Showing posts with label தமிழ் கட்டுரைகள். Show all posts
Showing posts with label தமிழ் கட்டுரைகள். Show all posts

Tuesday, 20 October 2020

ஆரம்பக்கல்வி




ஆரம்பக்கல்வி என்பது எதிர்கால தலைவர்களை சிறந்த முறையில் உருவாக்குவதில் அச்சாணியாகத் திகழ்கிறது. அது சிறப்பாக அமைந்தால் தான் எதிர்கால இலக்குகளும் வெற்றிவாகை சூடும் என்று கூறுவதில் ஐயமில்லை. இதை அடிப்படையாகக்கொண்டே திட்டங்கள் ஒழுங்கமைக்கப்படுகின்றன. முன்பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் 5 வயதுககுப் பின் ஆரம்ப பாடசாலைக்குள் நுழைகின்றனர். இவர்கள் உள்ளத்திலும் உடலிலும் சிறுவர்கள். ஆதலால் இவர்களுடன் உரையாடுவதும் பழகுவதும் மென்மையானதாகக் காணப்பட வேண்டும். அப்போதே பிள்ளை அச்சமடையாமல் கல்வி கறக முன்வரும் பிள்ளையைப் பார்த்து அதட்டாமல் ஆசிரியர்களும் பெற்றோர்களும் நல்ல முறையில் அணுக வேண்டும். இக்காலப்பகுதியில் பாடசாலைகளில் குறைந்தளவு நேரமே கல்வி கற்பர். அதிகளவான நேரத்தை வீட்டில் பெற்றோர்களுடனேயே கழிப்பர். இந்நிலையில் பிள்ளைகளின் வளர்ச்சியில் பெற்றோர்கள் அதிக செல்வாக்குடையவர்களாகக் காணப்படுவதை நாம் அறியலாம்.


சிறுபிள்ளைகளை பெற்றோர்கள் சுதந்திரமாக விட வேண்டும். இதனை பாரதியார் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.


“ஓடி விளையாடு பாப்பா- நீ

ஓங்திருக்கலாகாது பாப்பா

கூடி விளையாடு பாப்பா- ஒரு

குழந்தையை வையாதே பாப்பா

காலை எழுந்தவுடன் படிப்பு

பின்பு

கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு

மாலை முழுவதும் விளையாட்டு-

இதை

வழக்கப்படுத்திக் கொள்ளு

பாப்பா”


இவ்வாறு பிள்ளைகள் சுதந்திரமாக இருக்கும் பட்சத்திலேயே உடலபிவிருத்தி, சமூக மனவெழுச்சி அபிவிருத்தி என்பன பிள்ளைகளிடத்தில் தோன்றும். தாய் தந்தையர் பிள்ளையுடன் அன்புடனும் அரவணைப்புடனும் இருத்தல் வேண்டும். அப்போதே அவர்களும் அவ்வாறான மனநிலையைப் பெறுவர். நல்ல கதைகளையும் கருத்துக்களையும் கூறுவதனால் அகமகிழ்ந்து அதனூடாக பல எண்ணக்கருக்களை வளர்த்துக் கொள்வர்.


குழந்தைப் பருவத்திலிருந்து பிள்ளைப் பருவத்தில் பாடசாலைக்கு வரும் மாணவர்களுக்கு சமூக மனவெழுச்சி சார் விருத்தி, அறிவாற்றல் விருத்தி, ஆக்கத்திறன் விருத்தி போன்ற பல விருத்திகளை மேம்படுத்த ஆசிரியர்கள் கவனமெடுத்தல் வேண்டும். “இளமையிற் கல்வி சிலையில் எழுத்து” என்பதற்கிணங்க சிறுவயதிலேயே பிள்ளைகள் ஆர்வமாய் இருக்கும் துறைகளை இனங்கண்டு அத்துறையினூடாக அவர்களை வளர்த்தெடுக்க வேண்டும்.


பாடசாலை காலத்தில் மைற்கல்லாக திகழும் ஆரம்பக்கல்வியானது வாசிப்பு, எழுத்து, கணிதம் ஆகியவற்றை கற்பிப்பதோடு கீழ்படிதல், ஒழுக்க விதிமுறைகள், பிள்ளைகளிடம் அடங்கியுள்ள விசேட சமாத்தியம், உள்ளார்ந்த ஆற்றல் ஆகியவற்றை இனங்கண்டு அவற்றை அபிவிருத்தி செய்ய வேண்டும். பிள்ளையின் அறிவை மேலும் விருத்தி, செய்வதற்காக சிந்தித்து வினாக்களைப் பிறப்பித்து அவற்றிற்கான பதில்களை கண்டுபிடிக்கும் ஆற்றலை வளர்க்க வேண்டும். மனதைக்’ கொண்டும் கரத்தைக் கொண்டும் கற்பனையால் உருவாகும் ஆற்றலை விருத்தி செய்தல் வேண்டும். தானாகவே அறிவைப் பெற்று அவ்வறிவை பிரயோகம் செய்யும் முறையைக் கற்றுக்கொள்ள வழிப்படுத்தல் அவசியம். முதியோர், ஆசிரியர் மற்றும் பிள்ளைகள் ஆகியோருக்கு ஆதரவளித்து கணம்பண்ணும் வழக்கத்தை வளர்த்தல், வேறுபட்ட கலாசாரங்களையும் மற்றவர்களின் கருத்துக்களையும் புரிந்துணர்ந்து அவற்றுக்கு மதிப்பளித்து நடக்கும் பண்பை வளர்த்தல் மனிதர்கள் தாவரங்கள், விலங்கினங்கள் உட்பட சுற்றாடலைப் பாதுகாக்கும் பண்பை ஓங்கச் செய்தல் இவ்வாறாக அடிப்படை இலட்சியங்களை உள்ளடக்கியதாகவே ஆரம்பக்கல்வி வடிவமைக்கப்பட்டுள்ளது.


கல்வியாளர் மரியா மொண்டிசோரியின் கருத்துப்படி பிள்ளைகட்கு “சூழலுடன் பொருந்தி வாழக்கூடிய தனி ஆற்றல்களை வளர்க்கும் விளையாட்டு மூலமான தொடர் செயற்பாட்டுக் கல்வி அவசியம்” எனக் குறிப்பிடுகின்றார். எனவே நாமும் இதனைக் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டியவர்களாகின்றோம். அறிஞர் ஜோன் ரூசோ குறிப்பிடுகையில் “பிள்ளையை இயற்கையுடன் சங்கமிக்க விட வேண்டும்” என்கிறார். அதனூடாக நாம் பிள்ளையை கற்பிக்க முயல வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றார். எனவே இவ்வாறான கருத்துக்களின் அடிப்படையில் எமது ஆரம்பக் கல்வி கட்டமைக்கப்பட வேண்டியது தேவையான ஒன்றாகும். இன்று இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் புதிய கல்வி சீரதிருத்தத்திற்கமைய விளையாட்டு மூலமான கல்வி முதனிலைப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.


ஆரம்பக் கல்வியில் மாணவர்கள்


எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகள்


1. பயிற்சிபெற்ற ஆசிரியர்களின்மை


2. பாடசாலைகளில் பெளதீகவளப் பற்றாக்குறை. மேசை, தளபாடங்கள் இல்லை. கட்டட வசதியின்மை.


3. போசாக்கு குறைபாடு


4. சுகாதாரப் பிரச்சினைகள்


5. மனித வளப் பற்றாக்குறை


6. சூழல் பிரச்சினைகள்


7. பெற்றோரின் அக்கறையின்மை


8. சமூக ஒத்துழைப்பு இல்லாமை


எமது சமூகத்திலுள்ள இவ்வாறான பல விடயங்களைக் கருத்திற் கொண்டு பிரச்சினைகள் காணப்படும் இடத்து அவற்றை நிவர்த்தி செய்து கல்வியை விருத்தி செய்யக்கூடியதாக இருத்தல் வேண்டும். அப்போதே திறமுடைய எதிர்கால நல்லவர்களை எமது சமூகம் காணும். பிள்ளைகளுக்கு குழுமுறைக் கல்வி, அபிநயக்கல்வி, செயற்பாட்டுக்கல்வி, விளையாட்டுக் கல்வி, சூழலுடன் இசைவாக்கம் அடையும் கல்வி முதலானவற்றை வழங்கியும் அவற்றோடு அழகியற் கலைகளினூடாக விருத்தி பெறச் செய்து அறிவாற்றல் விருத்தி பெறச் செய்ய வேண்டும். பாடசாலையின் இச்செயற்பாடுகளுக்கு பெற்றோர்களும் பக்கபலமாக இருத்தல் வேண்டும். எனவே எமது சமூகத்திலுள்ளோர்களுக்கும் இவற்றைக் கருத்திற் கொண்டு செயற்பட்டு ஆரம்பக் கல்வியை விருத்தியடையச் செய்ய வேண்டியவர்களாகின்றோம்.


எனவே ஆரம்பக் கல்வியின் அத்திவாரம் ஒழுங்காகவும் கரிசணையோடும் செப்பனிடப்பட்டால் தான் உயர் நிலைக்கல்வியின் வளர்ச்சி சீராகக் காணப்படும். ’ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்” என்றார் திருவள்ளுவர். இதனால் பெற்றோர்களின் நீண்டநாள் கனவும் கூட நிறைவேறும் தருணம் உருவாகிறது. 

தலைமைத்துவம்


தலைமைத்துவம் என்பது மனிதர்களை நெறிப்படுத்தி, இலக்குகளை அடைந்து கொள்வதற்காக அவர்களை இயக்கும் திறமையாகும். 'திறமை வகித்தல்' என்பது 'நிர்வகித்தல்' என்பதிலிருந்து வித்தியாசப்படுகின்றது. ஒரு விடயத்தை சிறப்பாக நிறைவேற்றவும் சிறந்த விளைவுகளைப் பெற்றுக் கொள்ளவும் துணைபுரிகின்ற குறிப்பிட்ட சில திறமைகளே நிர்வாகமாகும். தலைமைத்துவ திறமை மனிதனில் இயல்பாக உள்ளதும் தேடி வளர்த்துக் கொள்வதுமாகும். இதற்கு மாற்றமாக தலைமைத்துவப் பண்புகளை அனுபவம்,முயற்சி,கற்றலினூடாகவும் பெற்றுக் கொள்ள முடியும்.


ஒரு மனிதனிடத்தில் தலைமைத்துவப் பண்புகள் அதிகரிக்கும் போது, சிறந்த தலைமைத்துவ ஆளுமையை நோக்கிச் செல்லும் வேகம் விரைவாக இருக்கும். பயிற்சி கல்வி அனுபவங்களின் ஊடாக கிடைக்கும் தாக்கம் மேலானதாகக் காணப்படும். ஒருவனிடத்தில் தலைமைத்துவப் பண்பு மறைந்து விடுகின்ற போது அவன் தன்னிடம் தலைமைத்துவ ஆற்றல்களை வளர்த்துக் கொள்வதற்கு நீண்ட காலப் பயிற்சி தேவைப்படுகிறது. கல்வியும், பயிற்சியும்தான் தலைவர்களை உருவாக்குவதில் மிக முக்கிய காரணிகளாகும்.


யார் ஒருவரிடத்தில் இயல்பு, வழக்காறு, கல்வி ஆகிய மூன்று திசைகளினூடாகவும் ஆளுமை வளர்கின்றதோ அவன் சிறப்பின் உச்சத்தில் இருப்பான். சமூகத்திற்கு நெருக்கமானவனாகவும், சமூகத்தில் தலைமைத்துவத்தை தானாக பெற்றுக் கொள்ளக் கூடியவனாகவும் காணப்படுவான். நாளைய முன்னணி வீரர்களை உருவாக்குவதற்கான திட்டம் இவர்களினாலேயே திட்டமிடப்படுகின்றது. மனிதனின் அனைத்து செயற்பாடுகளும் வெற்றியை நோக்கிச் செல்ல முன்திட்டமிடல் செயற்பாடுகள் அவசியமானதாகும். திட்டமிடப்படாத செயற்பாடுகள் 'திசையறியாத படகினைப் போன்றவை' என்பதற்கு அமைவாக தலைமைத்துவ செயற்பாடுகள் முன்னணி வீரர்களை உருவாக்குவதற்காக திட்டமிடப்பட வேண்டும்.


மாணவச் செயற்பாடுகளில் ஈடுபடும் கல்விசார், கல்விசாரா தலைமைத்துவங்கள் நாளைய தலைவர்களையும் எதிர்கால அறிஞர்களையும் உருவாhக்குகின்ற பணியில் ஈடுபட்டிருக்கின்றோம் என்ற உணர்வுடன் செயற்பட வேண்டும். இப்பணியில் தமது முழுக் கவனத்தையும் திருப்ப வேண்டும். மாணவர்களின்திறமைகளையும் ஆற்றல்களையும் அவர்களது ஆரம்பக் கட்டத்திலிருந்தே கண்டெடுப்பதும் அவற்றை வளர்த்தெடுத்து அவற்றில் கரிசனை காட்டி ,சீரிய முறையில் அவற்றை நெறிப்படுத்துவதற்கான திட்டங்களைத் தீட்டி அவற்றின் பிரயோசனங்களைப் பெற்றுக் கொள்ளவும் வேண்டும்.


நாளைய முன்னனி வீரர்களை உருக்குவாக்குவது என்பது சிறந்த ஆற்றல்களையும், திறமைகளையும் கொண்ட உயர்தர பல்கலைக்கழக மாணவர்களை உள்ளடக்கிய சமூகங்களை உருவாக்குவதாகும். அத்துடன், அவர்களது திறமைகளை வளர்ப்பதையும் அவர்களை பயிற்றுவிப்பதையும் இலக்காகக் கொண்ட கல்வித் திட்டங்களுக்கேற்ப்ப, பொருத்தமான கண்காணிப்பாளர்களின் மூலம் அவர்களை நேரடியாகவே கண்காணிப்பதும் அவர்கள் மீது அதீத கரிசனை காட்டுவதுமாகும்.


பின்பு, அவர்களது ஆற்றல்களையும், சக்தியையும் பூரணமாகக் கண்டெடுத்து அவர்களை குறிப்பிட்ட சில குழுக்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். பல்வேறு துறைகளிலும், குறிப்பான துறைகளிலும் அவர்களது ஆற்றல்களை நெறிப்படுத்த வேண்டும். மேலும், உயர்தர மாணவர்களை அவர்களது ஆற்றலுக்கேற்ப பொருத்தமான கல்லூரிகளுக்கு வழிகாட்டுவதோடு, பல்கலைக்கழகப் பட்டதாரிகளை சமூகத்தில் தாக்கம் மிக்க இடங்களை நோக்கி நகர்த்துவதும் அவசியமாகும்.


ஏதிர்காலத் தலைவர்கள் படையிலிருந்து வெளியாகின்ற மாணவர்களிடமிருந்து உச்சப் பயன் பெறுவதற்கும் அவர்கள் சிறப்பு தேர்ச்சியடைந்த, சமூகத்தில் தாக்கம் செலுத்தக்கூடிய துறைகளை நோக்கி அவர்களை வழிநடாத்துவதற்குமான பூரணமான ஒரு திட்டத்தை முன்வைப்பதும் அவசியமாகும்.


பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் உயர்தர பாடசாலைகளிலுமுள்ள ஆசிரியத் தலைவர்களோடும் மாணவத் தலைவர்களோடும் கலந்துரையாடுவதன் மூலம் கற்றல் தொடர்பான பல்வேறுபட்ட ஆற்றல்கள், திறமைகள், ஏனைய தலைமைத்துவ ஆற்றல்கள் அனைத்தையும் கொண்ட சிறந்ததொரு குழுவைத் தெரிவு செய்துகொள்ள முடியும்.


தலைமைத்துவக் கொள்கைகள் சிறந்ததாகக் காணப்படும் பொழுதே பயன்மிக்க அறுவடையைப் பெற்றுக் கொள்ள முடியும். கொள்கைகள் சர்வாதிகாரப் போக்கைக் கொண்டு காணப்படும் பொழுது இலக்குகள் எட்டாக் கணியாகி விடும். ஹிட்லர் உலகில் பலம்வாய்ந்த தலைவராக காணப்பட்ட போதிலும் அவரின் தோல்விக்கான காரணம் அவரின் கொள்கையில் காணப்பட்ட சர்வாதிகாரமும், நெகிழ்சித்தன்மையற்ற போக்குமேயாகும். ஆகவே நாளைய முன்னணி வீரர்களை உருவாக்கும் பணியில் தலைவர்கள் சிறந்த பண்புகள், ஆற்றல்கள் மற்றும் ஆளுமையையும் கொண்டு காணப்படுவது இன்றியமையாதது ஆகும்.

இலங்கையில் திண்மக்கழிவு பிரச்சினை


இலங்கையில் திண்மக் கழிவுப் பொருட்கள் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளன. இதற்கு இலங்கை வளர்முக நாடாக இருப்பதும் ஒரு முக்கிய காரணமாகும். ஏனெனில் வளர்முக நாடுகளில் நகராக்கலும் அது தொடர்பான சமூக, பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளும் தொடர்ந்தும் இடம்பெற்று வரும். அதன் போது திண்மக் கழிவுப் பொருட்கள் பெருக்கமடையும். அது இயல்பானது. ஆனால் இக்ககழிவுப் பொருட்களை முறையாகக் கையாண்டு தொடராக முகாமைத்துவம் செய்ய வேண்டும். அதனைச் செய்யத் தவறுவதன் விளைவாகவே திண்மக் கழிவுகள் பிரச்சினையாக விளங்குகின்றன.


அதேநேரம், பெரும்பாலான வளர்முக நாடுகளைப் போன்று இலங்கை மக்கள் மத்தியிலும் திண்மக் கழிவுப் பொருட்கள் தொடர்பில் போதிய தெளிவும் விழிப்புணர்வும் இல்லாத நிலைமை காணப்படுகின்றது. இவற்றின் விளைவாகவே இக்கழிவுப் பொருட்கள் கண்டகண்ட இடங்களில் கொட்டப்படுகின்றன. அவற்றினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கூட கவனம் செலுத்தப்படாதுள்ளது. இதனால் இக்கழிவுப் பொருட்கள் சேரும் இடங்களில் கட்டாக்காலி நாய்கள், எலிகள் , இலையான் மற்றும் நுண்ணுயிர்கள் என்பவற்றின் பெருக்கத்தை பரவலாக அவதானிக்க முடிகின்றது. இவற்றினூடாக ஆரோக்கிய ரீதியிலான பலவித பாதிப்புகளும் உருவாகின்றன.


மீதொடமுல்ல குப்பைமேடு 2017 ஏப்ரலில் சரிவுக்குள்ளாகி 20 க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு பலர் காயங்களுக்கும் உள்ளானதைத் தொடர்ந்து கழிவுப்பொருட்கள் பிரச்சினை நாட்டின் எல்லா மட்டங்களினதும் அவதானத்தைப் பெற்றது.கொழும்பில் சேர்கின்ற திண்மக் கழிவுப் பொருட்களை முதலில் வத்தளைக்கும் அதன் பின்னர் பிலியந்தலைக்கும் கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும் மக்கள் எதிர்ப்பு காரணமாக அத்திட்டங்கள் கைவிடப்பட்டன.


இவ்வாறான சூழலில் கடந்த ஆட்சிக் காலத்தில் திண்மக் கழிவுப் பொருட்கள் பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டிருந்த அறுவைக்காட்டிலுள்ள சிமெந்து மணல் அகழ்வுக் குழிகளை கொழும்பு கழிவுப்பொருட்களை கொண்டு நிரப்பும் திட்டம் 2017 பிற்பகுதியில் மீண்டும் தூசு தட்டி எடுக்கப்பட்டது.


ஆனால் கொழும்பில் சேருகின்ற கழிவுகள் சுமார் 170 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள அறுவைக்காட்டு பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கு பிரதேசவாசிகள் தொடர்ந்தும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இருப்பினும் அரசாங்கம் இத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வந்தது.


திண்மக் கழிவுப்பொருட்கள் என்பது தனியே கொழும்புக்கு மாத்திரமுரிய பிரச்சினை அல்ல. மாறாக நாட்டில் வளர்ச்சி பெற்று வரும் ஒவ்வொரு நகரமும் இப்பிரச்சினைக்கு முகம் கொடுத்த வண்ணமுள்ளன. அதனால் ஒரு இடத்தில் சேர்கின்ற திண்மக் கழிவுகளை மற்றொரு இடத்திற்கு எடுத்துச் சென்று கொட்டுவதன் ஊடாக இக்கழிவுப் பொருட்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடப் போவதுமில்லை.


மாறாக வீடுகளிலும் சுற்றாடல்களிலும் சேர்கின்ற இக்கழிவுப் பொருட்களை முறையாகக் கையாண்டு அவற்றை மீள்சுழற்சி செய்து முகாமைத்துவம் செய்யும் போதுதான் இப்பிரச்சினைக்கு நிலைபேறான தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம். அதனால் இக்கழிவுப் பொருட்கள் குறித்து- மக்கள் மத்தியில் போதிய தெளிவும் விளக்கமும் ஏற்படுத்தப்படுவது அவசியம்.


இவ்வாறு இலங்கை திண்மக் கழிவுப் பொருட்கள் பிரச்சினைக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் பிரித்தானியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட திண்மக் கழிவுப் பொருட்கள் அடங்கிய 98 கொள்கலன்களை இலங்கை சுங்க அதிகாரிகள் ஜுலை மாதம் 8ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் கண்டுபிடித்துள்ளனர். இது இலங்கை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொள்கலன்களில் பாவனைக்குதவாத அப்புறப்படுத்தப்பட்ட மெத்தைகள், காபட்கள், பிளாஸ்டிக்குகள், பொலித்தீன், குடம்பிகள்,இறந்த செடிகள், பறவைகளின் இறகுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுப் பொருட்கள் காணப்பட்டுள்ளன.


இக்கொள்கலன்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள சுங்கத் திணைக்களப் பேச்சாளர் லால் வீரக்கோன், 'இக்கொள்கலன்களில் பரிசோதிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதாகவும், புழுக்கள் நிறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.'இவற்றில் வைத்தியசாலைக் கழிவுகளும் காணப்படுகின்றன. மீள்சுழற்சிக்கு பயன்படுத்த முடியாத வெளிநாட்டு கழிவுப் ​ெபாருட்கள் இவ்வாறு நாட்டுக்குள் நீண்ட காலமாக இரகசியமான முறையில் கொண்டு வரப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.


இதன் ஊடாக வெளிநாடுகளிலிருந்து கழிவுப்பொருட்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படுகின்றதா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. ஏனெனில் இலங்கையின் சட்டத்திட்டங்களுக்கு அமைய வெளிநாடுகளிலிருந்து திண்மக் கழிவுப்பொருட்களை இந்நாட்டுக்குள் தருவிக்க முடியாது. 2013 ஜூலை 13ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியொன்றை முறையற்ற வகையில் பயன்படுத்தித்தான் பிரித்தானியாவிலிருந்து இக்கொள்கலன்கள் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளன.


முதலீட்டுச் சபையின் கீழுள்ள நிறுவனமொன்றில் மீள்சுழற்சி செய்வதற்காக இக்கழிவுப்பொருட்கள் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும் அவை மீள்சுழற்சி செய்யப்படவில்லை என்பது ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இக்கழிவுப்பொருட்கள் அடங்கிய சகல கொள்கலன்களையும் பிரித்தானியாவுக்கே திருப்பி அனுப்புவதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ள அதேநேரம், இக்கொள்கலன்களை தருவித்த உள்நாட்டு நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட உள்ளது.


இலங்கைக்கு உள்நாட்டு கழிவுப்பொருட்களே பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் சூழலில் வெளிநாட்டு கழிவுப்பொருட்களையும் இங்கு கொண்டுவருவதால் இங்குள்ள திண்மக் கழிவுப் பொருட்கள் பிரச்சினை மென்மேலும் அதிகரிக்குமேயொழிய குறையப் போவதில்லை. அத்தோடு புதுப்புது நோய்களும் பாதிப்புகளும் தோற்றம் பெறவே செய்யும்.


ஆகவே உள்நாட்டு திண்மக் கழிவுப் பொருட்கள் எவரையும் பாதிக்காத வகையில் அவற்றை முறையாகக் கையாள வேண்டும்.வெளிநாட்டு கழிவுப்பொருட்கள் எந்தவகையிலும் நாட்டுக்குள் வராத வகையில் கட்டுப்படுத்தவும் வேண்டும்.

மனிதரைக் கொல்லும் புகையிலை



இலங்கையில் புகைபிடிப்பதனால், மதுபாவனையால் தினமும் சுமார் 60 பேர் மரணமடைகின்றனர். வருடமொன்றில் இதனால் மரணிப்போரின் எண்ணிக்கை சராசரியாக 20,000 ஆகும். சர்வதேச ரீதியில் வருடாந்தம் சுமார் 60 இலட்சம் பேர் புகைபிடித்தலினால் உயிரிழக்கின்றனர். மேலும் புகைத்தல் காரணமின்றி, ஆனால் புகைபிடிப்பவர்களை சூழவுள்ள இரண்டாம் நிலை புகைத்தல் காரணமாக வருடமொன்றிற்கு 06 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.


அமெரிக்காவில் கி.மு காலப்பகுதியிலேயே புகையிலை பயிரிட ஆரம்பிக்கப்பட்டது. அமெரிக்கர்கள் காயங்களை சுத்தமாக்கும் தொற்றுநீக்கியதாகவும் வலி நிவாரணியாகவும் புகையிலையைப் பயன்படுத்தினர். வட அமெரிக்காவில் பணம் உழைக்கும் பயிராக புகையிலை இருந்துள்ளது.


1847 ஆம் ஆண்டு பிலிப் மொரிஸ் என்பவரே முதன்முதலாக புகையிலையைப் பயன்படுத்தி சிகரெட்டினைத் தயாரிக்கும் நிறுவனத்தை ஆரம்பித்திருந்தார். எனினும் சிகரெட் பயன்பாடு என்பது ஆரம்ப காலங்களில் இராணுவ வீரர்களிடமும் பாதுகாப்புப் படையினரிடமே காணப்பட்டது.


1953 களில் சிகரட், புகையிலை பாவனையால் புற்றுநோய் ஏற்படுகின்றது என டாக்டர் எமல் எல் வைன்டஸ் கண்டுபிடித்தார். இதனைத் தொடர்ந்து 1964 களில் அமெரிக்க அரசு புகைபிடிப்பதால் சுகாதாரத்திற்கு கேடு என்னும் நோக்கில் சட்டம் உருவாக்கியது.


மனிதனுக்கு மரணத்தைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாம் நிலையிலுள்ளது. இதனாலேயே புகையிலை பாவிப்பு தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமாக உலக சுகாதார அமைப்பு 1987 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதியை உலக புகையிலை எதிர்ப்புத் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 31 ஆம் திகதியை உலக புகையிலை எதிர்ப்புத் தினமாக ஒவ்வொரு கருப்பொருளை மையமாகக் கொண்டு விழிப்புணர்வு நாளாக அனுஷ்டித்து வருகின்றன.


புகைத்தல் புகை பிடிப்பவரை விட அச்சூழலில் இருக்கும் ஏனையவர்களையும் அதிகளவு பாதிக்கச் செய்கின்றது. புகைப்பவர்கள் தமது ஆயுட் காலம் முடிவதற்கு முன்பே தமது உயிரினை அழித்துக் கொள்கின்றனர். இதேவேளை தன் உயிரை அழிப்பதற்கே இந்த உலகில் அனுமதி இல்லாத போது தன் சுயநலத்துக்காக அடுத்தவர் உயிர்களின் அழிவுக்கு மற்றவர்கள் காரணமாக இருப்பதை எவ்வாறு அனுமதிக்க முடியும்?


புகைத்தல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு உலகில் நிமிடத்திற்கு 6 பேர் மரணிப்பதாக சர்வதேச சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.


20ம் நூற்றாண்டில் 100 மில்லியன் பேரும் 21ம் நூற்றாண்டில் இதுவரை 1 பில்லியன் பேரும் புகைத்தல் தொடர்பான நோய்களால் இறந்துள்ளனர் எனவும் ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. இது தொடருமானால் 2030ம் ஆண்டு காலப்பகுதியில் 8 மில்லியன் பேர் வரை வருடாந்தம் உலகில் மரணமடையலாம் என எதிர்வு கூறப்படுகிறது.


புகைக்கும் போது வெளிவரும் புகையில் 400 இற்கும் அதிகமான நச்சு இரசாயனப் பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றில் 50 வீதமானவை சுவாசப் பற்றுநோயினை ஏற்படுத்துபவையாகவுள்ளன. அத்துடன் இப்புகையை சுவாசிக்கும் சிறு குழந்தைகளின் எண்ணங்களில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுத்தப்படுகின்றன என அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகம் மற்றும் நைட்டிங் ​ெகாம் பல்கலைக்கழகங்களின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.


புகையை சுவாசிப்பதால் இதயம், நுரையீரல் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்ற அதேவேளை நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, உடல் உறுப்புகளில் பாதிப்பு, பல், உதடுகளின் நிறம் மாறுதல், இருமல் என புதுப்புது நோய்கள் புகைப்பவர்களின் உடலினை ஆக்கிரமித்து கொள்கின்றன. இதனால் புகைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது வாழ்நாளினை வைத்தியசாலைகளிலும் மருந்துகளுடனும் கழிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர்.


புகையினை உள் இழுக்கும் போது புகையிலுள்ள நிக்கோர்டின் என்னும் இரசாயனப் பொருள் மூளையினைச் சென்றடைகின்றது. ஒவ்வொரு முறையும் இழுக்கும் போதும் அந்த இரசாயனப் பொருள் மூளைக்கு செல்கின்றது. அத்துடன் இந்த இரசாயன நச்சுப் பொருளுடன் 700 வகையான வேறு இரசாயனக் கூட்டுப் பொருட்களும் செல்கின்றன.


மூளையின் மனநிலை மாற்றுக் கலங்களுக்கு நிக்கோர்டின் உட்பட இரசாயனக் கூட்டுப்பொருட்கள் செல்வதால் புகைபிடிப்பவர்களுக்கு ஒரு வகை மாயை தோற்றுவிக்கப்படுகின்றது. சில மனஅழுத்தங்களுக்கு உள்ளாகியிருப்பவர்கள் இந்த மாயையை ஒரு சிறந்த தீர்வாக எண்ணுகின்றனர். எனவே புகைபிடித்தலை ஒரு பழக்கமாக ஏற்றுக்கொள்ள முனைகின்றனர்.


நாடுகளைப் பொறுத்தவரை அநேகமான ஆண்கள் வீடுகளிலோ, அலுவலகங்களிலோ அல்லது பொது இடங்களிலோ ஏற்படும் பிரச்சினைகளுக்கும் அதனால் ஏற்படும் மனஅழுத்தங்களுக்கும் தீர்வாகவே புகைபிடிப்பதாகக் காரணம் சொல்வார்கள். எந்தவொரு பிரச்சினைகளையும் பேசியோ, ஆராய்ந்தோ, சிந்தித்தோ முடிவெடுக்காது புகைபிடித்தலைக் காரணம் சொல்வது ம​ைடமையாகும்.


இலங்கையிலேயே புகைபிடிப்பதற்காக பல காரணங்களை சொல்கின்றனர். மகிழ்ச்சிக்காகவென 22 வீதமானோரும் நண்பர்களுடனும் பொழுது போக்கவென 8.2 வீதமானோரும் புகைப்பழக்கத்திலிருந்து விடுபட முடியாத காரணத்தினால் 17 வீதமானோரும் தனிமையைப் போக்க 10.5 வீதமானோரும் பரீட்சித்துப் பார்க்கவென 8.7 வீதமானோரும் நண்பர்களின் அழுத்தங்களுக்காக 10 வீதமானோரும் பிரச்சினைகளுக்காக 15 வீதமானோரும் தாங்கள் புகைபிடிப்பதற்கான காரணமாகச் சொல்கின்றனர்.


அத்தியாவசியப் பொருட்கள், எரிபொருட்களின் விலையேற்றத்தால் திணறுகின்ற பொதுமக்கள் சிகரெட், சுருட்டு, மது போன்றவற்றின் விலையினை எத்தனை சதவீதத்தினாலும் அரசு உயர்த்தினாலும் எந்தவித ஆர்ப்பாட்டமும் செய்யாது அதிக பணம் கொடுத்த வாங்கி உபயோகிக்கின்றனர். எனவேதான் அரசு எந்தவித அச்சமோ, தயக்கமோ இன்றி அடிக்கடி இத்தகைய பொருட்களின் விலையினை அதிகரித்து வருகின்றது. இந்த விலையேற்றத்தால் குடும்பப் பெண்களும் குழந்தைகளும் உறவினர்களுமே பாதிக்கப்படுகின்றனர்.


200 குடும்பங்கள் சிகரெட் வாங்க மாதாந்தம் செலவு செய்யும் தொகை 5 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவாகும். ஒருநாளைக்கு 4101 மில்லியன் சிகரெட்டுகள் விற்கப்படுகின்றன.


இலங்கை மட்டுமல்லாது உலக நாடுகள் பல சிகரெட் விற்பனை மூலமே அதிகளவு வருமான வரியினை ஈட்டுகின்றன. இலங்கை அரசு சிகரெட் மூலம் 12 வீத வருமானத்தினைப் பெற்று வருகின்றது. புகைபிடிப்பதற்காக 5800 கோடி ரூபாவினை வருடமொன்றுக்கு மக்கள் செலவிடுகின்றனர்.


அதேவேளை புகை தொடர்பான நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க சுகாதார அமைச்சு 22 வீதம் செலவிடுகின்றது. புகைபிடிப்பவர்களில் 60 பேர் உயிரிழக்கின்ற அதேவேளை 60 பேர் புதிதாக புகைபிடிக்கப் பழகுகின்றனர்.


புகைபிடித்தலை ஊக்குவிக்கும் பிரித்தானியா, அமெரிக்கா புகையிலை கம்பனிகள் கோடி கோடியாக அமைதியாக இருந்து கொண்டு இலாபம் உழைக்கின்றன. ஆனால்,இவற்றினை உணராத வறிய, சாதாரண குடும்பத்தவர்கள் அற்ப மகிழ்ச்சிக்காக அவர்களுடைய உடலையும் கெடுத்து குடும்ப மகிழ்ச்சியையும் சீரழித்து பணத்தினையும் விரயம் செய்து கொண்டிருக்கின்றனர்.


2010 ஆம் ஆண்டு வடகிழக்கில் மட்டும் 5.1 பில்லியன் ரூபாவை அரசு புகையிலைப் பொருட்கள் மூலமாக வருமானமாகப் பெற்றுள்ளது.

வறட்சி




வறட்சி என்பது ஓர் இடத்தில் ஒரு பருவத்தில் பெய்யும் சராசரி மழை அளவானது குறையும் போது ஏற்படுகிறது. இது மாதக்கணக்கிலோ, வருடக் கணக்கிலோ நீடிக்கலாம்.


வறட்சியை நீக்குவதற்கு தேவையான மழைப் பொழிவு ஒன்றே தீர்வு என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் வறட்சியை வெல்லலாம். வறட்சியின் காரணமாக நாட்டின் பயிர்செய்கை, பொருளாதாரம், மக்களின் வாழ்க்கை முறை, சுற்றுப்புற சூழ்நிலை ஆகியவை பெரிதும் பாதிக்கப்படுகின்றன.


சிலி நாட்டில் உள்ள அடகாமா பாலைவனத்தில் 400 வருடங்களாக நீடித்த வறட்சி ஏற்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.


வறட்சியை அதன் பாதிப்பு மற்றும் கால அளவினைப் பொறுத்து நான்காகப் பிரிக்கலாம். அவை


1. வானிலை சார் வறட்சி


2. விவசாய வறட்சி


3. நீரியியல் சார் வறட்சி


4. சமூக பொருளாதார வறட்சி ஆகும்.


வழக்கமான மழைக் காலத்தில் பெய்யும் மழை அளவானது, சராசரி மழை அளவை விடக்குறையும் போது வானிலை சார் வறட்சி ஏற்படுகிறது. இதுவே மற்ற வறட்சிகளுக்கும் முக்கிய காரணியாகும்.


விவசாய வறட்சியில் பயிர் வளர்ச்சி குறைந்துவிடும். அதாவது மண்ணிலுள்ள நீரின் அளவு குறைந்து பயிர் பாதிப்படைந்து விவசாய உற்பத்தி குறைந்து விடும்.


மழையின் அளவானது குறைந்து விடுவதால், வறட்சியான கால நிலை தொடர்ந்து ஆறுகள், குளங்கள், ஓடைகள், ஏரிகள் முதலிய நீர்நிலைகள் வற்றிப் போவது நீரியியல் சார் வறட்சி ஆகும்.


தொடர்ந்த வறட்சியால் உற்பத்தி பாதிக்கப்பட்டு பொருளாதார பின்னடைவு ஏற்படுதலே சமூக பொருளாதார வறட்சி ஆகும்.


வறட்சியின் விளைவால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. விவசாயம் குறைவதால் பஞ்சம் ஏற்படும். இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம் பெயர்வது ஏற்படும்.


வறட்சியின் காரணமாக வெப்பநிலை அதிகரித்து உயிரினங்களுக்கு வெப்பத்தினால் ஏற்படும் நோய்கள் உண்டாகும். நீர் மற்றும் நிலவாழ் விலங்குகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உயிர் சூழ்நிலையில் மாற்றங்கள் உருவாகும்.


குறைந்த மழைப்பொழிவினால் நீர்மின் உற்பத்தி பாதிக்கப்படும். வறட்சியினால் தொழிற் உற்பத்தி பாதிக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும். உணவு மற்றும் தண்ணீருக்குச் சண்டையிடும் சூழ்நிலை உருவாகும். மழை குறைவதால் மண்வளம் குறையும்.


2050ஆம் ஆண்டினை நெருங்கும் போது வறட்சியின் பாதிப்பால் மட்டுமே தெற்காசிய நாடுகளின் விளைச்சல் 30% வரை பாதிக்கப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது

.

இலங்கையில் 2005 ஆம் ஆண்டின்  13ம் இலக்க அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின்படி அடையாளம்  காணப்பட்ட 21அனர்த்தங்களுள் வறட்சியும்ஒன்றாகும்.


வறட்சிக்கான காரணங்கள்


மழை பொய்த்துப் போவது, நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி காலியாக்குவது, நீர்த்தேக்கங்களில் நீரின்மை, தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்களை பயிர் செய்வது போன்றவையே  வறட்சி ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாகும்.


இவைமட்டுமின்றி, நீர்ப்பிடிப்புத் தன்மை குறைந்த மண் வகைகளும் வறட்சியை அதிகரிக்கின்றன. . பல மாவட்டங்களில் பரவலாகக் காணப்படும் செம்மண் நிலங்களின் நீர்ப்பிடிப்புத் திறனும் குறைவுதான். இப்படியாக மண்வகையும் வறட்சிக்கு முக்கிய காரணமாகும்.


வறட்சியை வெல்வது எப்படி?


வறட்சியால் நமது நாடு அடிக்கடி பாதிக்கப்படுவதால் அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து கொள்வது அவசியமாகிறது. வறட்சியானது ஓர் இயற்கை இன்னல் என்பதால் அதனை தடுக்க முடியாது. ஆனால் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் பாதிப்பிலிருந்து தப்பலாம்.


வறட்சியானது விவசாயிகளைத் தான் அதிகம் பாதிக்கும். எனவே வறட்சி பாதிப்பிலிருந்து காத்துக் கொள்வதற்கு சரியான வழி, வறட்சியைத் தாங்கும் பயிர்களை பயிரிடுவதுதான் செய்வது தான்.

வறட்சியைத் தாங்கும் நெல் ரகங்களைத் தேர்வு செய்து பயிர் செய்யலாம்.


நீர்நிலைகளை சீர்செய்து மழைநீரைத் தேக்குதல், நிலத்தடி நீரை செறிவூட்டுதல், பயிர் சுழற்சி முறையில் விவசாயம் செய்தல், பயன்படுத்திய நீரினை மறு சுழற்சி செய்து பயன்படுத்துதல், உள்நாட்டில் உள்ள அதிக நீர்வளமுள்ள நதியினை நீர்வளம் குறைவாக உள்ள நதியுடன் இணைத்தல் வறட்சியைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் வறட்சியை வெல்லலாம்.

வறட்சியும் இலங்கையும்




எமது நாட்டில் மழை வீழ்ச்சி குறைவடைந் துள்ளதால் நாட்டிற்குத் தேவையான மழை கிடைக்கவில்லை. அத்துடன் நீர் நிலைகளின் நீர்மட்டமும் குறை ந்துள்ளது. வரண்ட காற்றும் வீசு வதனால் நாட்டின் தட்ப வெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன், வரட்சியான காலநிலையும் நிலவுகின்றது.


இலங்கையானது புவியியல் ரீதியாக மத்திய கோட்டிற்கு அண்மையிலும், வெப்பமான காலநிலை நிலவக்கூடிய பிரதேசத்திலும் அமைந்துள்ளது. அத்துடன் இலங்கையை அச்சுறுத்தும் அனர்த்தங்களில் ஒன்றாக வரட்சி மாறி வருகின்றது. காலநிலை மாற்றங்களும், மனித நடவடிக்கைகளும் இவ்வனர்த்தம் ஏற்படுவதற்கான காரணங்களாகும். இலங்கையில் நிலவும் இந்த வரட்சியான காலநிலையால் வரட்சி தொடர்பாக மக்களை விழிப்பணர்வூட்டுவது அத்தியவசியமாகின்றது.


இலங்கைக்கு மழை கிடைக்கின்ற பருவப் பெயர்ச்சி மழைக்காலங்களில் குறைந்த மழை வீழ்ச்சியின் காரணமாக தென்கிழக்கு, வட மத்திய, வடமேற்கு பிரதேசங்களிலே வரட்சி ஏற்பட காரணமாக இருக்கின்றது. வரட்சிக்கு வரை விலக்கணமாக ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக 15 தினங்களுக்கு மழை கிடைக்கவில்லையாயின் அங்கு வரட்சி ஏற்படுவதாக கருது கின்றனர். சில நாடுகள் நாட்களைக் கொண்டும், வாரங்களைக் கொண்டும், மாதங்களைக் கொண்டும், வருட ங்களைக் கொண்டும் வரட்சியை வரையறை செய்கின்றன.


பொதுவாக இலங்கையில் பிராந்திய வரட்சி  3-4 வருடங்களுக்கு ஒருமுறை ஏற்படு கின்றது. மிகவும் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வரட்சி 10 வருடங்களுக்கு ஒருமுறை ஏற்படு கின்றது. வரட்சி ஏற்படுவதற்கு பிரதான காரணங்களாக குறைந்த மழைவீழ்ச்சி, காடழித்தல், சட்டத்திற்கு முரணான சூழலுக்குப் பொருந்தாத நிலப் பயன்படுத்துகை, திட்டமிடப் படாத பயிர்ச் செய்கைகள் என்பன காரணமாக அமைகின்றன.


வரட்சியானது பொருளாதாரம், சமூகம் சூழல் என்பவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.


பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புக்களாக விவசாய பயிர்கள் இறத்தல், அறுவடை குறைவடைதல், பயிர்ச் செய்கைக்கான நீரின் அளவு குறைதல், கைத்தொழில், சுற்றுலா நீர்மின் உற்பத்தி குறைதல், நிதி என்பவற்றில் தாக்கத்தை ஏற்படுத்து கின்றது.


சமூக பாதிப்புக்களாக மனஅழுத்தம், சத்தான உணவு குறைதல், மக்கள் உணவிலிருந்து பாதுகாப்பு குறைதல், கலாசார விழுமியங்கள் என்பவற்றில் வரட்சியின் தாக்கம் ஊடுருவுகின்றது. சூழலில் ஏற்படக்கூடிய பாதிப்புகளாக விலங்குகள், தாவரங்கள், மரம், செடி, கொடி இறத்தல், ஆறு, குளங்கள் வரண்டு போதல் மற்றும் மாசடைதல், குடிநீரின் அளவு குறைவடைவதோடு, நிலக்கீழ் நீர் மாசடைதல் அதன் தரம் குறைதல் போன்ற பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.


வரட்சி ஏற்படும்போது வழமையாக விவசாயத்துறையே முதலில் அதிகம் பாதிக்கப்படுகின்றது. ஏனெனில் பயிர்கள் மண் பற்றியுள்ள நீரிலேயே தங்கியுள்ளது. இது வரட்சியின் காலம் அதிகரிக்கும் போது மண்ணின் ஈரத்தன்மை குறைந்து கொண்டு செல்லும். மேலும் அதிகரிக்கும்போது அது நிலக்கீழ் நீரிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.


அதுமட்டுமல்லாது இலங்கையானது தனக்கு தேவையான மின்சக்தியில் 75% நீரை பயன்படுத்தியே உற்பத்தி செய்கின்றது. இதனால் நாட்டின் மின்சாரத் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்து கொள்வதற்கு முடியாமல் போவதுடன் பெரும் சிரமத்திற்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. அத்துடன் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான செலவும் அதிகரிக்கின்றது.


வரட்சி நிலவும் காலப் பகுதியில் விவசாய உற்பத்திகள் குறைவடைவது டன், உணவுப் பொருட்களின் விலையும் அப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கான செலவின மும் அதிகரிக்கும்.


இலங்கையில் மிகப் பெரிய அளவில் வரட்சி ஏற்பட்ட காலங்களாக 1935-1937,1947-1949, 1953-1956, 1974-1977, 1982, 1983, 1987,1989,2001,2004 ஆகிய ஆண்டுகளைக் குறிப்பிடலாம். இவ்வாண்டுகளில் 2001 ஆம் ஆண்டிலேயே மிகப் பெரிய வரட்சி அம்பாந்தோட்டை, மொனராகல, குருநாகல், புத்தளம், இரத்தினபுரி, பதுளை, அம்பாறை ஆகிய ஏழு மாவட்டங்களில் ஏற்பட்டது. 2001ஆம் மற்றும் 2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட வரட்சியினால் அதிகளவான மக்களும் பயிர்களும் பாதிப்படைந்துள்ளன.


2001 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வரட்சியினால் 370, 541 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதுடன் 104,399 ஹெக்டேயர் பயிர்களும் பாதிப்படைந்தன. இதன்போது நிவாரண சேவைகளுக்கும் ஏனைய நடவடிக்கைகளுக்குமாக இலங்கை ரூபா 381,415,000 செலவிடப்பட்டது. இதேபோல் 2004 ஆம் ஆண்டு வரட்சியினால் 2,198,521 மக்கள் பாதிக்கப்பட்டதுடன் 47, 105 ஹெக்டேயர் பயிர் நிலங்களும் பாதிப்படைந்தன.


வரட்சியினால் குறைந்த அளவில் பாதிப்படையக் கூடிய மாவட்டங்களாக கம்பஹா, கேகாலை, கொழும்பு, களுத்துறை, காலி, முல்லைத்தீவு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களை குறிப்பிடலாம்.


இலங்கையிலே இரண்டு பருவப் பெயர்ச்சி மழைக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் பெருமளவு வரட்சியின் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இரண்டு பருவப் பெயர்ச்சி மழைக்கு இடைப்பட்ட காலங்களில் ஜனவரி-மார்ச், ஓகஸ்ட் - செப்டெம்பர் ஆகிய காலங்களிலேயே அதிகளவான வரட்சி ஏற்பட்டுள்ளது.


வரட்சியானது ஏனைய அனர்த் தங்களிலிருந்து வித்தியாசமாக இருப்பதுடன் நீண்ட காலத்துக்கு பரந்த அளவில் மக்களை துன்புறுத் துவதுடன் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தி யிருக்கின்றது. வரட்சியானது மெதுவாக ஆரம்பித்து பின்னர் படிப்படியாக வளர்ச்சியடைந்து மாதம் அல்லது வருட கணக்கில் நீடித்து பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. வரட்சி ஏற்படுவதை முன்கூட்டியே அறிவது அல்லது அனுமானிப்பது கடினமானதாகும்.


வரட்சியினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்தல், ஆய்வுகளை மேற்கொள்ளல் போன்ற செயற்பாடுகள் இலங்கை போன்ற நாடுகளுக்கு இன்றியமையாததாக இருக்கின்றது.


வரட்சியை பல முறைகளில் பிரிக்கக் கூடியதாக இருந்தாலும் இலங்கைக்கு பொருந்தக் கூடியதாக மூன்று வகைகளாக பிரிக்கலாம்.


01. வானிலை வரட்சி: குறித்த பிரதேசத்திலே சாதாரணமாக கிடைக்கக்கூடிய மழை வீழ்ச்சியை பெறுகின்ற காலம்.


02. நீரியல் வரட்சி : திட்டமிட்ட முறைப்படி நீரை ரிபிசீ8 முடியாத காலம். இந்த காலத்திலே நிலக்கீழ் நீர் ஓட்டமானது சாதாரண நீர் மட்டத்தின் அளவை விட கீழ்மட்டத்தில் காணப்படும்.


03. விவசாய வரட்சி : மண்ணின் ஈரத்தன்மை அற்றுப் போவதால் பயிர்கள் இறத்தல்.


வரட்சியினால் ஏற்படும் சேதங்களை குறைக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்

 1. வரட்சி ஏற்பட்டதன் பின் வரட்சி பற்றிய ஆய்வுகளில் ஈடுபடல்.

 2. மழைவீழ்ச்சி பற்றிய தொடர்ச்சியான அவதானிப்பு மூலம் அக்காலத்துக்குரிய நீர்த்தேவைகள் பற்றித் தேடுதல். 

3. நீர் வளத்தை பாதுகாப்பதற்கான செயற்பாடுகளை பின்பற்றுதல். 

4. மழைநீர் சேகரிப்பு தாங்கி அறிமுகம் செய்தல். 

5. நிலப்பயன்பாட்டு முறையைத் திட்டமிடுதல். 

6. அரச, அரச சார்பற்று, தனியார்துறை மூலம் நிவாரண சேவைகளை ஒழுங்கு செய்தல். 

7. நீர் வளங்களை அதிகரித்தல்.

 8. மக்களை அறிவூட்டுதல். 

9. ஊட கங்களை தொடர்புபடுத்தல். 

10. விவசாய கிணறுகளை அமைத்தல் 

11. நீரை வீணாக்காது சிக்கனமாகப் பயன்படுத்தல். 

12. ஆறுகள், குளங்கள், நீர்நிலைகளை அசுத்தமாக்காது இருத்தல். 

13. மரங்களை நடுதல். 

14. நீரேந்து பிரதேசங்களை பாது காப்பதற்கு காடுகளை அழிக்காதிருத்தல். 

15. குழாய்க்கிணறுகளை பயன்படுத்தல் 

16. குறைவான நீரைப் பயன்படுத்தக் கூடிய பயிர்களை நடல்.

மழை தொடர்ந்து 15 நாட்களுக்கு மேல் பெய்யாதிருத்தல், வெப்பம் அதிகரித்தல், பிரகாசமான சூரிய வெளிச்சம், சேற்றுப் பிரதேசங்களில் வெடிப்புகள் ஏற்படல், நிலக்கீழ் நீர்மட்டம் குறைவடைதல், மரம், செடி, கொடிகள் வாடுதல்

கட்டுரை எழுதுவது எப்படி?




கட்டுரைக்கு ஒரு கச்சிதமான வடிவம் தேவை. பக்க அளவு முக்கியம். ஆய்வுரை முற்றிலும் வேறுபட்டது. முக்கியமான வேறுபாடு இதுதான். கட்டுரைக்கு ஒரே ஒரு கோணம்தான் உண்டு. ஆய்வுரை பலகோணங்களில் ஒரு கருத்தை முன்வைப்பது


கட்டுரை ஏற்கனவே ஆராய்ந்து தெளிந்தவற்றை எடுத்துக்கூறும் தன்மை கொண்டது.ஆய்வுரை ஒவ்வொன்றாக எடுத்து ஆராய்ந்து பார்க்கும் தன்மை கொண்டது. கட்டுரையில் விரிவான விளக்கங்களோ விவாதங்களோ நிகழ்த்த முடியாது. அதற்குரியது ஆய்வுரையே.


நவீனக் கட்டுரை வடிவத்தால் சிறுகதையைப்போன்றது.


அ பளீரென்ற தொடக்கம்


ஆ. பாம்பு ஊர்வது போல சரசரவென்ற போக்கு


இ. கவனத்தில் ஆழப்பதியும் ‘முத்தாய்ப்பு’ கொண்ட முடிவு


— என சிறுகதைக்குரிய மூன்று அடிப்படை இயல்புகளும் கட்டுரைக்கும் தேவை.


சிறந்தகட்டுரையின் அடிபப்டைக் குணம் இதுவே– அது வளர்த்தலோ திசை திரும்பலோ இல்லாமல் இருக்கும். ‘கச்சிதமான கட்டுரை’ என்ற வரி ‘சிறந்த கட்டுரை’ என்பதற்கு சமமானதே.


நல்ல கட்டுரை எழுதுவதன் சில நடைமுறை விதிகள் இவை.


1. கட்டுரை எதைப்பற்றியது என ஒரே ஒருவரியில் சொல்ல உங்களால் முடியவேண்டும். அதுவே அதன் மையம். அதாவது ‘கரு’


2. கட்டுரையில் முதல்வரியிலேயே அந்த கரு நேரடியாக வெளிப்படுவது நல்லது. அல்லது அந்தக் கருவை நோக்கி நேரடியாகச் செல்லும் ஒரு வழி அந்த முதல்வரியில் திறந்திருக்க வேண்டும்


3. அந்த மையக்கருவை நிறுவக்கூடிய விவாதங்களாக தொடர்ந்துவரும் வரிகள் வெளிபப்டவேண்டும். அதற்கான ஆதாரங்கள், அதை நிறுவும் நிகழ்ச்சிகள், அனுபவங்கள், அதை மறுக்கும் வாதங்களுக்கான பதில்கள் ஆகியவை.


4 .கட்டுரையில் பேசப்படும் கருத்துக்கு ஆதாரம் காட்டும்போது வலிமையான ஒரு ஆதாரம் கொடுக்கப்பட்டால் போதும். ஒன்றுக்குமேல் ஆதாரங்களைக் கொடுக்கவேண்டிய தேவை இல்லை. அது கட்டுரையை சோர்வுற்றதாக ஆக்கும். பெரும்பாலும் ஒரு உதாரணத்தை நாம் சொல்லியதுமே அதேபோன்ற பல உதாரணங்கள் நம் நினைவுக்கு வரும். அவற்றை வரிசையாக சொல்லிச்செல்லும் உற்சாகம் ஏற்படும்.அது கட்டுப்படுத்தப்படவேண்டும்.


5. வரிசையாக ஆதாரங்கள் கொடுத்து ஒன்றை நிறுவுவதாக இருந்தால் கட்டுரையின் நோக்கமே அதுவாக இருக்கவேண்டும், வேறு விஷயமே கட்டுரையில் இருக்கக் கூடாது.


6 .கட்டுரையில் ஒரு விஷயம் குறிப்பிடப்படும்போது அக்கட்டுரையின் விவாதத்துக்கு என்ன தேவையோ அதைமட்டுமே அவ்விஷயத்தில் இருந்து எடுத்து முன்வைக்கவேண்டும். சுவாரஸியமாக இருக்கிறதே என தொடர்பில்லாதனவற்றை சொல்ல முயலக்கூடாது. உதாரணம், முக அறுவை சிகிழ்ச்சை பற்றிய ஒரு கட்டுரையில் மைக்கேல் ஜாக்ஸனைப்பற்றி சொல்லவரும்போது அவரது சமீபத்திய இசைத்தட்டின் விற்பனை எத்தனை லட்சம் என்ற தகவல் தேவையில்லை


7 .கட்டுரை ஒரே உடல் கொண்டதாக இருக்க வேண்டும். இரு தனி விஷயங்கள் இணைக்கப்பட்டதுபோல தோன்றவே கூடாது. ஒரு விஷயத்துக்கு ஒரு கட்டுரை என்பதே நல்லது


8 .கட்டுரையில் முன்னுரை ,அல்லது பீடிகை இருந்தது என்றால் அது அக்கட்டுரையில் அளவில் எட்டில் ஒருபகுதிக்கும் குறைவாகவே இருக்கவேண்டும். எவ்வளவு சுருக்கமான பீடிகை இருக்கிறதோ அந்த அளவுக்கு நல்லது. பீடிகை கண்டிப்பாக மையக்கருவை சுட்டவேண்டும்– நுட்பமாகவேனும்.


9. மையக்கருவிலிருந்து விலகி சில தகவல்களை அல்லது கருத்துக்களைச் சொல்வதாக இருந்தால் அவற்றை இடைவெட்டுகளாக ஒருவரியில் அல்லது இரண்டு வரியில் சொல்லிச் செல்வது நல்லது. அடைப்புக் குறிக்குள் சொல்வது, — போட்டுச் சொல்வது சிறப்பு.


10.கட்டுரைக்கு தகவல்கள் எப்போதும் அவசியம். ஆனால் எத்தனை முக்கியமான தகவலாக இருந்தாலும் அது கட்டுரையை வரட்சியானதாக ஆக்கும். ஆகவே தகவல்களை எப்படியெல்லாம் சுவாரசியமாக ஆக்க முடியுமோ அப்படியெல்லாம் சுவாரஸியமாக ஆக்கவேண்டும். தகவல்களை குட்டிநிகழ்ச்சிகளாக ஆக்கலாம். ஒன்றுடன் ஒன்று பிணைக்கலாம். சொல்லும் மொழியால் வித்தியாசப்படுத்திக் காட்டலாம். பட்டியல்கள் ஒரு கட்டுரைக்கு எப்போதுமே பெரும் பாரம்


11. ஒரு கட்டுரை முழுக்க ஒரே வகை மொழி இருக்கவேண்டும். விளையாட்டுத்தனமான ஒரு கட்டுரை திடீரென்று கோபம் கொள்வ§தோ சட்டென்று தீவிரமடைவதோ கூடாது. அடிப்படையில் இது என்ன மனநிலை [mood] உள்ள கட்டுரை என்ற தெளிவு அக்கட்டுரையில் இருக்கவேண்டும். நகைச்சுவையாக ஆரம்பித்து மெல்ல தீவிரமடையும் கட்டுரைகளும் தீவிரமாக ஆரம்பித்து வேடிக்கையாக ஆகும் கட்டுரைகளும் உண்டு. அப்போது அந்த மாறுதல் சீராக ஆசிரியரால் கொண்டு வரப்படவேண்டும். எது மைய உணர்ச்சியோ அதுவே பெரும்பாலான அளவுக்கு இருக்க வேண்டும். பாதிப்பாதி என்றெல்லாம் இருக்கக் கூடாது


12. மேற்கோள்களை முடிந்தவரை தவிர்ப்பதே கட்டுரைக்கு நல்லது. மேற்கோள் கொடுக்கும்போது வித்தியாசமாகவோ கவித்துவமாகவோ தீவிரமாகவோ வேடிக்கையாகவோ கூறப்பட்ட மேற்கோள்களை மட்டுமே ” … ” போட்டு அப்படியே கொடுக்க வேண்டும். அதாவது அந்த மேற்கோள் வாசகனை நின்று கவனிக்க வைப்பதாக இருக்க வேண்டும். எக்காரணத்தாலும் நீண்ட மேற்கோள்கள் ஒரு கட்டுரையில் வரக்கூடாது. ஒருபோதும் எல்லாருக்கும் தெரிந்த மேற்கோள்களை கொடுக்கக் கூடாது. பொதுவான சாதாரணமான கருத்துக்களை ஒரு முக்கிய பிரமுகர் சொல்லியிருந்ததை எடுத்துக்காட்டுவதானால் அக்கருத்துக்களை சுருக்கி நம் சொற்களில் கொடுப்பதே நல்லது.


13. கட்டுரையில் வழக்கமான வரிகளையும் வளர்த்தல் வரிகளையும் தேடிக் கண்டடைந்து வெட்டித்தள்ள வேண்டும். எழுதும்போது சரியாகச்ச் சொல்லிவிட்டோமா என்ற ஐயத்தில் நாம் மேலும் ஒருவரி சொல்ல உந்தபப்டுவோம். அதை கட்டுபப்டுத்த வேண்டும். ”இதை எப்படி சொல்வதென்று தெரியவில்லை, ஆனால் சொல்லித்தான் ஆகவேண்டும்’ போன்ற வரிகள் கூடவே கூடாது.


14. பிரபலமான சொற்றொடர்களையும் தேய்ந்த சொற்றொடர்களையும் [ஜார்கன், க்ளீஷே] முற்றிலும் தவிர்க்கவேண்டும். ‘திருடனைத் தேள்கொட்டியது போல’ போன்ற வரிகள் உதாரணம். ஆங்கிலத்தில் எழுதும்போது இது நிறையவே நமக்கு வரும். நமது ஆங்கிலக் கல்வி அத்தகையது. ‘ஸ்டெப்பிங் இன் அதர்ஸ் ஷிஸ்’ என்றெல்லாம்…


15. ஒரு கட்டுரை ஒரே போக்காக போவது நல்லது. நடுவே உடைபட வேண்டுமென்றால் அதிகபட்சம் ஒரு உடைவு. அதற்குமேல் போனால் அக்கட்டுரை சிதறியிருப்பதாகவே தோன்றும்

சார்க் பிராந்தியத்தில் வறுமை,பதற்றம்,தொழிலின்மையை போக்க பொருளாதார ரீதியில் ஒன்றிணைவது அவசியம்


உலகில் பல்­வேறு பிராந்­தி­யங்கள்   பொரு­ளா­தார வளர்ச்­சியில்   வலுப்பெற்று  பொரு­ளா­தார ரீதியில் ஒன்­றி­ணைந்து  பய­ணித்­துக் கொண்­டிருக்­கின்ற சூழலில் பல்­வேறு வகை­யான தனித்­துவ ஆற்றல்­களை கொண்­டுள்ள  தெற்­கா­சியப் பிராந்­தியம்  இன்னும் அர­சியல்  மற்றும் பாது­காப்பு  பிரச்­சி­னை­களில் சிக்கி  பொருளாதார நன்­மையை உறுப்பு நாடு­களின் மக்­க­ளுக்கு பெற்றுக்கொ­டுக்­காமல்  பய­ணிக்­கின்­றது. 


சார்க் பிராந்­தி­யத்தில் வரு­ட­மொன்­றுக்கு  81164  மில்­லியன்  டொலர் பெறு­ம­தி­யான  வர்த்­தக கொடுக்கல் வாங்­கல்­களை செய்வ­தற்­கான ஆற்றல் காணப்­ப­டு­கின்­ற­போ­திலும் ஐ.நா.வின்  அண்­மைய தர­வு­க­ளின்­படி வரு­ட­மொன்­றுக்கு 26806 மில்­லியன்  டொலர் பெறு­ம­தி­யான  வர்த்­தக நட­வ­டிக்­கை­களே  உறுப்பு நாடுகளுக்கிடையில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. 


இதன்­மூலம்  எந்­த­ளவு தூரம் தெற்­கா­சி­யா­வா­னது பிராந்­தியம் என்ற­வ­கையில்   பொரு­ளா­தார ரீதியில் பின்­ன­டைவில் சிக்கியிருக்கின்றது என்­பதை புரிந்­து­கொள்ள முடி­கின்­றது. 


தற்­போ­தைய உலக  நிலை­மை­களை எடுத்துப் பார்க்­கும்­போது பிராந்­திய ரீதியில் பொரு­ளா­தார  கூட்­டி­ணை­வுடன்  செயற்­ப­டு­வது பாரிய நன்­மை­களைத் தரு­வ­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது. இதற்கு பல உதா­ர­ணங்­களை முன்­வைக்­கலாம். அவ்­வாறு பல உதாரணங்கள் உலகில் இருக்­கின்­ற­போ­திலும்  தெற்­கா­சி­யாவில் அதனை சாத்­தி­யப்­ப­டுத்­து­வது கடி­ன­மா­கவே உள்­ளது. 


அந்­த­வ­கையில் கடந்த பெப்­ர­வரி மாதம்         அமெ­ரிக்­காவின்   அரிசோனா  பல்­க­லைக்­க­ழ­கத்தின் வோல்டர் க்ரோன்கிட் ஊடகவியல்  பாட­சா­லையின் டொனல்ட் டப்­ளியு ரெய்னோல்ட்ஸ் வர்த்­தக ஊட­க­வி­ய­லுக்­கான தேசிய நிலை­யத்தின் ஏற்­பாட்டில்   டுபாயில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­கான மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. இதில்  சார்க்   நாடு­களின் ஊட­க­வி­ய­லா­ளர்கள் கலந்துகொண்­ட­துடன் சார்க் பிராந்­தியம்  பொரு­ளா­தார ரீதியில்  ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வதன் மூலம் கிடைக்கும் நன்­மைகள் தொடர்பில்  ஆராய்ந்­தனர்.   இதன்போது பல விட­யங்கள்   வெளிக்­கொ­ண­ரப்­பட்­டன. 


தெற்­கா­சி­யா­வினால் ஏன் முடி­ய­வில்லை? 


பிராந்­திய ரீதியில் பொரு­ளா­தார கூட்­டி­ணை­வுடன்  செயற்படுவதானது   உறுப்பு நாடு­க­ளுக்கு பாரிய நன்­மை­களை கொடுப்­ப­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது.    விசே­ட­மாக ஐரோப்­பிய ஒன்­றியம் ஆசியான்இ  போன்ற   அமைப்­புக்கள் இன்று பொருளாதார ரீதியில் இணைந்து செயற்­ப­டு­வதன் மூல­மாக அதன்  உறுப்பு நாடு­க­ளுக்கு கிடைத்­துள்ள நன்­மைகள் தொடர்பில் அவதானம் செலுத்­தும்­போது சார்க் பிராந்­தியம் பொரு­ளா­தார ரீதியில் இணைந்து செயற்­ப­ட­வேண்­டி­யதன்  முக்­கி­யத்­து­வத்தை உணர முடி­கின்­றது. 


சார்க் அமைப்பு உரு­வாக்­கப்­பட்டு  35 வரு­டங்கள் கடந்துவிட்டபோ­திலும் இது­வரை  தெற்­கா­சிய பிராந்­திய அமைப்பினால் பொரு­ளா­தார ரீதியில் ஒருங்­கி­ணைந்து செயற்பட்டு  அதன் நன்­மை­களை பெற முடி­யாத சூழலே நிலவுகிறது. இதற்கு பல்­வேறு கார­ணங்கள் கூறப்­ப­டு­கின்­றன.   குறிப்­பாக இந்தப் பிராந்­தி­யத்தில் காணப்­ப­டு­கின்ற இந்­தியா இலங்கை பங்­க­ளாதேஷ்,மாலை­தீவு,பா­கிஸ்தான்,நேபாளம் பூட்டான், ஆப்­கா­னிஸ்தான் ஆகிய ஒவ்­வொரு நாடு­களும்  தனித்துவ­மான  ஒரு  பிரச்­சி­னை­க­ளுடன் உள்­ளன. 


 அதே­போன்று இந்­தி­யா­வுக்கும் பாகிஸ்­தா­னுக்­கு­மி­டையில் காணப்­ப­டு­கின்ற  நீண்­ட­கால முரண்­பாடும்  சார்க் பிராந்­தியம்     பொரு­ளா­தார ரீதியில் ஒன்­றி­ணை­வ­தற்கு பாரிய தடை­யாக உள்­ளது. 


 தெற்­கா­சி­யாவை வாட்டும் வறுமை 


உலகின் ஏனைய பிராந்­தி­யங்கள் பொரு­ளா­தார ரீதியில் ஒன்றிணைந்து செயற்­ப­டு­கின்­றதால் ஏற்­ப­டு­கின்ற நன்­மைகள் தொடர்பில்  சார்க் நாடு­களின் தலை­வர்கள்  உணர்ந்து செயற்படுவதற்கு முன்­வ­ர­வேண்டும்.    சார்க் நாடு­களைப் பொறுத்த­வ­ரையில் வறு­மையும் வேலை­யின்­மையும் தலைவிரித்தா­டிக்­கொண்டே இருக்­கின்­றன. வறு­மையை எடுத்து நோக்­கு­வோ­மானால் 54 வீத­மான வறுமை ஆப்­கா­னிஸ்­தானில் காணப்­ப­டு­கின்­றது. 


அதே­போன்று இந்­தியாஇ  மற்றும் பங்­க­ளாதேஷ்இ பாகிஸ்தான் ஆகிய நாடு­களில் 20 வீதத்­திற்கும் மேற்­பட்ட  வறுமை வீதம் காணப்­ப­டு­கின்­றது. எனவே இவற்றை  போக்­கு­வ­தற்கு   வெளிநாட்டு முத­லீ­டுகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும். அதேபோன்று பிராந்­தி­யத்­தி­லுள்ள   நாடு­க­ளுக்­கி­டை­யி­லான    வர்த்­தக உறவு அதி­க­ரிக்­கப்­ப­ட­வேண்டும். எனினும்  சார்க்பிராந்தியத்தைப்  பொறுத்­த­வ­ரையில் இதற்­கான  ஆற்றல் இருந்தும்   அர­சியல் தேவை இல்­லா­மையினால்  வெற்­றியை நோக்கி நகர முடி­யாமல் உள்­ளது.    


100 வருட பகையை மறந்த பிரான்ஸ் – ஜேர்­மன்


இன்று நாம் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் வளர்ச்­சியை எடுத்துநோக்கினால்  உல­கத்தில் காணப்­ப­டு­கின்ற  பொரு­ளா­தார ரீதியில் மிகப்  பல­மான ஒன்­றாக காணப்­ப­டு­கின்­றது. அதற்­காக ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­க­ளி­டையே முரண்­பா­டுகள் இல்லை என்று கூறி­விட முடி­யாது.  ஜேர்மன்இ பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கி­டையில் 100 வருட பகைமை காணப்­பட்­டது.  எனினும்   பொரு­ளா­தார ரீதியில்  ஒன்­றி­ணை­ய­வேண்­டிய தேவையை முன்­னி­றுத்தி அந்தப் பகை­மையை மறந்து அந்த இரண்டு நாடு­களும்  இணைந்து செயற்­ப­டு­கின்­றன.   ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் இணை­வ­தற்கு முன்னர் அயர்­லாந்து பொரு­ளா­தார ரீதியில் மிகவும் பின்­தங்­கிய நாடாக இருந்­தது. ஆனால் இன்று  அந்த நாடு பாரிய வளர்ச்­சியை அடைந்­தி­ருக்­கின்­றது.  இதற்கு பிராந்­தி­யத்தில் பொரு­ளா­தார ஒன்­றி­ணைவே பிரதானகாரணமாகும். எனவே மக்­க­ளுக்கு நன்­மை­யைப் பெற்றுக்கொ­டுக்­கக்­கூ­டிய   பொரு­ளா­தார வளர்ச்­சிக்­காக நாடுகள் ஏனைய புறக் கார­ணி­களை  புறந்­தள்­ளி­விட்டு  ஒன்­றி­ணைய வேண்டும் என்­பதே இன்­றைய தேவை­யாக காணப்­ப­டு­கின்­றது.  


இந்­தியா – பாகிஸ்தான் 


இந்த இடத்தில்  இந்­தி­யா­வுக்கும் பாகிஸ்­தா­னுக்­கு­மி­டை­யி­லான புரிந்­து­ணர்வே மிகவும் அவ­சி­ய­மா­கின்­றது. இந்த இரண்டு நாடுகளுக்குமிடையில் காணப்­ப­டு­கின்ற முரண்­பா­டு­களே  பிராந்தியத்தை வாட்டி வதைக்­கின்­றது.  இலங்­கையும் இந்­தி­யாவும்  சுதந்­திர வர்த்­தக  உடன்­ப­டிக்­கை   கைச்­சாத்­திட்­டதன் பின்னர்  பாரிய வளர்ச்சி கண்­டி­ருக்­கின்­றது.  2000ஆம்  ஆண்டு இந்த சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்கை அமு­லுக்கு வந்­தது.  அதன்­ பின்னர் இரண்டு நாடு­க­ளுக்குமிடை­யி­லான வர்த்­தக கொடுக்கல் வாங்­கல்கள் அதிகரித்­துள்­ளன. எனவே இவ்­வாறு பொரு­ளா­தார தடை­களை களைந்து  பிராந்­திய ரீதியில்  இணைந்து  செயற்­ப­டு­வ­தா­னது மிகவும் முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக காணப்­ப­டு­கின்­றது. 


சார்க் பிராந்­தி­யத்தின் மனி­த­வளம் 


விசே­ட­மாக சார்க் நாடு­க­ளுக்­கி­டையில்  மனி­த­வளம் மிக முக்கியமான பொக்­கி­ஷ­மாக காணப்­ப­டு­கின்­றது. சார்க் நாடு­களில்  பயிற்றுவிக்­கப்­பட்ட திற­மை­யான மனித வளம் காணப்­ப­டு­கின்­றது.  ஆனால் அவை இன்று மேற்கு நாடு­க­ளி­லேயே பயன்படுத்தப்படுகின்­றன. அதனை சார்க் நாடுகள் பயன்படுத்துவதற்கு முன்­வ­ர­வேண்டும்.  அதே­போன்று தொழில்நுட்ப   அறிவை  சார்க் நாடுகள் பகிர்ந்­து­கொள்­ள­ வேண்டும்.   சார்க் பிராந்­தி­யத்தில் சில நாடுகள் தொழில்நுட்ப அறிவில் முன்­னேற்­ற­ம­டைந்­துள்­ளன.  


சார்க் நாடு­களின்  தலை­வர்­களின் கவ­னத்­துக்கு 


இங்கு மிக முக்­கி­ய­மாக   சார்க் நாடு­களின் தலை­வர்கள்   சார்க் பிராந்­தியம் என்ற ரீதியில் பொரு­ளா­தார ரீதியில் ஒன்­றி­ணைந்து செல்­ல­வேண்­டி­யதன் அவ­சி­யத்தை உணர்ந்­து­கொள்­ள ­வேண்டும்.   உலக சனத்தொகையில் கால்­வா­சிப்பேர்  சார்க் பிராந்­தி­யத்தில் வாழ்­கின்­றனர். எனவே இங்கு காணப்­ப­டு­கின்ற  பொரு­ளா­தார சந்தை­வாய்ப்­புக்கள் தொடர்பில்  ஏனைய நாடுகள் கவனம் செலுத்த­வேண்டும்.  சார்க் நாடு­க­ளுக்­கி­டை­யி­லான முத­லீ­டு­களும் தலை­வர்­க­ளுக்­கி­டை­யி­லான அர்ப்­ப­ணிப்­பு­களும் இங்கு முக்கியமா­ன­தாக காணப்­ப­டு­கின்­றது. 


இந்­தியா  வாகன  உற்­பத்­தியில் முன்­னணி வகிக்­கின்­றது.  இலங்கை   இறப்பர்இ தேயிலைஇ ஆடை  உற்­பத்­தி­யிலும் மீன்­பி­டி­யிலும் முன்­னணி வகிக்­கின்­றது.  பாகிஸ்தான்   பாஸ்­மதி அரி­சியில் பிரபலமா­கி­யி­ருக்­கி­றது. பங்­க­ளாதேஷ் ஆடைக்­கைத்­தொ­ழிலில்  முன்­னேற்­ற­ம­டைந்­துள்­ளது. எனவே இந்த நாடுகள் அனைத்தும் ஒன்­றி­ணைந்து ஒரு  பொது­வான திட்­டத்தின் கீழ் செயற்­ப­டு­வது பாரிய பொரு­ளா­தார நன்­மை­களை  நாடு­க­ளுக்கு பெற்றுக்கொடுக்கும். 


எனவே பிராந்­தியம் என்ற ரீதியில் பொரு­ளா­தார ரீதியில் இணைந்து செயற்­ப­டும்­போது   பிராந்­தி­யத்தில் பின்­தங்­கிய நிலையில் காணப்ப­டு­கின்ற நாடு­களும் உயர் நன்­மையை அடையும். நாகேஷ் குமாரின் யோசனை 


இது தொடர்பில்  டுபாய் மாநாட்டில் உரை­யாற்­றிய ஐக்­கிய நாடகளின் ஆசிய பசுபிக் பொரு­ளா­தார சமூக விவ­கா­ரங்­க­ளுக்­கான பணிப்­பாளர் டாக்டர் நாகேஷ்குமார் ஒரு முக்­கிய விட­யத்தை குறிப்­பிட்டார்.  அதா­வது  சார்க் பிராந்­தி­யத்தில் அமைதி நிலவவேண்­டு­மாயின் அதற்கு காணப்­ப­டு­கின்ற ஒரே வழி  பிராந்தியம்  பொரு­ளா­தார ரீதியில் ஒன்­றி­ணை­வ­தாகும். பொருளாதார ரீதியில் ஒவ்­வொரு நாடு­களும் தங்­கி­யி­ருக்கும் பட்சத்தில் அங்கு அமை­திக்கு பங்கம் ஏற்­ப­டாது என்­பதே உண்­மை­யாகும்  என்ற  ஒரு யதார்த்­த­மான விட­யத்தை அவர் கூறினார். 


காரணம்  அமை­திக்கு பங்கம் ஏற்­படும்போது  பொரு­ளா­தார தேவையைக் கருத்தில் கொண்டு   நாடுகள் முரண்­பா­டு­களை  தவிர்க்கும் என்­பதே உண்­மை­யாகும்.  அதனால்  பிராந்­தி­யத்தில் நாடு­க­ளுக்கிடை­யி­லான பொரு­ளா­தார தங்­கி­யி­ருத்­தலும் ஒரு முக்கிய கார­ணி­யா­கவே உள்­ளது. 


டாக்டர் கணே­ஷ­மூர்த்தி 


இதே­வேளை இந்த விடயம் குறித்து கொழும்பு  பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் டாக்டர் கணேசமூர்த்தி  இவ்­வாறு கூறு­கிறார்.


பிராந்­திய ரீதியில் பொரு­ளா­தார ஒன்­றி­ணைவு ஏற்படவேண்டுமாயின் அது நான்கு கட்­டங்­களில் அமையவேண்டும். சுதந்­திர வர்த்­தக நட­வ­டிக்கை  சுங்க ஒன்றியம் பொது சந்தை மற்றும் பொரு­ளா­தார ஒன்­றி­ணைவு ஆகிய நான்கு  கட்­டங்கள் இங்கு காணப்­ப­டு­கின்­றன.  தற்­போது நாம் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தை எடுத்துப் பார்த்தால் அது நான்­கா­வது கட்­டத்­தையும் தாண்டி  நிற்­கின்­றது. ஆனால்   தெற்­கா­சிய பிராந்­தி­ய­மா­னது  இன்னும் முத­லா­வது கட்­டத்­தி­லேயே உள்­ளது.  உண்­மையில் தெற்கா­சி­யா­வா­னது  முத­லா­வது கட்­டத்தில் கூட இல்லை என்று கூறலாம்.


 எனவே  தெற்­கா­சிய  பிராந்­தி­யத்தில் நாடு­க­ளுக்கு இடையில் பொரு­ளா­தார ஒன்­றி­ணைவு ஏற்­ப­ட­ வேண்­டு­மாயின் அதன் ஆற்றலை  தலை­வர்கள் உண­ர­வேண்டும்.  அத்­துடன்  இந்தியாவுக்கும் பாகிஸ்­தா­னுக்கும் இடையில் காணப்­ப­டு­கின்ற முரண்­பா­டு­களே  பின்­ன­டைவு  பிர­தான கார­ண­மாகும். 


 சார்க் நாடுக­ளுக்கு இடை­யி­லான சப்டா எனப்­ப­டு­கின்ற  சார்க் சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்­கையும் வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. எனவே  தெற்­கா­சிய பிராந்­தியம் பொரு­ளா­தார ரீதியில் ஒன்றிணைந்து மக்­க­ளுக்கு அதன் நன்­மைகள் கிடைக்­க­ வேண்டுமானால் தெற்­கா­சிய பிராந்­திய நாடு­களில் அர­சியல் தீர்மானங்கள்  எடுக்­கப்­ப­ட­வேண்டும் என்று  டாக்டர் கணேசமூர்த்தி  கூறு­கிறார் 


இவ்­வாறு பார்க்­கும்­போது சார்க் பிராந்­தியம்  பொரு­ளா­தார ரீதியில்   ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வ­தற்கு முதலில் அதன் தலை­வர்கள்  அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­ட­வேண்டும்.  துணிச்­ச­லான முடி­வு­களை எடுக்­க­வேண்டும். தற்­போ­தைய சூழலில் ஐரோப்­பிய ஒன்­றியம் ஒரு பல­மான அமைப்­பாக  இருப்­ப­தற்கு காரணம்   அந்த நாடுகளின்  தலை­வர்­களின் அர்ப்­ப­ணிப்­பாகும்.  ஆசியான் அமைப்பையும்  நாம் இந்­த­ வ­கைக்குள் சேர்க்­கலாம். எனவே சார்க் நாடு­களின் தலை­வர்கள் இது­கு­றித்து ஆழ­மாக சிந்­திக்­க ­வேண்டும். 


அமர்ந்து பேசுங்கள் 


இதற்கு சார்க்  தலை­வர்கள் ஒரு இடத்தில் அமர்ந்து முதலில்  பேச்சு­வார்த்தை  நடத்­த­வேண்டும். ஆரம்பக் கட்­ட­மாக சார்க் நாடுகளில் பொரு­ளா­தார நிபு­ணர்கள் பங்­கேற்கும் ஒரு மாநாட்டை   நடத்­த­வேண்டும்.  தற்­போது இந்த ஊட­க­வி­யலா­ளர்­க­ளுக்­கான மாநாட்டை நடத்­திய அரி­சோனா பல்­க­லைக்­க­ழ­கமே சார்க் நாடுகளின் பொரு­ளா­தார  நிபு­ணர்கள் கலந்­து­கொள்ளும் மாநாட்டை நடத்தி சார்க் பிராந்­தியம்     பொரு­ளா­தார  ரீதியில் இணைந்து செயற்­ப­டு­வதால்  எவ்­வா­றான நன்­மை­களை பெற்றுக்கொள்ளும் என்­பது குறித்து  ஆரா­யலாம்.   அது தொடர்பில்  ஒரு பிர­க­ட­னத்தை வெளியி­டலாம். அந்தப் பிரகடனத்தை சார்க் நாடு­களின் தலை­வர்­க­ளுக்கு  அனுப்பி சார்க் பிராந்­தி­யத்தில் காணப்­ப­டு­கின்ற பொரு­ளா­தார  ஆற்­றலை உணரவைக்­க ­வேண்டும்.  


அத­னூ­டாக ஐரோப்­பிய ஒன்­றியம் போன்ற உலகில் ஒரு பலம்வாய்ந்த  பொரு­ளா­தார பிராந்­தி­ய­மாக  சார்க் பிராந்­தி­யத்தை உரு­வாக்­கலாம் என்ற விடயம் உணர்த்­தப்­ப­ட­ வேண்டும்.   இதன் ஆரம்ப நட­வ­டிக்­கைகள் கடி­ன­மா­ன­தாக இருக்­கலாம். ஆனால் இதற்­கான முயற்­சி­களை எடுப்­பது அவ­சி­ய­மா­கி­றது.   


இன்று உலகில் வலு­வான அமைப்­பாக இருக்­கின்ற ஐரோப்­பிய ஒன்­றியம்  ஒரே இரவில் இந்த  நிலையை அடை­ய­வில்லை. பாரிய போராட்­டங்கள் யுத்­தங்­களின் பின்­னரே   ஐரோப்­பிய  ஒன்­றியம் தற்­போது இந்த நிலை­மைக்கு வந்­தி­ருக்­கின்­றது.   


எனவே இதற்­கான நட­வ­டிக்­கை­களை படிப்­ப­டி­யாக முன்னெடுக்கலாம். கல்­வி­யா­ளர்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள் பொருளா­தார நிபு­ணர்கள்  இது தொடர்பில் வலி­யு­றுத்தும் அழுத்தங்­களை பிர­யோ­கிப்­பது அவ­சி­ய­மா­கின்­றது.  


சார்க் பிராந்­தியம் பொரு­ளா­தார ரீதியில் ஒன்­றி­ணை­வதன் மூலம் ஏற்­படும் நன்­மைகள்  மிக அதி­க­மாகும்.  இத­னூ­டாக உறுப்பு நாடுகளின் வறுமைஇ வேலை­யின்மை வீதங்­களை குறைக்க முடியும். பிராந்­தி­யத்தில் அமை­தியை நிலை­நாட்ட முடியும்.  பிராந்­தி­யத்தின்  மனி­த­வளம்இ  தொழில்­நுட்ப  அறிவு என்­பன பலம­டையும்.  மக்கள் பொரு­ளா­தார நன்­மை­களை அதி­க­ளவில் பெற்­றுக்­கொள்­வார்கள்.  


தெற்­கா­சிய அபி­வி­ருத்தி  வங்­கியை உரு­வாக்­கலாம் 


தற்­போது சார்க் பிராந்­தி­யத்திலுள்ள நம்­பிக்­கை­யின்­மையை துடைத்­தெ­றிய முடியும்.  இந்தியா மற்றும் பாகிஸ்தான் முரண்பாடு எவ்வாறு சார்க்  பொருளாதார ரீதியில் ஒன்றிணைவதை தடுக்கின்றதோ அதனைவிட சார்க் பிராந்தியத்தில் காணப்படும் நம்பிக்கையின்மை அழுத்தம் பிரயோகிக்கும் காரணியாக உள்ளது. அதனால் அந்த விடயம் குறித்து அவதானம் செலுத்தப்படுவது இன்றியமையாதது. மேலும்   போக்குவரத்து துறை வலுவடைவதுடன்  மக்கள் தொடர்பும் அதிகரிக்கும்.


 தெற்காசிய அபிவிருத்தி வங்கி ஒன்றை உருவாக்குவதற்கான குறிக்கோளை நோக்கியும் பயணிக்கலாம். தெற்காசிய வங்கியை உருவாக்கவேண்டுமானால் மேலே குறிப்பிடப்பட்ட நான்கு கட்டங்களில் நான்காவது கட்டத்துக்கு சார்க் பிராந்தியம் செல்லவேண்டும். ஆனால்  சார்க் பிராந்தியம் பொருளாதார ஒன்றிணைவில் இன்னும் முதலாவது கட்டத்தையே அடையவில்லை என்பதே இங்கு யதார்த்தமானதாக உள்ளது. 


சார்க் பிராந்தியம் மிகவும்  மெதுவாகவே பொருளாதார ரீதியில் அடியெடுத்து வருகின்றது. விரைவுபடுத்த  வேண்டியது அவசியமாகும்.  குறிப்பாக புவியியல்  ரீதியிலான  சார்க் பிராந்தியத்தின் அமைவிடம்  தொடர்பாக சார்க் தலைவர்கள் உணர்ந்து செயற்படுவதுடன் அதன் ஆற்றலை பயன்படுத்த வேண்டும்.   


சார்க்  பிராந்தியத்தில் காணப்படும்  பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான  ஆற்றலை  உறுப்பு


நாடுகளின்  தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.   விசேடமாக அரசியல் கட்சிகள் தங்களது  தேர்தல் விஞ்ஞாபனங்களில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டி  மக்களை  தெளிவு படுத்தவேண்டும்.   சார்க் பிராந்தியத்தில் பதற்றத்தை தடுப்பதற்கான ஒரே வழி பொருளாதார ரீதியான ஒன்றிணைவு என்பதே உண்மையாகும்.

மாணவர் முன்னேற்றத்தில் ஆசிரியர்களின் வகிபங்கு




மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக காணப்படுவது ஆசிரியர்களின் கற்பித்தல் முறையாகும். ஆசிரியர் மாணவர்களின் இயல்புத் தன்மை, சுபாவம், தேவை, முயற்சி என்பவற்றுக்கேற்ப தனது கற்பித்தல் முறைகளை வடிமைத்துக் கொள்ள வேண்டும். வினைத் திறனான கற்பித்தல் முறையினூடாக சிறந்த பரீட்சைப் பெறுபேறுகளை பெற்றுக் கொள்ளலாம்.


தனது செயலை வெற்றிகரமாக்கிக் கொள்வதற்காக கற்பித்தலின் போது பல்வேறு முறைகளை ஆசிரியர்கள் பின்பற்றி வருகின்றனர்.வெற்றிகரமான கற்றல், கற்பித்தலை மேற்கொள்ளும் ஆசிரியர் பல்வேறு கற்பித்தல் முறைகளை கையாளுகின்றார். ஆசிரியர் பயன்படுத்தும் கற்பித்தல் முறைகள் வருமாறு:


விரிவுரை முறை என்பது சம்பிரதாய பூர்வமான கற்பித்தல் முறையாகும். இம்முறையானது ஆசிரியர் மையத்தன்மை கொண்டதாகக் காணப்படுகிறது. ஆசிரியர் இம்முறையில் கற்பிப்பதால் மாணவர் செயற்படுவது குறைவாக இருக்கும். உயர் வகுப்புகள், செயலமர்வுகள் போன்றவற்றுக்கு இக்கற்பித்தல் முறை பொருத்தமானதாக இருக்கும். குறுகிய விரிவுரைகளை நிகழ்த்தி, அதன் பின்னர் முன்வைக்கப்பட்ட தகவல்கள் தொடர்பாக மாணவர்களுடன் கலந்துரையாட வேண்டும். மேலும் பல்வேறு வரைபடங்கள் வீடியோப் படங்கள் காட்சிப்படுத்தல் போன்ற முறைகளினூடாக விரிவுரை அமையும் போது விரிவுரை வினைத்திறனுடையதாகவிருக்கும். விரிவுரை முறையினூடாக பொறுமை சகிப்புத்தன்மை அமைதி ஒத்துழைப்பு கிரகித்தல் மதிப்பளித்தல் செவிமடுத்தல், பணிவுடன் கலந்துரையாடல் போன்ற விழிமியப்பண்புகள் பிள்ளையிடம் வளர்க்கப்படுகின்றன.


குழு முறை இன்று பாடசாலைகளில் பரந்தளவில் பயன்படுத்தும் கற்பித்தல் முறையாகும். சிறுபிள்ளைகள் சமவயதுக் குழுவினருடன் செயற்படுவதற்கு விரும்புவர். இதனால் பிள்ளைகள் ஆரம்ப வகுப்புகளில் குழுமுறையில் வகுப்புகளில் அமர்கின்றனர். 5E கற்பித்தல் முறையின் போது குழு முறை பயன்படுத்தப்படுகிறது. வகுப்பில் அனைத்து மாணவர்களையும் சிறு குழுக்களாகப் பிரித்து கருத்துக்களை சேகரிப்பதற்கு குழுக்களாக பிள்ளைகளை ஈடுபடுத்தல் இதன் அடிப்படை நுட்பமாகும். இக்குழுமுறையில் தேடியறிதல், ஒப்படை, விளையாட்டு என்பவற்றில் பிள்ளைகள் குழுக்களாக ஈடுபட்டு கற்பர். இதன் போது இக்குழுமுறை கற்பித்தலை மேற்கொள்ளலாம். இக்கற்பித்தல் முறையானது சிறந்த கற்பித்தல் முறையாக பயன்படுத்தப்படுகிறது.


வினாவுதல் முறையை பாடப் பிரவேசத்தின் போது கற்பித்த விடயங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் மதிப்பீடு செய்து கொள்வதற்கும் ஆசிரியர் பயன்படுத்துவர். அத்துடன் இந்நுட்ப முறையை ஏனய கற்பித்தல் முறைகளுடன் தொடர்பு படுத்தி சிறந்த பெறுபேறுகளைப் பெற முடியும்.


ஒப்படை வழங்கல் முறை என்பதில் தனியாகவோ அல்லது குழுவாகவோ ஒப்படைகளை மேற்கொள்ள முடியும். இடைநிலைக் கல்வியில் மாத்திரமன்றி ஆரம்பக் கல்வியிலும் ஒப்படை முறையை பயன்படுத்த முடியும். இது முழுமையாக மாணவரை மையமாகக் கொண்ட ஒரு கற்பித்தல் முறையாகும். சமகாலப் பிரச்சினை ஒன்றை அடிப்படையாகக் கொள்ளுதல், அல்லது பாடப்புத்தகத்தை அடிப்படையாகக் கொள்ளுதல், செயற்திட்டமாக நடைமுறைப்படுத்தக்கூடிய விடயம் ஒன்றை நடைமுறைப்படுத்தல், விஞ்ஞானப் பாடம் தொடர்பாக அனுபவம் பெறல், போன்ற விடயங்கள் ஒப்படையாக மேற்கொள்ள முடியும்.


கண்டறிதல் முறை இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கு பொருத்தமான கற்றல் கற்பித்தல் முறையாகும். யாதாயினும் ஒரு பிரச்சினையை அல்லது சம்பவத்தை தேர்ந்தெடுத்து அது தொடர்பில் அனைத்து தகவல்களையும் சேகரித்து அவற்றை பகுப்பாய்வுக்குட்படுத்தி அதனூடாக தேவையான பதிலை அல்லது அறிவை ஒன்று திரட்டிக் கொள்ளல் இங்கு எதிர்பார்க்கப்படுகிறது.


விளையாட்டு முறை கற்பித்தல் முறையில் மாணவர் உற்சாகத்துடன் ஈடுபடுவர். கணிதம், மொழி, சங்கீதம் போன்ற பாடங்களை விளையாட்டு முறை மூலம் கற்பிக்க முடியும். ஆரம்பப் பிரிவு மாணவர்கள் விளையாடுவதில் மிகவும் ஆர்வம் காட்டுவர். சிறு பிள்ளைகளுக்கான வெற்றிகரமான ஒரு கற்பித்தல் முறையாக இதனைக் கருத முடியும். வகுப்பறைக்கு வெளியில் அல்லது விளையாட்டு முற்றத்தில் இக்கற்பித்தலை மேற்கொள்ளும் போது பிள்ளைகளுக்கு செயற்பாட்டு ரீதியான அனுபவம் கிடைப்பதோடு வகுப்பறையும் பாடசாலையும் பிள்ளைகளுக்கு பிடித்தமான இடமாக மாறும்.


சிந்தனைக் கிளறல் -முறை என்பது ஏதேனும் ஒரு பிரச்சினை அல்லது முரண்பாடு தொடர்பாக கருத்து தெரிவிப்பதற்கு மாணவருக்கு சந்தர்ப்பம் வழங்கி அவர்களின் சிந்தனையைத் தூண்டிவிடுவதாகும். முதலில் மாணவர் முன்வைக்கும் சகல கருத்துக்களை நிராகரிக்காமலும், திருத்தியமைக்காமலும், விமர்சிக்காமலும் இருத்தல் வேண்டும்.


வெளிக்களக் கற்கை முறையானது வகுப்பறைக்கு வெளியே மாணவர்களை ஆசிரியர் அழைத்துச் சென்று கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதை குறிக்கும். இடை நிலை மாணவருக்கே இது மிகவும் பொருத்தமானதாகும். ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் வயதுக் குழுவினருக்கேற்ப பொருத்தமான வேலைத் திட்டங்களை தீர்மானித்து இவற்றை நடைமுறைப் படுத்தலாம்.


வெறும் வேடிக்கை வினோதங்களுக்காக மாத்திரம் கல்விச் சுற்றுலாக்கள் செல்லாது மாணவரின் அறிவு வளர்ச்சிக்கும் ஆய்வுக்கும் கல்வி சுற்றுலாக்கள் அமைய வேண்டும். விஞ்ஞான ரீதியான விடயங்கள் புவியின் அம்சங்கள் வரலாறுகள் தொல் பொருளியல் சார் விடயங்கள் என்பவற்றை உயர் வகுப்பு மாணவர்களுக்கு பெருத்தமான விதத்தில் திட்டமிட்டு கல்விச் சுற்றுலாக்களை திட்டமிட்டு மாணவர் அனுபவரீதியாக கற்பதற்கு வழிப்படுத்த வேண்டும்.


நுண்முறைக் கற்பித்தல் முறையை வகுப்பறையில் கற்பிக்கும் போது விளங்காத மாணவரை, இடர்படுபவர்களை தனியாக அழைத்து உரிய பாடவிடயத்தை ஆசிரியர் தெளிவுபடுத்தி விளங்கிக் கொள்வதற்கு பயன்படுத்த முடியும். இடர்படும். மாணவரை கரும்பலகைக்கு அருகில் அழைத்து ஐந்து, பத்து நிமிடங்கள் தனிமைப்படுத்திக் கற்பிக்க வேண்டும்.


முன்வைத்தல் என்பது கற்றல் கற்பித்தல் என்பதை விட தனியாளின் ஆற்றலை அல்லது தகைமையை வெளிப்படுத்தும் ஒரு அணுகு முறையாக கருதப்படுகிறது. இது வயது வந்தோருக்கான கல்வியில் இதனை ஓர் கற்றல் முறையாகவும் பயன்படுத்த முடியும்.


போலச்செய்தல் கற்றல் கற்பித்தல் முறையில் பிள்ளை நேரடியான கற்றல் அனுபவத்தை பெற்றுக் கொள்வர். ஒரு செயற்பாடு நிகழ்வதை அவ்வாறே முன்வைத்தல் போலச் செய்தலாகும். அதற்கிணங்க பெறப்படும் அனுபவம் முழுமையான கற்றலாகும். இம்முறையைப் பிரயோகித்து முன்வைக்க எதிர்பார்க்கும் அறிவுத் தொகுதியானது மிகவும் வினைத்திறனுள்ளதாக அமையும்.


பிள்ளைகளுக்கு ஏதாவதோர் விடயம் தொடர்பில் முழுமையான விளக்கத்தை பெற்றுக் கொடுப்பதற்கு இக்கற்பித்தல் முறை பயன்படுகிறது போலச் செய்தல் முறை செயற்பாடுகளில் பிள்ளைகள் ஈடுபடுவதில் விருப்பமுடையவர்களாக இருப்பர். எனவே இவ்வாறான கற்பித்தல் முறைகளை ஆசிரியர்கள் பயன்படுத்தும் போது சிறந்த பரீட்சை அடைவு மட்டத்தை பெறலாம்.

சூழல் மாசடைவின் இழிவளவாக்கம்

உலக சூழலியல் பிரச்சினைகளை குறைப்பதில் ஐக்கிய நாடுகள் சூழல் நிகழ்ச்சி திட்டத்தின் பங்குகள் மற்றும் சுற்ச்சூழல் சார்பான மாநாடுகள் பற்றிய தொகுப்புக்கள்.


1972 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் இடம் பெற்ற ஐக்கிய நாடுகளின் மானிட சூழல் தொடர்பான மாநாட்டில் ஐக்கிய நாடுகளின் சூழல் நிகழ்ச்சித்திட்டம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

2019 இன் சுற்றுச் சூழல் மாநாடு மார்ச் மாதம்  கென்யாவின் நைரோபியில் நடைபெற்றது. அதனுடன் கிகிரி என்ற இடத்தில் இதன் தலைமைக் காரியாலயம் அமையப்பெற்றுள்ளது. இவ்வமைப்புடன் இணைந்து சுகாதார அமைப்பு அடங்கலாக 06 வலய அமைப்புக்கள் காணப்படுகின்றன. அங்கத்துவ நாடுகளிலும் இதற்கான காரியாலயங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் சூழல் நிகழ்ச்சி திட்டத்தின் (UNEP) ஊடாக பல முக்கிய நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. முக்கியமாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் நிலையான அபிவிருத்தி முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.


எதிர்கால சந்ததியினரின் தேவையினைப் பூர்த்தி செய்வதுடன் தற்பொழுதுள்ள தேவையினை மேலும் அபிவிருத்தியடையச் செய்து சூழலைப் பேணி பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதுமே ஐக்கிய நாடுகளின் சூழல் நிகழ்ச்சித் திட்டத்தின் இலக்காக காணப்படுகிறது. சூழல் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பம் என்பவற்றை தேசிய அரசின் கொள்கைக்குள் கொண்டு வருதல், “அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட சிறப்பான நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டு வருவதுடன் சூழல் தொடர்புபட்ட அரச சார்பற்ற நிறுவனங்க ளோடு இணைந்தும் UNEP தொழிற் படுகிறது. அவ்வாறே அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு நிதியுதவிகள் வழங்கப்பட்டு சூழல் சார் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. சுமார் 58 அங்கத்துவ நாடுகளையும் 890 செயலக காரியாலய அங்கத்தவர்களையும் கொண்டுள்ளது. கொள்கை அமுலாக்கம் மற்றும் செயற்பாடுகள் என்பன செயலக காரியாலயத்தினால் இடம்பெற்று வருகின்றன.


நாளுக்கு நாள் தீவிரமாக மாசடையும் எம்மை சுற்றியுள்ள சூழலை பாதுகாக்கும் நோக்கில் பாரிய பங்களிப்பினை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த வகையில் :- சூழல் நிலைமையினை கண்டு பிடித்தல், சூழல் சார் ஆய்வுகளை மேற்கொள்ளல், தம் நாட்டு இயற்கை வளங்களை பாதுகாக்கும் வழிவகையினை அரசுக்கு அறிவுறுத்தல், மற்றும் உலக அளவில் சூழல் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் உலக நாடுகளை ஒன்றிணைத்தல் போன்றன இவற்றின் செயற்பாடாகும். இவ்வாறான நடவடிக்கைகள் சிறந்த பெறுபேறுகளை ஈட்டித் தருவதுடன் பூகோளத்தை தாக்கும் சூழல் பிரச்சினை தொடர்பான சில சில முடிவுகளை கண்டுபிடிப்பதற்கும் அதனை முன்னெடு ப்பதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பூகோள சூழல் பிரச்சினைகள் :-

ஐக்கிய நாடுகளின் சூழல் நிகழ்ச்சி திட்டத்தின் சுமார் 200 ஆய்வாளர்களும் விஞ்ஞானிகளும் இணைந்து 21 ஆம் நூற்றாண்டில் முகம் கொடுத்து வரும் சூழல் பிரச்சினைகளில் மிகவும் முக்கியமான பிரச்சினைகள் சிலவற்றை அடையாளம் கண்டு பட்டியலிட்டுள்ளனர் அவை காலநிலை மாற்றம், காடழிப்பு (பாலைவனமாக்கம்) நீர் தட்டுப்பாடு, நீர் மாசடைவு, உயிர்பல்வகைமை பாதிப்பு, திண்ம கழிவு வெளியேற்றம். வளி மாசடைவு, உயிரியல் வட்டம் சீரழிவு, இரசாயன பொருட்கள் வெளியேற்றம், இயற்கை அனர்த்தம், புது உயிரினத் தோற்றம், மரபணு தொழிநுட்பம், கடல் மாசாக்கம், மண் தரமிழத்தல், ஓசோன்படை தேய்வு, நகரமயமாக்கம். உயர் மீன்பிடி, கடல் அலைகளில் வித்தியாசம். கடல் மட்ட உயர்வு, எல்நினோ தாக்கம், அணுக்கரு பயன்பாடு. யுத்தம் பாதிப்பு மற்றும் இயற்கை வளங்களின் அதிகரித்த பயன்பாடு போன்றனவாகும். இவ்வாறான பிரச்சினைகள் சூழலையும் சூழல் வாழ் உயிரினங்களையும் பெருமளவில் பாதித்து வருகின்றன. எனவே இதனை தடுத்து நிறுத்த பல்வேறு நடவடிக்கைகளை UNEP மேற்கொண்டுள்ளது.

உலக சூழல் பிரச்சினையை இழிவளவாக்க UNEP மேற்கொண்டுள்ள நட வடிக்கைகள் :-


1) மாநாடுகள் ஏற்படுத்தப்படல் :


இம் மாநாடுகளின் முதல் இலக்கு கைத்தொழிலாக்கத்தினால் சூழலுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்புக்களுக்கு தீர்வுகள் தேடுவதாகும். அவ்வாறே உலகம் எதிர்நோக்கும் நடைமுறை சவால்களுக்கு சிறந்த முறையில் முகம் கொடுப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளுவதுமாகும்.

மானிட சூழல் தொடர்பான முதல் மாநாடு :

இம்முதல் மாநாடு 1972 சுவீடனின் ஸ்டொக்ஹொம் நகரில் இடம்பெற்றது. இதன்போது ஓசோன் படை தேய்வுக்குக் காரணமான CFC வாயு தொடர்பாக சர்வதேச மட்டத்தில் கலந்துரையாடப்பட்டு புவி வெப்ப நிலை அதிகரிப்பு தொடர்பாகவும் கவனம் செலுத்தியது.

அருகிவரும் உயிரினம் மற்றும் சர்வதேச வியாபாரம் தொடர்பான மாநாடு :

அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் உயிரினம் மற்றும் சர்வதேச வியாபாரம் தொடர்பாக 1973 ஆம் ஆண்டு கலந்துரையாடப்பட்டது. காட்டு வாழ் உயிரினங்களைக் கொண்டதான உற்பத்தி நடவடிக்கைகள் இம் மாநாடு ஊடாக தடுக்கப்பட்டது.

புரூண்லேன்ட் ஆணைக்குழு :

சூழல் மற்றும் விருத்திபெறும் சர்வதேச ஆணைக்குழு என்ற பெயரில் அறிமுகமான இவ்வாணைக்குழு 1983 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இவ்வாணைக்குழு மூலம் பின்வரும் நோக்கங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 2000 வருடங்களுக்கு மேற்கொள்ளப்படும் நிலைப்பேண் அபிவிருத்தி நடவடிக்கை களை சிறப்பாக கொண்டு செல்ல நீண்டகால சூழல் பாதுகாப்பு வழிமுறை களை ஏற்படுத்தல், விருத்தியடைந்த மற்றும் விருத்தி அடைந்து வரும் நாடுகளுக் கிடையில் சூழல் பாதுகாப்பிற்கான சர்வதேச உறவுகளை ஏற்படுத்தல் சூழல் நடவடிக்கைகளின் போது சர்வதேச ரீதியாக அனைத்து நாடுகளும் இணைந்து செயற்படல், நீண்டகால சூழல் பாதுகாப்பிற்கு அறிக்கைகளை வெளியிடல் என்பனவாகும்.

மொன்றியல்_மாநாடு :

O3 படை தேய்வினை இழிவளவாக்கு வதற்காக 1987 ஆம் ஆண்டு ஐ. நா. சபையினால் நிறுவப்பட்டது.

பேஸல் மாநாடு :

சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் தொடர்பாக 1989 ஆம் ஆண்டு பேஸல் மாநாடு இடம்பெற்றது. இதன் மூலமாக நச்சு வாயுக்கள் சூழலுக்கு வெளிவிடப்படும் அளவு குறைக்கப்பட்டது.

மிகிதலை மாநாடு :

ஐ. நாடுகளின் சூழல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான இம் மாநாடு, புவி மாநாடு எனவும் அழைக்கப் படுகின்றது. 1992 ஆம் ஆண்டு பிரேஸிலின் ரியோடி ஜெனிரோவில் இடம்பெற்றது. உலகில் இடம்பெற்ற பாரிய மாநாடாகவும், 172 நாடுகள் கலந்துகொண்ட நிலையில் 108 நாட்டு தலைவர்களுக்கு மத்தியில் கியோட்டோ வாசகமும் உருவாக்கப்பட்டது. காலநிலை மாற்றம், உயிர் பல்வகைமை பாதுகாப்பு என்பன தொடர்பாகவும் ஆராயப்பட்டது.


2)ஓசோன்_படையினை_பாதுகாத்தல் :


ஓசோன் படை தேய்வு என்பது குறிப்பிட்ட சில வலயங்கள் மட்டுமன்றி உலக நாடுகள் அனைத்தும் கவனம் செலுத்த வேண்டிய ஒன்றாக காணப்படுகிறது. 1987 ஆம் ஆண்டு மொன்றியல் மாநாடு உருவாக்கப்பட்டு ஓசோன் படைக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் இரசாயன துகள்களை வளிமண்டலத்துக்கு வெளிவிடும் அளவினை குறைப்பதற்காக அனைத்து அமைப்பு அங்கத்தவர்களிடமும் கோரிக்கை விடப்பட்டது.


இதன்படி CFC, ஹெலோன் வாயு, காபன் டெட்ரா குளோரைட், மெதில் குளோரோ போம், ஹைட்ரொ குளோரோ புளோரே காபன் போன்றவற்றின் பாவனை குறைக்கப்பட வேண்டும் என கால அட்ட வணையும் விருத்தி அடைந்த நாடுகளுக்கு பகிரப்பட்டது. அதன்படி CFC வாயு 1996 ஆம் ஆண்டிலும், Hydro UoroFloro Carbon 2030 ஆம் ஆண்டிலும் குறைக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருக் கின்றது. இவ்வாறான வாயுக்கள் செலுத்தப்பட்ட உபகரணங்களுக்கு பதிலாக சூழல் நேய வாயுக்கள் கொண்ட உபகரணங்கள் பயன்படுத்து மாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 1992 மிகிதலை மாநாட்டில் இதற்கு பகரமாக Hydro floro Carbon, Hydro Carbon, அமோனியா. ஹீலியம் போன்ற வாயுக்கள் அறிமுகப்படுத்தப் பட்டன.


3)பச்சைவீட்டு வாயுக்களை குறைத்தல்

பச்சை வீட்டு வாயுக்களின் விகிதாசாரத் தினை குறைக்கும் நோக்கில் பல நடவடிக்கைகள் குறிப்பாக சர்வதேச அமைப்புக்கள், பிராந்திய அமைப்புக்கள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன. 1985 ஆம் ஆண்டு பச்சை வீட்டு வாயு தொடர்பான கருத்து சபை உருவாக்கப் பட்டது. மேலும் 1988 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட உலக காலநிலை சங்கத் தினால் விஞ்ஞான பரிசோதனை கொண்டு நடத்தவும் அதன் மூலம் தொழில்நுட்ப தகவல்கள் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின் றது. உலக காலநிலை சங்கம் UNEP உலக பாதுகாப்பு சங்கம் என்பன பச்சை வீட்டு வாயுக்கள் தொடர்பான விமர்சனங்களையும் வெளியிட்டன. UNEP ஆனது பச்சை வீட்டு வாயுக்கள் தொடர்பான பரிசீலனைகளை மேற்கொண்டு வாயுக்களை கட்டுப்படுத்தும் வழிவகைகள் மற்றும் நோய்கள் தொடர்பான ஆய்வுகள். மக்கள் விழிப்புணர்வு திட்டங்கள் என்பவற்றையும் மேற்கொண்டுள்ளன.

4)மழைக்காடுகளை பாதுகாத்தல் :

அயன மழைக்காடுகளை பாதுகாத்தல் என்பது எங்கு முக்கியமாக நோக்கப்பட்டது. ஐ. நாவின் சூழல் மற்றும் அபிவிருத்தி என்ற மாநாட்டில் மழைக்காடுகளை பாதுகாத்தல் காட்டு உயிரினம் மற்றும் உயிர் பல்வகைமையினை பேணி பாதுகாத்தல் என்பன முக்கியமாக கலந்துரையாடப்பட்டது. 1994 - 2003 வரையான காலப் பகுதியை உயிர்ப் பல்வகைமை சகாப்தமாக பிரகடனப்படு த்தியது மட்டுமன்றி இவை பாதுகாக்கப்பட வேண்டிய இயற்கை வளம் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அந்த வகையில் தென்னமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியா கண்டங்களில் காணப்படும் 13 மழைக் காடுகள் பாதுகாக்க்பபட வேண்டிய பிரதேசமாக அடையாளம் செய்யப்பட்டுள்ளது. ஐவரிகோஸ்டின் டாயி தேசிய பூங்கா, பேருவின் மானு தேசிய பூங்கா, கொங்கோவின், ஸொலன் கா தேசிய பூங்கா, இலங்கையின் சிங்கராஜ வனம் என்பன உதாரணங் களாகும்.

5)மீள் காடாக்கல் தொடர்பான நிகழ்ச்சிகள் :

காடுகள் அழிக்கப்பட்ட பகுதிகளில் மீள் காடாக்கல் நடவடிக்கையினை UNEP கொண்டு செல்கின்றது. சில பகுதிகளில் மழை காடுகளை பாதுகாக்கப்பட வேண்டிய காடுகளாக வேறுபடுத்தி ஏனைய மனித தேவைக்கு (பலகை) அவசியமானது காடுகள் என வேறுபடுத்ததப்பட்டு UNEP னால் இதற்கென நிதி உதவிகளும் வழங்கப் படுகின்றது. பிரேஸில் அரசினால் ஆரம்பிக்கப்பட்ட ‘புளோரும் திட்டம்’ ஊடாக 30 வருடங்களுக்குள் 30 பில்லியன் டொலரினை பயன்படுத்தி அமேசன் காட்டு அண்டிய பகுதியில் 20 மில்லியன் ஹெக்டயர் மீள் காடாக்கல் நடவடிக்கைக்கு திட்டமிட்டுள்ளது. அவ்வாறே நைஜீரியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு மீள் காடாக்கல் செயற்திட்டங்களுக்கான நிதி உதவிகளும் வழங்கப்படுகிறது. சில நாடுகளில் கனிய எண்ணெய் மற்றும் ஏனைய தேவைகளுக்காகவும் பலகை கைத்தொழி லுக்காக காடுகள் வேறாக ஏற்படுத்தப்படுகின்றன. இது மேய்ச்சல் நிலங்களுக்கு அருகில் இடம்பெறும். இது விவசாய காடாக கருதப்படுகின்றன. பர்மாவில் டொங்கியா என்ற பெயரில் பயிர் செய்கை நிலத்துக்கு அருகாமையில் தேக்கு மற்றும் பெறுமதி மிக்க மூலிகை தோட்டங்களும் இடம்பெற்று வருகின்றது.

6)பாலைவனமாதலைகட்டுப்படுத்தும் நிகழ்ச்சி திட்டங்கள் :

உலகின் அனைத்து கண்டங்களிலும் பரவி வரும் பாலைவனமாதலை தடுப்பதற்காக பல்வேறு செயல் நடவடிக் கைகள் UNEP னால் மேற்கொள்ள ப்படுகின்றன. 2010 - 2020 இடைப்பட்ட காலப் பகுதியானது பாலைவனமாதலுக்கு எதிரான சகாப்தமாக UNEP னால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மண் தரமிழத்தல் மற்றும் காலநிலை மாற்றம் என்பற்றிலும் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் பாலைவனமாதலை தடுக்கும் வழிவகைகளை செயற்படுத்தவே இச் சகாப்தத்தின் நோக்கமாகும். விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு என்பவற்றில் அதிகளவு பாதிப்படைந்துள்ள ஆபிரிக்கா, ஆசிய நாடுகளில் பாலைவனமாதல் தீவிர போக்கைக் கொண்டிருக்கிறது. நைரோபியில் இடம்பெற்ற UNEP யின் பாலைவன மாதல் மாநாட்டில் 20 வருடங்களுக்குள் பாலைவனமாதலை தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு 4.5 மில்லியன் டொலர் அவசியப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தது. பாலைவனமாதலுக்கு உட்பட்டு வரும் 95 நாடுகள் இதில் கலந்து கொண்டதுடன் அதனை கட்டுப்படுத்துவதற்காக 28 நடவடிக்கைகளை அடையாளம் செய்தனர். காடுகள் ஒழித்தல், முறையற்ற முகாமைத்துவம். வரண்ட பகுதிகளில் குறைவான விவசாயம் மற்றும் குறைவான கால்நடை வளர்ப்புக்களை மேற்கொள்ளல் என்பன குறிப்பிடப்பட்டிருந்தன.

7)உயிர்பல்வகைமையை பாதுகாக்கும் நிகழ்ச்சி திட்டம் :

உயிர் பல்வகைமை தொடர்பாக ஐ.நா. சபை (1992) மனித நிலைப்பாட்டிற்கு அவசியமான பல்வகை கொண்ட தாவரம் மற்றும் விலங்கினங்களை பாதுகாத்து வருகின்றது.

8)ஏனைய செயற்பாடுகள் :

UNEP னால் மேற்குறிப்பிட்ட அம்சங்கள் மட்டுமன்றி ஏனைய பல துறைகளிலும் கவனம் செலுத்தி வருகின்றது. 2009 UNEP மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி 4 வருட கலந்துரையாடலின் பின் சூழலுக்கு வெளிவிடும் இரசம் தொடர்பாக சர்வதேச மட்டத்தில் நோக்கப்பட்டது. இதற்கு 144 நாடுகள் ஒத்துழைத்தன. இப்புதிய மாநாடு ‘இரசம் தொடர்பான மினமாட்டா மாநாடு” என அழைக்கப்பட்டது. உலகில் இதுவரை ஏற்பட்ட பாரிய சூழல் அனர்த்தமாக மினமாட்டா அனர்த்தத்தினை நினைவுபடுத்தும் நோக்கில் ஜப்பானில் அமைந்துள்ள மினமாட்டா நகரத்தில் 1950 களில் ஏற்பட்ட இரச மாசாக்கத்தினால் மனிதர்களுக்கு பாரியளவில் சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தின. ஏனவே இந்த இரசத்தினால் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக ஒரு விழிப்புணர்வினை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. அவ்வாறே இரசம் காணப்படும் வைத்திய உபகரணங்கள், மின் உபகரணங்கள். சீமெந்து, நிலக்கரி என்பவற்றின் பாவனை 2020 ஆம் ஆண்டாகும் பொழுது நிறுத்தப்பட வேண்டும் எனவும் இதனூடான ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகள் கட்டுப்படுத்த ப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டி ருக்கின்றது. விபிழி மின்குமிழ், ஆடம்பர வாசனை பொருட்கள், உடல் வெப்பமானி, இரத்த அழுத்தமானி என்பவற்றின் பாவனை குறைக்கப்பட வேண்டும் என UNEP அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறே முருகைக் கற்பாறை அழிவினைத் தடுப்பதற்கான நடவடிக்கை களும் UNEP யினால் மேற்கொள்ள ப்படுகின்றது. இதற்காக கடல் மற்றும் கரையோர நிகழ்ச்சித் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சூழல் நிகழ்ச்சித் திட்டத்தின் பிராந்திய கடல் நிகழ்ச்சி திட்டம் என்பனவும் மேற்கொள்ளப்படு கின்றது. இதன் மூலம் கரையோர வலயங்களின் பாதுகாப்பு, கடல் உயரின பாதுகாப்பு, கடலுக்கு வெளியேற்றும் கழிவுகள் கட்டுப்படுத்தல் என்பன ஏனைய நாட்டு நிதி உதவியுடன் UNEP மேற்கொண்டு வருகிறது. அவ்வாறே சிரியாவின் சிவில் யுத்தத்தின் பின் அந்நாட்டு காலநிலை மற்றும் வானிலை நிலைமையினை மீண்டும் உருவாக்குவதற்கு UNEP னால் உதவி வழங்கப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி பாரிய பயிர் நிலங்களை பாதுகாப்பதற்காக UNEP யினால் நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன. சுமார் 2001 ஆண்டில் 90% பயிர் நிலங்கள் சேதமடைந்திருப்பதாக UNEP செய்மதி தகவல் தெரிவித்துள்ளன. இதற்காக பயிர்நில முகாமைத்துவ நிகழ்ச்சித் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. வனமுகாமை மற்றும் பாதுகாப்பு தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்பு ணர்வை ஏற்படுத்துவதே நோக்காக இருந்தது. இதில் சதுப்பு நிலமும் உள்ளடக்கப் பட்டிருந்தது.UNEP ஆனது பல்வேறு பட்ட துறைகளை அதாவது தொழில் நுட்பம், கைத்தொழில், வியாபாரம் போன்றவற்றில் கவனம் செலுத்துவதுடன் அவற்றில் ஈடுபடும் மக்களுக்கு தேவையான உத்திகள், தொழில்நுட்ப அறிவு என்பவற்றினை சூழலுக்கு நேயமுள்ள முறையில் எவ்வாறு வகுத்துக் கொள்வது என்பதனையும் தெளிவு படுத்தியுள்ளது.

Monday, 19 October 2020

பொருளாதார எழுச்சி




கடந்த காலத்தில் மோசமாக வீழ்ச்சி கண்டிருந்த நாட்டின் பொருளாதாரம் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியில் ஸ்திரநிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதை வெளிப்படையாகவே அவதானிக்க முடிகிறது. மக்களை திசைதிருப்பும் விதத்தில் எதிரணித்தரப்பினர் என்னதான் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த போதிலும் நாடு பொருளாதார ரீதியில் மேலெழுந்து வருவதை மறுக்கமுடியது. பாரிய கடன்சுமைகளுக்கு அரசு முகம்கொடுத்த போதிலும் வீழ்ந்து போயிருந்த பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதில் அரசாங்கம் ஓரளவுக்கேணும் வெற்றிபெற்றே இருக்கின்றது. வளர்முக நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது பொருளாதார வளர்ச்சியில் நாடு படிப்படியாக எழுச்சிபெறுவதை காண முடிகிறது.


பரவலான அபிவிருத்தித் திட்டங்கள். மக்களின் அன்றாடப் பிரச்சினைகள், எதிர்பார்ப்புகள் திட்டமிடப்பட்ட வியூகங்களின் அடிப்படையில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சில செயற்பாடுகள் தாமதப்பட்டாலும் கூட பெரும்பாலான திட்டங்கள் விரைவுபடுத்தப்பட்டே வருகின்றன. அவற்றை பொதுமக்கள் அனுபவிக்கக்கூடியதாகவும் அமையப்பெற்றுள்ளது. சாதாரண மக்களது வருமானம் கூட கணிசமான அளவுக்கு அதிகரித்திருப்பதையும் மறுதலிக்க முடியாது. அரசு வகுத்த திட்டங்கள் சிரமமான முறையில் முன்னெடுக்கப்பட்டே வருகின்றன.


அரச தரப்பை விமர்சிக்க வேண்டுமென்பதற்காக எதிரணித் தரப்புகள் இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி பொதுமக்களை திசைதிருப்பி ஆளும் தரப்புக்கு எதிரானதொரு பிம்பத்தை வெளிக்காட்ட முனைகின்றன. அரசாங்கம் எதனையுமே செய்யவில்லை என்ற மாயையை உருவாக்கி அதன் மூலம் அரசியல் இலாபம் தேடும் முயற்சியில் எதிரணி ஈடுபட்டு வருகின்றது. ஆனால் யதார்த்தத்தை மக்கள் புரிந்தே வைத்துள்ளனர். என்றாலும் குறைபாடுகள் எதுவுமே இல்லை என்று கூற முற்படவில்லை,


பாரிய கடன் சுமைகளுக்கு மத்தியிலும் மக்களால் உணரக்கூடிய பொருளாதார அபிவிருத்தியை காணமுடிகிறது. குறுகிய காலத்துக்குள் கடன் சுமையில் கணிசமான அளவை திருப்பிச் செலுத்தியதோடு நின்றுவிடாமல் நாடு தழுவிய மட்டத்தில் அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுத்த அரசாங்கம், அரச ஊழியர்களு க்கு சம்பள அதிகரிப்பையும் வழங்கியது. இந்த நிலையிலும் கூட சில தொழிற்சங்கங்கள், அரச ஊழியர்களை அரசுக்கு எதிராக தூண்டிவிட்டு ஆர்ப்பாட்டங்களையும், ஊர்வலங்களையும் நடத்தி மக்கள் மத்தியில் அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.


கணிசமான அரச வேலைவாய்ப்புகளுடன், தனியார்துறையை ஊக்குவித்து அவற்றினூடாகவும் பெருமளவு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சர்வதேச முதலீட்டாளர்களை ஊக்குவித்து பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்களை அறிமுகப்படுத்தி பொருளாதாரத்தை உறுதிப்படுத்தும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன. உடைந்துபோன உள்ளங்களைக் கூட ஓட்டவைக்கச் செய்வதில் திருப்தி கொள்ளக்கூடியதாகவே உள்ளது.


மக்களின் எதிர்பார்ப்புகள் கணிசமான அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன. முதலில் மக்களிடையே ஆசுவாசத்தை ஏற்படுத்தி மக்களது மனங்களை ஈர்த்தெடுப்பதில் அரசு முன்னேற்றம் கண்டுள்ளது. மக்கள் எதிர்பார்த்த நிம்மதியை குறுகிய காலத்துக்குள் கொண்டுவர முடிந்துள்ளது. இருண்ட யுகத்தில் வாழ்ந்துகொண்டிருந்த மக்களின் வாழ்வினை ஒளிபெறச்செய்து மக்களின் மனங்கள் வென்றெடுக்கப்பட்டுள்ளன. அச்சுறுத்தல்களிலிருந்து மக்கள் மீட்கப்பட்டு அச்சமின்றி வாழும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


மக்களிடையே இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பாரிய பணியையும்கூட அரசு முன்னெடுத்தது. இனங்களுக்கிடையேயும், மதங்களுக்கிடையேயும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பயணத்தில் புரிந்துணர்வான ஒரு மைல் கல்லுக்கு வந்த தருணத்தில் தீயசக்திகள் திட்டமிட்டு இனவாதத் தீயை கக்கினர். அதனையும் கூட இந்த அரசு சாதுர்யமாக முறியடித்தது. எதிர்ப்பு அரசியல் என்பது ஜனநாயக அரசியலில் ஒரு அங்கம்தான். ஆனால் அந்த எதிர்ப்பு அரசியல் ஆரோக்கியமானதாக அமைதல் வேண்டும். நாட்டுக்கும் மக்களுக்கும் பயனுடையதாக இருக்க வேண்டும்.


அபிவிருத்தி என்பது நாட்டின் சகல பகுதிகளுக்கும் விரிந்ததாகக் காணப்பட வேண்டுமென்பதில் இந்த அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. தெற்கில் முன்னெடுக்கப்படும் பொருளாதார அபிவிருத்தி வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் சமமாக மேற்கொள்ளப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டியதொன்றாகும். எந்தவொரு பிரதேசத்துக்கும் பாகுபாடு காட்டப்படக்கூடாது. வளங்கள் கூட சரிசமமாக பகிரப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.


கடந்த காலத்தில் சகல விடயங்களும் இன ரீதியான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டதன் காரணமாக நாடு பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டது. காலத்துக்குக் காலம் கொடுக்கப்படும் வாக்குறுதிகள் கூட செல்லாக் காசு போன்ற நிலையிலேயே பார்க்கப்பட்டன. இந்த முரண்பாட்டைத் துடைத்தெறிய வேண்டிய அவசியத்தை 2015ல் அரசு உணர்ந்த நிலையிலேயே சில காத்திரமான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இதில் முக்கியமானதுதான் வடக்கு அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுப்பதாக அமைந்துள்ளது.


யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய திறப்பும் அபிவிருத்தியில் பாரியதொரு மைல் கல்லாகும். வடக்கில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டது. அந்த மண்ணில் பொருளாதாரப் புரட்சியொன்றுக்கு வித்திடப்பட்டுள்ளது. வடபுலத்து மக்கள் மனங்களில் ஊன்றிப்போயிருந்த விரச நிலை மாறும் யுகமொன்று உதயமாகியுள்ளது. அந்த மக்களது மனங்களிலும் நம்பிக்கை ஒளி பரவத் தொடங்கியுள்ளது. இது ஆரம்பம் மட்டுமே. மத்தியில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் மிக விரைவில் முழு நாடும் ஒன்றுபட்டு இது எங்கள் நாடு, எங்கள் மண் என்ற ஒத்த நிலைப்பாட்டுக்கு வரக்கூடிய காலம் வெகு தூரத்தில் இல்லை என நம்பலாம்.

இலங்கையில் பாடசாலை ஆசிரியர்களின் உரிமைகள், கடமைகள்

 


உரிமைகளைப் பொறுத்தவரையில் வேதனம், வருடாந்த சம்பள உயர்ச்சி, ஓய்வூதியம், விதவைகள் விதுரர் அநாதைகள் ஓய்வூதியம், அரசியல் உரிமைகள், தொழிற்சங்கஉரிமைகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். முதலில் ஓய்வூதிய உரிமை பற்றிய விளக்கத்தை இங்கு சுருக்கமாக பார்க்கலாம். ஓர் ஆசிரியர் இளைப்பாறும் போது ஓய்வூதியம் பெறும் உரிமை உடையவராவார். 20 வருட சேவையை முடித்த ஆசிரியர் சுயவிருப்பத்தின் பேரில் ஓய்வு பெறலாம். ஆனால் 55வயது நிறைவின் பின்னரே அவருக்கான ஓய்வூதியம் வழங்கப்படும்.


பெண் ஆசிரியர் 20 வருட சேவையை முடித்து ஓய்வு பெற விரும்பினால் அத்திகதியிலிருந்து ஓய்வூதியம் பெற முடியும். சேவையின் போது அல்லது ஓய்வு பெற்ற பின்னர் ஓர் ஆசிரியர் மரணமடைவாராயின் அவரின் விதவை/விதுரர் ஆதரவற்ற பிள்ளைகள் ஆகியோர் குறித்த ஆசிரியருக்குரிய ஓய்வூதியத்தைப் பெறும் உரித்துடையவராவார்.


அரச ஊழியரின் பிள்ளையொன்று ஊனமுற்றிருப்பின் அப்பிள்ளை தான் உயிர் வாழும் காலம் வரை தந்தை அல்லது தாயின் ஓய்வூதியத்தைப் பெறலாம். இருவரும் ஓய்வூதியம் பெறுபவர்களாயின் எவரது ஓய்வூதியம் கூடியதோ அதைனை ஓய்வூதியமாகப் பெறலாம்.


ஓர் அரசாங்க ஊழியர் குறைந்த பட்சம் 10 வருட காலம் சேவை செய்து இருந்தால் ஓய்வூதியம் கிடைக்கும். ஆனால் இதைப் பெற 55 வயது ஆகி இருக்க வேண்டும்.முடியுமானால் 60 வயது வரை சேவை ஆற்றலாம்.எனினும் பத்து வருட சேவையை பூர்த்தி செய்ய முன்னர் மரணமடைந்தால் துணைக்கு அல்லது அநாதை குழந்தைகளுக்கு இந்த உரித்து உண்டு. யாரும் விரும்பினால் 20 வருட சேவையின் பின்னர் ஓய்வு பெறலாம்.ஆனால் 55 வயதானால் மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கத் தொடங்கும். ஆசிரியைகள், தாதிகள்,பெண் பொலிஸ் உட்பட சில சேவையைச் சேர்ந்த பெண் அரசாங்க ஊழியர்கள் 20 வருட சேவையின் பின்னர் ஓய்வு பெற்றாலும் உடன் ஓய்வூதியம் கிடைக்கும்.


மரணப்பணிக்கொடை:


ஓர் அரச ஊழியர் சேவையின் போது மரணமடைந்தால் மரணப் பணிக்கொடை வழங்கப்படும். அது சேவைக் காலத்தின் அடிப்படையில் வழங்கப்படும். 5வருடத்திற்குட்பட்ட சேவைக் காலம் எனின் ஒருவருட சேவைக்கு ஒருமாதச் சம்பளம் என்ற அடிப்படையிலும், சேவைக்காலம் 5 தொடக்கம் 10வருடத்திற்குட்பட்டதாயின் ஒரு வருடச் சம்பளம், சேவைக்காலம் 10வருடத்திற்கு மேற்பட்டதாயின் கடைசி மாதச்சம்பளத்தின் 90வீதத்தின் 24 மடங்கு ஆகும். 30 வருட காலம் சேவை செய்து இருந்தால் கடைசியாகப் பெற்ற சம்பளத்தின் 75% தொடக்கம் 85% குறைக்கப்பட்ட ஓய்வூதியம் (ஓய்வூதியப் பணிக்கொடையைப் பெற்றால் கிடைக்கும் . இது சம்பளத்தைப் பொறுத்து வித்தியாசப்படும். 13280/= சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு இருப்பவர் 85%தையும் 37805/= சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு இருப்பவர் 75% ஐயும் ஓய்வூதியமாகப் பெறுவார்.அத்தோடு வாழ்க்கைச் செலவுப்படி 3525/= ,விசேட படி 3500/= மேலதிகமாகக் கிடைக்கும்


30 வருட காலச் சேவைக் காலம் இல்லாவிட்டால் 6 மாத காலத்துக்கு 1% குறையும் .20 வருட சேவைக் காலமாக இருந்தால் 10 வருட காலக் குறைவுக்கு 20% குறையும். ஒரு மாதத்துக்கு 0.2% குறையும். ஓய்வூதியப் பணிகொடையைப் பெறாவிட்டால் கடைசியாகப் பெற்ற சம்பளத்தின் 90% தொடக்கம் 85% குறைக்கப்படாத ஓய்வூதியமாகக் கிடைக்கும். இதன் 24 மாதப் பெருக்கமே பணிக்கொடை ஆகும். ஒருவர் 16,000/= சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு இருந்தால் இதன் 90% மானது 14,400/= ஆகும். இதன் 24 மாதப் பெருக்கத் தொகையான 3,45,600/= ஓய்வூதியப் பணிகொடையாகக் கிடைக்கும்.


அரசியல் உரிமை:

பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கு அரசியல் உரிமை இல்லை. இலங்கை கல்வி நிருவாக சேவை (SLEAS), இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை (SLTES), மற்றும் இலங்கை அதிபர் சேவை தரம் (SLPS) 1 க்கு இவ்வுரிமை இல்லை. ஆனால் இலங்கை ஆசிரியர் சேவையைச் (SLTS) சார்ந்தவர்களுக்கு அரசியல் உரிமை உண்டு.அதேவேளை அதிபர் சேவைதரம்2 இற்கும் உண்டு. அரசியல்உரிமை எனும் போது அரசியல் கட்சிகளில் அங்கத்துவம் பெறும் உரிமை, அரசியல் கட்சிகளை உருவாக்கும் உரிமை,அரசியல் கட்சிகளில் பதவிகளை வகிக்கும் உரிமை,அரசியல் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை போன்றவற்றைக்குறிப்பிடலாம்.


ஓர் ஆசிரியர் ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், மாகாணசபைத் தேர்தல்,உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடலாம், பிரசாரம் செய்யலாம், கருத்துத் தெரிவிக்கலாம், துண்டுப்பிரசுரங்கள், பதாதைகள், சுலோகங்கள் கட்டுரைகள் எழுதலாம், பிரசுரம் செய்யலாம்,பத்திரிகைகள் சஞ்சிகைகள் வெளியிடலாம்.


ஆசிரியர் ஒருவர் தேர்தலில் வேட்பாளராக இறங்கவிரும்பினால், வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு ஒருவாரம் முன்பதாகவே விடுமுறையில் செல்ல வேண்டும். இதற்காக அவர் வேட்புமனுத்தாக்கலுக்கு ,10நாட்களுக்கு முன்னதாக அதிபருடாக வலயக்கல்விப்பணிப்பாளருக்கு, எழுத்து மூலம் முன்னறிவித்தல் கொடுக்க வேண்டும். வெற்றிபெறும் பட்சத்தில் பதவியிலிருந்து இளைப்பாற்றப்படுவார்கள். ஆனால் உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இளைப்பாற வேண்டிய அவசியமில்லை. ஆசிரியர் தொழிலோடு, உள்ளூராட்சி பதவியையும் ஆற்றுவதற்கு உரிமையுண்டு. அச்சேவையை ஆற்ற முழுச்சம்பளத்துடன் கூடிய விடுமுறையுண்டு. வழமையான இடமாற்ற நடைமுறையிலரிருந்து அவருக்கு விலக்களிக்கப்படும். ஆனால் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவாராயின் தேர்தல் திகதியிலிருந்து தான்வகித்த பதவியிலிருந்து விலகுமாறு பணிக்கப்படுவார்.


தாபனவிதிக்கோவையின்படி(E.CODE) அரசியல்உரிமை இல்லாதவர்கள் எந்தத் தேர்தலாயினும் தமது வாக்குகளை அளிக்கின்ற உரிமை உள்ளது. அதைத் தவிர ஏனைய அரசியல்நடவடிக்கைகளில் பங்குபற்ற உரிமைகள் இல்லை. ஓர் ஆசிரியர் தனது கடமைகளை சரிவரச் செய்த பின்னர், திணைக்களத் தலைவரால் மறுக்கப்பட முடியாதவை உரிமைகளாகும். அதற்கப்பால் சில வசதிகள் உள்ளன. அவற்றை சலுகைகள் என்போம்.

மலையகத்தில் இறை நம்பிக்கை



இலங்கையில் பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் பெருந்தோட்ட பயிர் செய்கைக்காக தென்னிந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்டு, இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதியில் குடியேற்றப்பட்ட மக்களே மலையக மக்கள் என அழைக்ஙப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் கூழித்தொழிலுக்காக அழைத்துவரப்பட்டவர்களே. இவ்வாறு வந்த மக்கள் தங்களது உடைமைகளுடன் உறவுகளுடன் அங்கு பேணி பாதுகாத்து வந்த கலை கலாச்சார பண்பாட்டு அம்சங்களையும் சுமந்து வந்தனர். 


ஆங்கிலேயரின் ஆட்சியின் போது காணப்பட்ட அடக்கு முறையாலும், உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இன்மையாலும் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்ட  இவர்கள் அவ்வப்போது அந்த கலை கலாச்சார பண்பாட்டு அம்சங்களையும் மீட்டிப்பார்த்தனர். அவ்வாறு மீட்டியவையே இன்றும் புழக்கத்தில் உள்ள கூத்துக்களும் சடங்குமுறைகளும். அன்று ஆறு மணி ஆகிவிட்டால் எல்லா வீடுகளிலும் புராண கதைகளும், கூத்து பாடல்களும் முழங்கிக் கொண்டிருக்குமாம். இவைகள் எம் மக்களுக்கு இன்பத்தையும் மன அமைதியையும் அள்ளித்தந்தது. மலையகத்தில் எமது முன்னோர்கள் எமக்கு அளித்த கலைகள் பல உள்ளன. அவையாவன பொன்னர் சங்கர் கூத்து, காமன் கூத்து, அர்ச்சுனன் தபசு, நல்ல தங்கால் கதை வீரபத்திரன் ஆட்டம், காட்டேரியம்மன், லவ குசா என்பன. 


காட்டேரியம்மன் 


அன்றைய கால மனிதன் இயற்கை கூறுகளால் வரும் பாதிப்புக்களை தடுப்பதற்க்காக நீர், நெருப்பு, மரம், கல் என இயற்க்கையுடன் சார்ந்தவைகளை கடவுளாக எண்ணி வழிபட்டான். அவ்வாறு மழையை வேண்டியும் மழையினால் வரும் அனர்த்தங்களை கட்டுப்படுத்த வேண்டியும் மாரியம்மனை வழிபட்டனர். இவ் மாரியம்மனின்  அவதாரங்களில் ஒன்றுதான் இந்த கரிய நிற தோற்றமுடைய காட்டேரியம்மன். 


இலங்கை திருநாட்டில் இயற்க்கை எழில் மிகு நுவரெலியா மாவட்டத்தில் தேயிலை மலைகளும் கலை கலாச்சாரமும் கலந்த அழகிய கிராமம் தான் லிந்துல சென்றகுலர்ஸ் தோட்டம். மலையகத்தின் தனித்துவம் மிக்க கலைகளான காமன் கூத்து, பொன்னர் சங்கர் கூத்து, காட்டேரியம்மன், குறவஞ்சி ஆட்டம், காவடி, கோலாட்டம் போன்றவை இவ்வூரில் இன்றும் உயிர்ப்புடன் இயங்குவதை காணலாம். இந்த வரிசையில் மிக முக்கியமான ஒன்றுதான் காட்டேரியம்மன் திருவிழா.


இந்தியாவில் இருந்து வருகை தந்த பெருந்திரளான கூழித்தொழிலாளர்களில் பெரம்பலூர், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் லிந்துல சென்றகுலர்ஸ் தோட்டத்தில் குடியமர்த்தப்பட்டனர். இன்றும் இந்தியாவின் பெரம்பலூர், நாமக்கல் போன்ற மாவட்டங்களிலேயே இந்த காட்டேரியம்மன் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. இலங்கையில் சென்றகுலர்ஸ் தோட்டத்தில் மாத்திரமே காட்டேரியம்மன் திருவிழா கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


இன்றைய வழிபாட்டு முறை 


பங்குனி மாதம் என்றாலே அது திருவிழா மாதம் தான் எல்லா ஊர்களிலும் 5 நாள் 7 நாள் என குதூகலமாக இருக்கும். கொடிமரம் நட்டு, கரகம் பாலித்து, பாற்குட பவணி, உள்ளூர் வளம், வெளியூர் வளம், மஞ்சள் நீராட்டு விழா என பயபக்தியாக காணப்படும். அதேதான் இந்த சென்றகுலர்ஸ் தோட்டத்திலும் திருவிழா காலம் ஆரம்பித்து விட்டால் போதும் சுற்றியுள்ள அத்தனை ஊருக்கும் இன்ப மழை தான். திருவிழா ஆரம்பத்தின் பின்னர் என்னவாக இருந்தாலும் சரி செவ்வாய்க்கிழமையை காட்டேரியம்மனுக்காக ஒதுக்கி விடுவர். ஆம் பங்குனி மாதம் திருவிழா ஆரம்பித்து செவ்வாய்கிழமை தான் காட்டேரியம்மன் திருவிழா நடைபெறும். 


திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு காட்டேரியம்மன் வேடம் தரிப்பவர் பிறந்த மேனியுடன் சுடுகாட்டிற்கு செல்வார். அங்கு சென்று காட்டேரியம்மனுக்கு சூடம், தேசிக்காய், பால், முட்டை என்பவற்றை படையல் வைப்பார். படையல் வைத்து வழிபட்ட பின்னர் காட்டேரி வேடம் தரிப்பவருக்கு அருள் வரும். காட்டேரியம்மன் ஆற்கொண்ட பின்னர் அம்மன் தெரிவு செய்த இடத்திலிருந்து சுடுகாட்டு மண்ணை எடுத்துக்கொண்டு அதிகாலை 3 மணியளவில் வீட்டுக்கு வந்து மண்ணை ஒழித்து வைப்பார். அதன் பின்பு குழுவில் உள்ளவர்கள் காலை 6 மணிக்கு இந்த மண்ணை பெற்று சலித்து காட்டேரியம்மனுக்கு வீட்டினுல் படைத்து வேடம் தரிப்பவரின் அணிகளனுடன் வைப்பார். 


பின்பு காட்டேரி வேடம் தரிப்பவர் வேடமணிந்து தயார் நிலைக்கு வருவார். அப்பொழுது கரிய நிறவுருவம்,கருமை நிற உடைகள்,வெளிதள்ளிய நாக்கு, ரத்தம் தோய்ந்த உதடுகள்,கோரைப்பற்க்கள், தலைவிரி கோலம், கையில் சுலகு,காலில் சதங்கை என காட்டேரி அச்சமூட்டும் தோற்றமளிப்பாள். அதேபோல் எதிரணியாகவும் அரக்கர்களாகவும் தயார் நிலையில் இருக்கும் ஒன்பது அல்லது பதினொரு பேர் கொண்ட குழுவினர் மிகவும் கருப்பாகவும், உடல் முழுவதும் கருப்பு நிற அரிதரம் பூசி, கருப்பு நிற கால்சட்டை அணிந்து, காலில் சதங்கை, தலையில் கருப்பு துண்டு கட்டி,கையில் உலக்கை ஏந்தியும் காட்சியளிப்பர். 


வீட்டினுள் காட்டேரி வேடம் தரித்தவர்க்கு படையல்கள் வைத்து சுடுகாட்டில் இருந்து எடுத்து வந்த மண் உணவாக கொடுக்கப்படும் அதனை சாப்பிட சாப்பிட காட்டேரியின் அருளும் கோபமும் உக்கிரமடையும். இதனை தொடர்ந்தே தனது விளையாட்டையும் ஆட்டத்தையும் ஆரம்பிப்பாள் காட்டேரித்தாய். காலை 11 மணியளவில் ரோதமுனி ஆலயத்தில் ஆரம்பமாகும் இந்நிகழ்வில் காட்டேரியம்மனோடு சேர்ந்து எதிரில் உள்ள உலக்கை ஏந்திய குழுவினரும் இசைக்கு ஏற்றாற் போல் ஆடுவர். இங்கு பிரதான இசைக்கருவியாக தப்பு பயன்படுத்தப்படுகின்றது. காட்டேரியம்மனானது உலக்கை ஏந்தி ஆடுபவர்களை துஸ்டர்களாக எண்ணி, அவர்களை விரட்டியடிப்பது தீமையை விலக்கி நன்மை பெருக்குவதாக அமைந்துள்ளது.  மேலும் காட்டேரியம்மன் ஒரு உயரமான மலையில் வாழ்வதாகவும் அதனை இடிக்க துஸ்டர்கள் உலக்கையை காட்டுவதாகவும் அவர்களை விரட்டியடிக்கவே காட்டேரியம்மன் அவதரித்ததாகவும் ஊர் மக்கள் நம்புகின்றனர். 


மேலும் காட்டேரியம்மன் தப்பிசைக்கு ஏற்றவாறு சுலகை விசுக்கி விசுக்கி ஆடி வருவார். எதிரணியில் உலக்கை வைத்துள்ளஒருவர் " பச்சொலக்க " எனக்கூற அணியில் உள்ள ஏனையோர் " பாரமில்லை " என கோசமிடுவர். "பச்சொலக்க பாரமில்லை" என்ற கோசம் கேட்டவுடன் அம்மனுக்கு கோபம் உச்சமடையும். காட்டேரியம்மனை கட்டுப்பாட்டிற்க்குள் வைத்துக் கொள்வதற்க்காக இடுப்பில் துணி ஒன்றை கட்டி பின்னால் இருந்து இழுத்து இழுத்து விடுவர். மேலும் சுற்றியுள்ள பக்தர்கள் ஓஓ.....ஹாஹாஹா என கோசமிடுவர். சுமார் 3 மணித்தியால ஆட்டத்தின் பின்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்க்கு வருகை தந்து இறுதியாக கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவதுடன் இந் நிகழ்வு நிறைவு பெறுகிறது. 


ஆரம்பக்காலத்தில் வருகைதந்த கருப்பண்ணன் கவுண்டர் முதல் மாயழகு புஷ்பராஜ் தலைமுறை வரை சுமார் 6 தலைமுறைகள் தொடர்ச்சியாக இன்று வரை இந்த நாடக பண்புடைய சடங்கை செய்து வருகின்றனர். ஊர் நன்மைக்காகவும், ஊரின் காவலுக்காகவும் மக்கள் நலம் வேண்டியும் இந் நிகழ்வு நடைபெறுவதாக சென்றகுலர்ஸ் தோட்டத்தை சேர்ந்த கலைஞர்களாகிய சுப்பிரமணியம் ராசு, நல்லு பெரியசாமி என்போர் தெரிவித்தனர். 

மேலும் காட்டேரியம்மனை கருப்பண்ணன் கவுண்டர் குடும்பத்தினர் குலதெய்வமாக வழிபட்டுள்ளனர். இந்நிகழ்வின் அரங்க வெளியாக தெரு வீதி பயன்படுத்தப்படுகின்றது. மேலும் பலர் நேர்த்தி இட்டு காட்டேரியம்மனை வழிபடுவர். இவ்வளவு காலமும் முறையாக பேணப்பட்டு நேர்த்தியாக செய்யப்பட்ட இந்த சடங்கு முறை எதிர்காலத்திலும் எந்த வித தொய்வும் இன்றி சீரும் சிறப்புமாக செயற்பட வேண்டும். 


ஒரு இனம் அழிக்கப்பட வேண்டும் என்றால் அந்த இனத்தை போர் ஆயுதங்கள் கொண்டு தாக்க வேண்டிய, அழிக்க வேண்டிய அவசியமில்லை அவர்களின் கலை கலாச்சார பண்பாட்டு அம்சங்களை சீர்குலைத்தால் போதும் அந்த இனம் தானாக அழிந்து விடும். இவ்வாறு ஒருகாலமும் நடக்கக்கூடாது. எனவேதான் எமக்கு எமது கலை கலாச்சார பண்பாட்டு அம்சங்களை பேணி பாதுகாக்க வேண்டிய தலையாய கடமை உள்ளது.

முதியோர்களின் சமூக பாதுகாப்பு

 


கடந்த 01.10.2020 நாளன்று உலகளாவிய ரீதியல் முதியோர் தினத்தை கொண்டாடப்பட்டதை தொடர்ந்து மிக முக்கியமாக பேசப்பட்ட விடயம் யாதெனில் “உலக சனத்தொகை மதிப்பீடுகளின் படி 21ஆம் நூற்றாண்டு முதியோர்களின் ஆண்டாக கருதும் அதே நேரத்தில் அண்மைய மதிப்பீடுகளின் படி இலங்கையிலும் 2041 ஆம் ஆண்டளவில் முதியோர்களின் எண்ணிக்கையானது தற்போதைய அளவிலும் பார்க்க 2 மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்பதாகும். இவ்வாறான நிலையில் இவ் முதியோர்களின் சனத்தொகை அதிகரிப்பு வீதமானது எதிர்காலத்தில் நாட்டின் அரசியல், சமுக, பொருளாதாரத்தில், மாற்றத்தை ஏற்படுத்தும் அதே வேளை முதியவர்களின் வருமானம், சுகாதாரம், கல்வி மற்றும் தொழில் வாய்ப்பு, சாதகமான சமுக சூழல் போன்ற பிரதான அம்சங்களில் முதியோர்களின் நிலைமை தொடர்பில் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை இவ் எதிர்காலத்திலத்திற்காக இவ் நிகழ்காலத்திலே முன்னெடுக்க வேண்யுள்ளது.  


ஆனால் இவ்வாறான எதிர்கால நிலமை குறித்து சிந்திப்பதிலும் பார்க்க இன்றைய நிலையில் நாடளவிய ரீதியில் முதியோர்களின் சமுக பாதுகாப்பு என்பது கேள்விக்குரியான நிலையிலே உள்ளது எனலாம். காரணம் நாம் ஒவ்வொருவரும் தினசரி நாளொன்றில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் பொதுவெளியில் அநாதரவாக கிடக்கும் எத்தனையோ முதியோர்களையும் வருமான வழியின்றி நடைபாதையில் யாசகம் பெறும் முதியோர்களையும் தங்குமிட வசதிகள் இன்றி இரவு பொழுதுகளை பொது இடங்களிலும் நடைபாதைகளிலும் கண்ணீருடன் கழிக்கும் முதியோர்களையும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டு மன ஆதகங்களை எங்களிடையே கொட்டி தீர்க்கும் எண்ணிக்கையற்ற எத்தனையோ முதியோர்களையும் கடந்து கொண்டிருக்கின்றோம். இவ்வாறான நிலையில் பாலின அடிப்படையில் ஆண் முதியோர்களிலும் பார்க்க பெண் முதியோர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமானதே எனலாம். காரணம் ஆண்கள் என்பதிலும் பார்க்க ஒப்பீட்டளவில் பெண்களுக்கே உடல், உள பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ரீதியான தேவைப்பாடுகள் அதிகமானதாக காணப்படுகிறது.  


அந்த வகையில் பெண் முதியோர்களுக்கு தற்காலத்தில் எவ்வாறான சமுகபாதுகாப்பின்மை நிலவுகிறது என்பதையும் அவற்றிலிருந்து அவர்களை பாதுகாப்பதற்கான காணப்படும் சட்ட மற்றும் சமுக நல ஏற்பாடுகள் குறித்தும் பின்வருமாறு சுருக்கமாக ஆராயலாம்.

பின்வருவன பெண் முதியோர்கள் தனிப்பட்ட, குடும்ப மற்றும் சமுக மட்டத்தில்  எதிர்நோக்கும் பிரச்சினைகளாக காணப்படுகின்றன. 


1. பிள்ளைகளால் கைவிடப்படல் : இன்றைய நவீன காலத்தில் தனிப்பட்ட சுதந்திரம், குடும்ப பொருளாதார நெருக்கடி போன்ற இன்னோரான காரணிகளால் கூட்டு குடும்பங்களின் எண்ணிக்கை அருகி வரும் நிலையலில் பெருமளவிலான பெற்றோர்கள் தன் பிள்ளைகளால் முறையான பாராமரிக்கப்படாமலும் சில நேரங்களில் கைவிடப்பட்டும் விடுகின்றனர். எனவே தங்களது அடிப்படை தேவைகளை கூட நிவர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு அநாதரவாக்கப்படுகின்றனர்.


2. குடும்ப வன்முறை : பெருமளவிலான பெண் முதியோர்கள் தங்கள் பிள்ளைகளாலும் ஏனைய குடும்ப உறுப்பினர்களாலும் குடும்ப வன்முறைக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன.


3. மோசடியானஃ பிறழ்வான முறையில் ஆவணங்களில் பெற்றுக்கொள்ளும் கையொப்பங்களினூடாக சொத்துக்களை சூறையாடல் : இவ்வாறான சம்பவங்கள் நாடளாவிய ரீதியில் இடம்பெறுகிறது. பெரும்பாலான முதியோர்கள் கல்வியறிவு மற்றும் விழ்ப்புணர்வு குறைவாகவும் பிள்ளளை பாசம் போன்ற உணர்ச்சி நிலை மிகுந்தவர்களாக இருக்கின்ற காரணத்தினால் எமது முதியோர்களில் அநேகமானோர் குறித்த ஆவணங்களை வாசித்து விளங்கி கொள்ளாதும் சில நேரங்களில் வெறும் நம்பிக்கையின் அடிப்படையிலும்; வெற்று கடதாசிகளில் கையொப்பங்கள் ஃ கைவிரல் அடையாளங்களை இடுவதுண்டு. இவ்வாறான முறைகளினூடாக பெற்ற பிள்ளைகளால் மட்டுமன்றி பிற நபர்களாலும் சொத்துக்களை சூறையாடும் நிகழ்வுகளும் ஏற்படுகிறது. இச் சந்தர்ப்பங்களில் மோசமான பின்விளைவுகளை அறியாது செயற்படுவதினால் முதியோர்கள் தங்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுதல் முதலான பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும். 


4. முதியவர்கள் புத்திசாலித்தனமற்ற வகையில் சொத்துக்களை வழங்குவதும் பின் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்படலும் : பெண் முதியோர்கள் பெரும்பாலும் தமது சொத்துக்களை பிள்ளைகளின் மேல் உள்ள பாசம் , நம்பிக்கை அடிப்படையில் எவ்வித நிபந்தனைகள் இன்றி தாங்கள் வாழும் வரையான காலப்பகுதியல் அதனை அனுபவிக்கும் உரிமையை தம்மிடம் வைத்துக்கொள்ளாது அவர்களுக்கு முழுவதுமாக கையளித்தோ ஃ நன்னொடையளித்தோ விடுகின்றனர். ஆனால் பின்னரான சந்தர்ப்பங்களில் சில பிள்ளைகள் சொத்துக்களை பெற்றுக்கொண்டதன் பின்னர் பெற்றோர்களை கைவிட்டுவிடுவதுண்டு.


5. தொழில் இடங்களில் சம்பள மோசடி : இன்றைய காலகட்டத்தில் எத்தனையோ முதியவர்கள் வயது முதிர்ந்த காலத்திலும் வயிற்று பிழைப்பிற்காக தொழில் செய்து வருகின்றனர். ஆனால் சில தொழிலிடங்களில் அவர்களக்கான உரிய கொடுப்பனவுகளை கொடுக்காது மோசடி செய்யப்படுகின்றனர்.


6. அடிப்படை வசதிகளை வசதிகள் இன்றி வாழ்தல் :இன்றைய காலக்கட்டத்திலும் உண்ண உணவு, உடுத்த உடை மற்றும் தங்களுக்கென சொந்த அல்லது தற்காலிக தங்குமிட வசதிகள் இன்றி; பல முதியோர்கள் நிர்க்கதியாய் இருக்கின்றனர்.


7. கடுமையான அங்கவீனமுற்ற நிலையில் மருத்துவ வசதிகளை பெற்றுக்கௌ;ள முடியாது நோய்நிலைகளை எதிர்நோக்கும் பெண் முதியோர்கள் : குணப்படுத்த முடியாத மற்றும் குணப்படுத்தக்கூடிய நோய் நிலைமைகளை கொண்டிருக்கும் சில முதியோர்கள் அதற்கான மருத்துவ செலவீனங்களை பெற்றுக்கொள்ள முடியாது உதவிகளுக்கு ஆதரவின்றி போரடியும் வருகின்றனர்.

வாசிப்பு மனிதனைப் பூரணமாக்கும்

  பொதுஅறிவுடன் மொழிவளத்தையும் வளர்ப்பது வாசிப்புப் பழக்கம்!  வாசிப்பின் ஊடாகவே ஒருவன் பூரண  மனிதனாகலாம். வாசிப்பின் ஊடாகவே அறிவுடைய சமூகத்தை...