழ்ச்சி பற்றிய தொடர்ச்சியான அவதானிப்பு மூலம் அக்காலத்துக்குரிய நீர்த்தேவைகள் பற்றித் தேடுதல். 

3. நீர் வளத்தை பாதுகாப்பதற்கான செயற்பாடுகளை பின்பற்றுதல். 

4. மழைநீர் சேகரிப்பு தாங்கி அறிமுகம் செய்தல். 

5. நிலப்பயன்பாட்டு முறையைத் திட்டமிடுதல். 

6. அரச, அரச சார்பற்று, தனியார்துறை மூலம் நிவாரண சேவைகளை ஒழுங்கு செய்தல். 

7. நீர் வளங்களை அதிகரித்தல்.

 8. மக்களை அறிவூட்டுதல். 

9. ஊட கங்களை தொடர்புபடுத்தல். 

10. விவசாய கிணறுகளை அமைத்தல் 

11. நீரை வீணாக்காது சிக்கனமாகப் பயன்படுத்தல். 

12. ஆறுகள், குளங்கள், நீர்நிலைகளை அசுத்தமாக்காது இருத்தல். 

13. மரங்களை நடுதல். 

14. நீரேந்து பிரதேசங்களை பாது காப்பதற்கு காடுகளை அழிக்காதிருத்தல். 

15. குழாய்க்கிணறுகளை பயன்படுத்தல் 

16. குறைவான நீரைப் பயன்படுத்தக் கூடிய பயிர்களை நடல்.

மழை தொடர்ந்து 15 நாட்களுக்கு மேல் பெய்யாதிருத்தல், வெப்பம் அதிகரித்தல், பிரகாசமான சூரிய வெளிச்சம், சேற்றுப் பிரதேசங்களில் வெடிப்புகள் ஏற்படல், நிலக்கீழ் நீர்மட்டம் குறைவடைதல், மரம், செடி, கொடிகள் வாடுதல்

வாசிப்பு மனிதனைப் பூரணமாக்கும்

  பொதுஅறிவுடன் மொழிவளத்தையும் வளர்ப்பது வாசிப்புப் பழக்கம்!  வாசிப்பின் ஊடாகவே ஒருவன் பூரண  மனிதனாகலாம். வாசிப்பின் ஊடாகவே அறிவுடைய சமூகத்தை...