Showing posts with label மலையகம். Show all posts
Showing posts with label மலையகம். Show all posts

Monday, 19 October 2020

மலையகத்தில் இறை நம்பிக்கை



இலங்கையில் பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் பெருந்தோட்ட பயிர் செய்கைக்காக தென்னிந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்டு, இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதியில் குடியேற்றப்பட்ட மக்களே மலையக மக்கள் என அழைக்ஙப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் கூழித்தொழிலுக்காக அழைத்துவரப்பட்டவர்களே. இவ்வாறு வந்த மக்கள் தங்களது உடைமைகளுடன் உறவுகளுடன் அங்கு பேணி பாதுகாத்து வந்த கலை கலாச்சார பண்பாட்டு அம்சங்களையும் சுமந்து வந்தனர். 


ஆங்கிலேயரின் ஆட்சியின் போது காணப்பட்ட அடக்கு முறையாலும், உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இன்மையாலும் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்ட  இவர்கள் அவ்வப்போது அந்த கலை கலாச்சார பண்பாட்டு அம்சங்களையும் மீட்டிப்பார்த்தனர். அவ்வாறு மீட்டியவையே இன்றும் புழக்கத்தில் உள்ள கூத்துக்களும் சடங்குமுறைகளும். அன்று ஆறு மணி ஆகிவிட்டால் எல்லா வீடுகளிலும் புராண கதைகளும், கூத்து பாடல்களும் முழங்கிக் கொண்டிருக்குமாம். இவைகள் எம் மக்களுக்கு இன்பத்தையும் மன அமைதியையும் அள்ளித்தந்தது. மலையகத்தில் எமது முன்னோர்கள் எமக்கு அளித்த கலைகள் பல உள்ளன. அவையாவன பொன்னர் சங்கர் கூத்து, காமன் கூத்து, அர்ச்சுனன் தபசு, நல்ல தங்கால் கதை வீரபத்திரன் ஆட்டம், காட்டேரியம்மன், லவ குசா என்பன. 


காட்டேரியம்மன் 


அன்றைய கால மனிதன் இயற்கை கூறுகளால் வரும் பாதிப்புக்களை தடுப்பதற்க்காக நீர், நெருப்பு, மரம், கல் என இயற்க்கையுடன் சார்ந்தவைகளை கடவுளாக எண்ணி வழிபட்டான். அவ்வாறு மழையை வேண்டியும் மழையினால் வரும் அனர்த்தங்களை கட்டுப்படுத்த வேண்டியும் மாரியம்மனை வழிபட்டனர். இவ் மாரியம்மனின்  அவதாரங்களில் ஒன்றுதான் இந்த கரிய நிற தோற்றமுடைய காட்டேரியம்மன். 


இலங்கை திருநாட்டில் இயற்க்கை எழில் மிகு நுவரெலியா மாவட்டத்தில் தேயிலை மலைகளும் கலை கலாச்சாரமும் கலந்த அழகிய கிராமம் தான் லிந்துல சென்றகுலர்ஸ் தோட்டம். மலையகத்தின் தனித்துவம் மிக்க கலைகளான காமன் கூத்து, பொன்னர் சங்கர் கூத்து, காட்டேரியம்மன், குறவஞ்சி ஆட்டம், காவடி, கோலாட்டம் போன்றவை இவ்வூரில் இன்றும் உயிர்ப்புடன் இயங்குவதை காணலாம். இந்த வரிசையில் மிக முக்கியமான ஒன்றுதான் காட்டேரியம்மன் திருவிழா.


இந்தியாவில் இருந்து வருகை தந்த பெருந்திரளான கூழித்தொழிலாளர்களில் பெரம்பலூர், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் லிந்துல சென்றகுலர்ஸ் தோட்டத்தில் குடியமர்த்தப்பட்டனர். இன்றும் இந்தியாவின் பெரம்பலூர், நாமக்கல் போன்ற மாவட்டங்களிலேயே இந்த காட்டேரியம்மன் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. இலங்கையில் சென்றகுலர்ஸ் தோட்டத்தில் மாத்திரமே காட்டேரியம்மன் திருவிழா கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


இன்றைய வழிபாட்டு முறை 


பங்குனி மாதம் என்றாலே அது திருவிழா மாதம் தான் எல்லா ஊர்களிலும் 5 நாள் 7 நாள் என குதூகலமாக இருக்கும். கொடிமரம் நட்டு, கரகம் பாலித்து, பாற்குட பவணி, உள்ளூர் வளம், வெளியூர் வளம், மஞ்சள் நீராட்டு விழா என பயபக்தியாக காணப்படும். அதேதான் இந்த சென்றகுலர்ஸ் தோட்டத்திலும் திருவிழா காலம் ஆரம்பித்து விட்டால் போதும் சுற்றியுள்ள அத்தனை ஊருக்கும் இன்ப மழை தான். திருவிழா ஆரம்பத்தின் பின்னர் என்னவாக இருந்தாலும் சரி செவ்வாய்க்கிழமையை காட்டேரியம்மனுக்காக ஒதுக்கி விடுவர். ஆம் பங்குனி மாதம் திருவிழா ஆரம்பித்து செவ்வாய்கிழமை தான் காட்டேரியம்மன் திருவிழா நடைபெறும். 


திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு காட்டேரியம்மன் வேடம் தரிப்பவர் பிறந்த மேனியுடன் சுடுகாட்டிற்கு செல்வார். அங்கு சென்று காட்டேரியம்மனுக்கு சூடம், தேசிக்காய், பால், முட்டை என்பவற்றை படையல் வைப்பார். படையல் வைத்து வழிபட்ட பின்னர் காட்டேரி வேடம் தரிப்பவருக்கு அருள் வரும். காட்டேரியம்மன் ஆற்கொண்ட பின்னர் அம்மன் தெரிவு செய்த இடத்திலிருந்து சுடுகாட்டு மண்ணை எடுத்துக்கொண்டு அதிகாலை 3 மணியளவில் வீட்டுக்கு வந்து மண்ணை ஒழித்து வைப்பார். அதன் பின்பு குழுவில் உள்ளவர்கள் காலை 6 மணிக்கு இந்த மண்ணை பெற்று சலித்து காட்டேரியம்மனுக்கு வீட்டினுல் படைத்து வேடம் தரிப்பவரின் அணிகளனுடன் வைப்பார். 


பின்பு காட்டேரி வேடம் தரிப்பவர் வேடமணிந்து தயார் நிலைக்கு வருவார். அப்பொழுது கரிய நிறவுருவம்,கருமை நிற உடைகள்,வெளிதள்ளிய நாக்கு, ரத்தம் தோய்ந்த உதடுகள்,கோரைப்பற்க்கள், தலைவிரி கோலம், கையில் சுலகு,காலில் சதங்கை என காட்டேரி அச்சமூட்டும் தோற்றமளிப்பாள். அதேபோல் எதிரணியாகவும் அரக்கர்களாகவும் தயார் நிலையில் இருக்கும் ஒன்பது அல்லது பதினொரு பேர் கொண்ட குழுவினர் மிகவும் கருப்பாகவும், உடல் முழுவதும் கருப்பு நிற அரிதரம் பூசி, கருப்பு நிற கால்சட்டை அணிந்து, காலில் சதங்கை, தலையில் கருப்பு துண்டு கட்டி,கையில் உலக்கை ஏந்தியும் காட்சியளிப்பர். 


வீட்டினுள் காட்டேரி வேடம் தரித்தவர்க்கு படையல்கள் வைத்து சுடுகாட்டில் இருந்து எடுத்து வந்த மண் உணவாக கொடுக்கப்படும் அதனை சாப்பிட சாப்பிட காட்டேரியின் அருளும் கோபமும் உக்கிரமடையும். இதனை தொடர்ந்தே தனது விளையாட்டையும் ஆட்டத்தையும் ஆரம்பிப்பாள் காட்டேரித்தாய். காலை 11 மணியளவில் ரோதமுனி ஆலயத்தில் ஆரம்பமாகும் இந்நிகழ்வில் காட்டேரியம்மனோடு சேர்ந்து எதிரில் உள்ள உலக்கை ஏந்திய குழுவினரும் இசைக்கு ஏற்றாற் போல் ஆடுவர். இங்கு பிரதான இசைக்கருவியாக தப்பு பயன்படுத்தப்படுகின்றது. காட்டேரியம்மனானது உலக்கை ஏந்தி ஆடுபவர்களை துஸ்டர்களாக எண்ணி, அவர்களை விரட்டியடிப்பது தீமையை விலக்கி நன்மை பெருக்குவதாக அமைந்துள்ளது.  மேலும் காட்டேரியம்மன் ஒரு உயரமான மலையில் வாழ்வதாகவும் அதனை இடிக்க துஸ்டர்கள் உலக்கையை காட்டுவதாகவும் அவர்களை விரட்டியடிக்கவே காட்டேரியம்மன் அவதரித்ததாகவும் ஊர் மக்கள் நம்புகின்றனர். 


மேலும் காட்டேரியம்மன் தப்பிசைக்கு ஏற்றவாறு சுலகை விசுக்கி விசுக்கி ஆடி வருவார். எதிரணியில் உலக்கை வைத்துள்ளஒருவர் " பச்சொலக்க " எனக்கூற அணியில் உள்ள ஏனையோர் " பாரமில்லை " என கோசமிடுவர். "பச்சொலக்க பாரமில்லை" என்ற கோசம் கேட்டவுடன் அம்மனுக்கு கோபம் உச்சமடையும். காட்டேரியம்மனை கட்டுப்பாட்டிற்க்குள் வைத்துக் கொள்வதற்க்காக இடுப்பில் துணி ஒன்றை கட்டி பின்னால் இருந்து இழுத்து இழுத்து விடுவர். மேலும் சுற்றியுள்ள பக்தர்கள் ஓஓ.....ஹாஹாஹா என கோசமிடுவர். சுமார் 3 மணித்தியால ஆட்டத்தின் பின்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்க்கு வருகை தந்து இறுதியாக கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவதுடன் இந் நிகழ்வு நிறைவு பெறுகிறது. 


ஆரம்பக்காலத்தில் வருகைதந்த கருப்பண்ணன் கவுண்டர் முதல் மாயழகு புஷ்பராஜ் தலைமுறை வரை சுமார் 6 தலைமுறைகள் தொடர்ச்சியாக இன்று வரை இந்த நாடக பண்புடைய சடங்கை செய்து வருகின்றனர். ஊர் நன்மைக்காகவும், ஊரின் காவலுக்காகவும் மக்கள் நலம் வேண்டியும் இந் நிகழ்வு நடைபெறுவதாக சென்றகுலர்ஸ் தோட்டத்தை சேர்ந்த கலைஞர்களாகிய சுப்பிரமணியம் ராசு, நல்லு பெரியசாமி என்போர் தெரிவித்தனர். 

மேலும் காட்டேரியம்மனை கருப்பண்ணன் கவுண்டர் குடும்பத்தினர் குலதெய்வமாக வழிபட்டுள்ளனர். இந்நிகழ்வின் அரங்க வெளியாக தெரு வீதி பயன்படுத்தப்படுகின்றது. மேலும் பலர் நேர்த்தி இட்டு காட்டேரியம்மனை வழிபடுவர். இவ்வளவு காலமும் முறையாக பேணப்பட்டு நேர்த்தியாக செய்யப்பட்ட இந்த சடங்கு முறை எதிர்காலத்திலும் எந்த வித தொய்வும் இன்றி சீரும் சிறப்புமாக செயற்பட வேண்டும். 


ஒரு இனம் அழிக்கப்பட வேண்டும் என்றால் அந்த இனத்தை போர் ஆயுதங்கள் கொண்டு தாக்க வேண்டிய, அழிக்க வேண்டிய அவசியமில்லை அவர்களின் கலை கலாச்சார பண்பாட்டு அம்சங்களை சீர்குலைத்தால் போதும் அந்த இனம் தானாக அழிந்து விடும். இவ்வாறு ஒருகாலமும் நடக்கக்கூடாது. எனவேதான் எமக்கு எமது கலை கலாச்சார பண்பாட்டு அம்சங்களை பேணி பாதுகாக்க வேண்டிய தலையாய கடமை உள்ளது.

மலையகப் பெண்களும் பாராளுமன்றமும்

அண்மையில் நாடளாவிய ரீதியில் பேசப்பட்டு வரும் ஒரு தொணிப்பொருள் பெண்களின் அரசியல் பிரவேசம் என்பது சவால் மிக்கதொரு பயணம்”. உண்மையில் பெண்களுக்கான பிரத்தியேக உரிமைகளை வென்றெடுக்கவும் அவர்களின் தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்தவும் பிரத்தியேக பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி தீர்வுகளை முன்வைப்பதற்குமான ஒரு அதிகாரம் பொருந்திய பெண் தலைமைத்துவம் அவசியமானதாகும். இதன்படி இலங்கையானது ஆசியாவின் நீண்டதொரு அரசியல் கலாசாரம் கொண்ட நாடுகளில் ஒன்றாகும் என்பதுடன் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆண்களும் பெண்களும் சமமான சந்தர்ப்பம் மற்றும் உரிமைகளை உடையவர்கள். ஆனால்; அரசியல் உரிமைகளை பொருத்தவரை பெண்கள் இரண்டாம் தர பிரஜைளாகவே கருதப்படுகின்றனர். காரணம் பெண்களின் அரசியல் பிரவேசம் (பாராளுமன்றம், மாகாணசபை, ஏனைய உள்ளுராட்சி தாபனங்கள்) மிக குறைவான வீதத்திலும் சவால்நிலைக்குட்பட்டதாகவும் நிலவுகிறது. இதற்கு எமது மலையக பிரதேசமும் விதிவிலக்கல்ல. இது குறித்து பின்வருமாறு சுருக்கமாக ஆராய்வோம்.


மலையகத்தை பொருத்தவரை நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை மற்றும் இரத்தினபுரி, கேகாலை (மலையகம் என்பது தேசிய ரீதியில் பரந்துபட்டது. கட்டுரையின் நோக்கத்திற்காக தேர்தல் மாவட்டங்கள் சுட்டிகாட்டப்பட்டுள்ளது) பிரதேசங்களிலிருந்து பெண்களின் பாரளுமன்றத்திற்கான அரசியல் பிரவேசம் மிகவும் பின்தங்கிய நிலையிலே இருக்கிறதென்பது வெளிப்படையான நிதர்சனம். இலங்கையில் 1931 ஆம் ஆண்டில் முதல் பெண் பாராளுமன்ற பிரவேசத்திலிருந்து தற்போது (2020) வரை 20 ற்கும் குறைவான பெண்களே தேர்தல் மற்றும் தேசிய பட்டியல் முறைமையினூடாக மலையகப் பிரதேசத்திலருந்து பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்துள்ளனர். அவ்வாறு மலையக பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற அங்கத்துவம் வகித்த பெண்கள் சிலர்: 

நுவரெலிய -னுரரெவாடையமய ஆரனலையளெநடயபந சுநரெமய ஆநnமைந ர்நசயவா (21ஃ07ஃ1977 -20ஃ12ஃ1988 இ15ஃ02ஃ1989 -18ஃ08ஃ2000)இ

 கண்டி -வுயஅயசய முரஅயசi ஐடயபெயசயவநெ 06ஃ1949 - 08ஃ04ஃ1952, பதுளை- ர்நஅய சுயவயெலயமநஇ இரத்தினபுரி - ளுரசயபெயni ஏளையமய நுடடயறயடய.


இதில் வெளிப்படையான விடயம், பல்லினம் சமுகம் கொண்டதும் நாட்டின் சிறுபான்மை மக்கள் செறிந்து வாழக்கூடிய மலையக பிரதேசங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பெண்கள் அனைவருமே நாட்டின் பெரும்பான்மை இனத்தினை சார்ந்த பெண்களே தவிர மலையக பிரதேசத்தின் சிறுபான்மை இனத்திலிருந்து எந்தவொரு பெண்களும் தெரிவு செய்யப்ட்டிருக்கவில்லை. 

அப்படியிருக்க இதுவரை பாராளுமன்ற பிரதிநிதித்துவம் ஒன்றை பெற்றிருக்கவில்லை எனினும் அதற்கான முயற்சிகள் மேற்க்கொள்ளவில்லையென குறிப்பிட முடியாது. அதாவது மலையகத்தில் சிறுபான்மையின பெண் வேட்பாளர்கள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்டம் வரையில் மாத்திரமே வந்துள்ளனரே தவிர வெற்றிபெரும் கட்டத்தினை இதுவரை எட்டியிருக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். காரணம் நடைமுறையில் மலையக பெண்களின் பாராளுமன்றத்திற்கான அரசியல் பிரவேசம் சவாலுக்குரியதாக காணப்படுகின்றமை.

இவ்வாறு மலையக பெண்களின் பாராளுமன்றத்திற்கான அரசியல் பிரவேசம் சந்தர்ப்பம் சவாலுக்குரியதாகவும் பின்தங்கிய நிலையிலும் இருப்பதற்கான பொதுவான காரணங்களாக பின்வருவன அடையாளப்படுத்தப்படுகின்றது. 


1. அரசியலில் ஆணாதிக்கமும் கட்சி அரசியலும்

மலையக அரசியல் கட்சிகளை பொருத்தவரை, அவற்றில் பெண் உறுப்பினர்களை விட கூடுதலாக ஆண் உறுப்பினர்களே உள்ளனர். தேர்தலில் களமிறங்கும் போதும் கட்சி ரீதியாக / சுயேட்சை குழு அடிப்படையிலோ போட்டியிடுவதிலும் பெண் வேட்பாளர்களை விட ஆண் வேட்பாளர்களே அதிகம். ஆக பொதுவெளியில் மலையக அரசியல் ஒரு ஆணாதிக்க அரசியலாகவே தோற்றமளிக்கின்றது.

மேலும் பாராளுமன்ற தேர்தலின் போது கட்சிகளில் பொதுவாக பெண்களை வேட்பாளர்களாக நிறுத்துவதும் அவற்றோடு; சாதாரண பின்னனி கொண்ட பெண்களை கட்சியில் உள்வாங்குவதும் மிக குறைவாகும். பெரும்பாலும் அரசியல் செல்வாக்கு கொண்ட கட்சியின் கொள்கைகளோடு முரண்படாது செல்லும் பெண்களை ஓரளவு உள்வாங்கியுள்ளது. இதிலிருந்து விடுத்து சுயேட்சையாக பெண்கள் தேர்தலில் களமிறங்கினாலும் (தேர்தலின் போது/முன்/பின்) ஆணாதிக்க சமுகத்தால் அவர்களுக்கெதிராக பின்வரும் இரு வழிமுறையிலான வன்முறைகளை சமீப காலத்தில் கட்டவிழ்க்கப்ட்டிருந்ததை அவதானிக்க கூடியதாகவிருந்தது.

1. குறித்த பெண்வேட்பாளர்களின் வெற்றியை தடுக்கும் முன்னேற்பாடாக அவர்கள் தொடர்பான பிழையான எதிர்மறை எண்ணங்களை (நடத்தை கெட்டவள், ஊழல் செய்பவர், திறமையில்லாதவர் போன்ற எண்ண கருக்கள்) மக்கள் மனதில் நேரடியாக ஃ மறைமுகமாக விதைத்தலும் குறித்த நபருக்கு அதனூடாக மன உளைச்சலை ஏற்படுத்தலும்.

 

2. பெண்களுக்கெதிராக முரட்டுத்தனமான வன்முறைகளை கட்டவிழ்த்தல் (உடல் ஊறு, ஆதன தீங்கு ஏற்படுத்தல், தாக்குதல்கள், அச்சுறுத்தல்)


2.மலையக பெண்களுக்கு அரசியல் பிரவேசம் தொடர்பில் ஆர்வம் இன்மையுடன் கூடிய அசமந்த போக்கு. ஆர்வம் உடையவர்களுக்கு போதியளவிலான வலுவூட்டல்களும் வழிகாட்டுதல்களும் கிடைக்கப்பெறாமை.


3.அரசியல் பிரவேசத்தின் முக்கியத்துவம் தொடர்பில் மலையக பெண்களுக்கு போதியளவிலான விழிப்பணர்வின்மையும் அரசியல் அறிவு மட்டம் குறைவாக காணப்படல்.


4.மலையக பெண்களின் தனிப்பட்ட, குடும்ப மற்றும் சமுக கலாசார சூழல் காரணிகள்.

5.மலையக பெண்களின் அரசியல் பிரவேசம் தொடர்பில் மக்களிடையே குறிப்பாக சக பெண்களிடையே கிடைக்கின்ற வரவேற்பு, ஊக்கமளிப்பும் கூடிய ஆதரவும் மிக குறைவு. 


6.கட்சிகளில் பெண்களுக்கு போதுமானளவு இட ஒதுக்கீடு வழங்கப்படாமை.


7.கட்சி தவிர்த்த சுயேட்சை குழுவில் போட்டியிட்டாலும் அது போதியளவு அதிகார வலுப்படுத்த படாமை.


8.மலையகத்தில் தடைகள் தாண்டி தேர்தல் சவாலை வென்றெடுக்கும் அளவுக்கு ஆளுமையை வளர்த்து கொண்டுள்ள பெண்களின் எண்ணிக்கை குறைவு. சில பெண்கள் பாராளுமன்ற பிரவேசத்திற்கு முயற்சித்தாலும் பொதுவெளியில் அவர்களின் ஆளுமையில் திருப்தி அடையாத மக்கள் வாக்களிப்பதில்லை. 


9.ஆளுமையும் அரசியல் அறிவும் உடைய பெண்களுக்கு தேர்தலில் போட்டியிட, பிரச்சாரம் செய்ய போதியளவு பண பலம் இல்லாமை.


10.இருப்பினும் வெறுமனே பண பலமும் அரசியல் பக்க பலமும் கொண்ட பெண்களுக்கு ஆளுமை விருத்தியுடன் முன்னேற்றகரமான அரசியல் பிரவேசத்தை முன்னெடுக்க முடியாமல் இருத்தல். இதுபோன்ற இன்னோரான காரணங்களை குறிப்பிட முடியும். 


இவ்வாறான சாவால்கள் எதுவாக இருப்பினும் மலையக பெண்களின் பாராளுமன்ற பிரவேசத்திற்கான நடைமுறையிலான சாத்தியப்பாடுகள் இருக்கின்றதா? என்றால் நிச்சயம் 100 க்கு 75ம%  மேலான வீதமான வாய்ப்புக்கள் பின்வரும் குறிப்பிடும் விதத்தில் உள்ளது.  


1. மலையகத்தில் தொழிற்சங்கங்களே அரசியல் கட்சிகளாக செயற்பட்டு வரும் வித்தியாமான போக்கு காணப்படும் நிலையில் மலையகத்தில் பெருந்தோட்ட துறையிலே ஆண்களை விட அதிக எண்ணிக்கையிலான பெண் தொழிலாளர்களே; ஈடுபடுவதுடன் தொழிற் சங்கத்திற்கும் பெண் தொழிலாளிகளின் சந்தா பணமே கூடுதலாக கிடைக்கப்பெறுகிறது. இதன்படி அதிகளவிலான பெண்களே தொழிற்சங்க உறுப்பினராகவும் உள்ளதுடன் சந்தா பணம் அதிகளவு பெண்களிடமிருந்தே பெற்றுக்கொள்ளப்படுகிறது. இருப்பினும் அதே விகித அடிப்படையில் பெண்களுக்கு கட்சியில் அங்கத்துவம் வழங்கப்படுகிறதா என்பது கேள்வி? 


ஆக தொழிற் சங்கத்திற்கு ஆண்களிலும் பார்க்க பெண் தொழிலாளிகளினால் சந்தா பணமே கூடுதலாக செலுத்த முடியுமாக இருக்க கூடிய நிலையில், ஏன் அவ் தொழிற்சங்க பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு பெண்களுக்கான தனி ஒரு தொழிற்சங்கத்தினையும் கட்சியினையும்; உருவாக்கி அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேர்தலில் போட்டியிட முடிமான சந்தர்ப்பம் உள்ளது.


2. மலையகத்தினை பொருத்தவரை 1ஃ3 பங்கு பெண்களே பெருந்தோட்ட துறையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏனைய தொழிற் துறையில் (சட்டம், மருத்துவம, பொறியில், வர்த்தகம், ஏனைய நிர்வாக மற்றும் ஆசிரியர் துறை) ஈடுபட்டு வரும் பெண்களை பிரதிநிதித்துவம் படுத்தும் வகையில் மலையகத்தில் எந்தவொரு தொழிற்சங்களோ ஃ அமைப்புக்களோ இதுவரை உதயமாகியருக்கவில்லை. எனவே அவர்களை ஒன்றினைக்கும் வகையில் அமைப்புக்களை ஃ தொழிற்சங்களை உருவாக்கி அப் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் போட்டியிடலாம்.


3. மேலும் மலையக தேர்தல் கலாசாரத்தில் ஒரு ஆண் வேட்பாளர் போட்டியிட்டால் அவர்களுக்கு பெண்கள் சார்பில் அதிகமான வாக்குகள் அளிக்கப்படுகின்றது. ஆனால் பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டால் அவர்களுக்கு ஆண்கள் சார்பில் அதிகமான வாக்குகள் அளிக்கப்படுவதில்லை. காரணம் ஆண்கள் மட்டும் சமவாய்ப்பு சிந்தனையை செயற்படுத்துவதில்லை. அப்படி சமவாய்ப்பு சிந்தனையை சிந்திப்பார்களாயின் நிச்சயம் பெண் பிரதிநிதித்துவம ஒன்றினை பெறலாம்.


4. மேலும்; ஒரு குறிப்பிடத்தக்க சம்பவம் யாதெனில் கடந்த காலத்தில ஒரு குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினரால் மலையகத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் பெண்கள் தலைமையிலான ஒரு சுயேட்சை குழுவை களமிறக்கியப்போதும் அதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விளக்கமில்லாத தன்மையினாலும் கேலி கிண்டல்களுக்கு உட்பட்டதுடன்; அப்பெண் குழுவுக்கு சரியான வலுவூட்டல் இல்லாமையால் தேர்தலில் தோல்வியும் கண்டனர். ஆக சரியான அரசியல் வலுவூட்டல்களை வழங்குமிடத்து பெண்களும் பிரதிதநிதித்துவம் பெறலாம்.


இவ்வாறான சாத்தியப்பாடுகள் இருப்பினும் அரசியல் மட்டத்திலும் சமுதாய மட்டத்திலும் இது குறித்து சிந்திப்பது மிக குறைவாகும். இவற்றோடு பின்வரும் சமுக சீர்த்திருத்தங்களை மேற்கொள்வதினூடாக நிச்சயம் மலையக பெண்களின் நாடாளுமன்றத்திற்கான பிரவேசத்தினை உறுதிபடுத்த முடியும்.

1. மலையக அரசியல் கட்சிகள் சந்தா பணம் பெறும் விகிதத்திற்கேற்ப பெண்களுக்கான அங்கத்துவ இட ஒதுக்கீடு தொடர்பில் ஆலோசிக்க வேண்டும்.


2. மலையகத்தில் எத்தனையோ படித்த, பகுத்தறிவுடன் சிந்திக்க கூடிய அரசியல் அறிவு கொண்ட பொது நலனுடன் செயற்படக்கூடிய ஆளுமை கொண்ட பெண்கள் உள்ளனர். இவர்களை ஒன்றினைத்து அரசியல் துறையில் சரியான வலுவூட்டல்களை வழங்க வேண்டும்.


3. மேலும் பெண்களின் பிரதிநிதித்துவம், அது தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக அரசியல் கட்சிகளின் முகவர்கள், பெண் தொழிற்படுனர்கள் ஆகியோரை அறிவுறுத்தும் நிகழ்சி திட்டங்களை பிராந்திய ரீதியல் மலையகத்தில் செயற்படுத்த வேண்டும்.


4. மலையக ஆணாதிக்க சமுகத்தினுள் ஆணாதிக்க சிந்தனை மற்றும் தீர்மானங்களுக்கிடையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறான விடயங்களை முறையாக சிந்தித்து எம் சமுகம் செயற்படுமாக இருந்தால் மலையகத்தில் பிராந்திய ரீதியில் ஒரு வலுவான நேர்த்தியான அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதுடன் அபிவிருத்தியுடன் கூடிய மலையகத்தை கட்டியெழுப்ப முடியும். ஆனால் இதில் வேடிக்கை யாதெனில் பூனைக்கு யார் மணிக்கட்டுவது….?

மலையகத்தில் சிசுக்கொலை



குழந்தைகள் என்பது வரம். அதற்காக ஏங்கும் உள்ளங்கள் கோடி.  எனினும்  அதனை சாபக்கேடாகவும் துச்சமாகவும் கருதும் மனிதர்களும் இந்த சமுகத்தில்தான் வாழ்கின்றனர்.  இதற்கு சிறந்த உதாரணம் அண்மையில்  நாடளாவிய ரீதியில் குறிப்பாக மலையக பெருந்தோட்ட பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் சிசுக்கொலை சம்பவத்தை குறிப்பிடலாம். இது ஒரு குற்றச்செயல் எனபதனையும் தாண்டி ஒரு மனிதாபிமானமற்ற ஈவிரக்கமற்ற செயலாகும். காரணம் உலகில் பிறக்கும்  ஒவ்வொரு உயிரினமும் தான் உயிர் வாழும் உரிமையினை கொண்டுள்ளது. அதனை அழிப்பதற்கான உரிமை எவருக்குமில்லை.

இதில் கவலைக்குரிய விடயம் யாதெனில் குறித்த குற்றமானது பொதுவாக குழந்தையின் பெற்றத்தாயினாலே  புரியப்பட்டுள்ளதுள்ளது. இதற்கமைவாக குழந்தை பிறந்த குறுகிய காலத்தினுள்ளே அவற்றிற்கு கொடூர உடலூறு ஏற்படுத்தபட்டுள்ளதுடன் அவை கொடுரமாகவூம்   கொலைச்செய்யப்பட்டுள்ளன. இவ் சிசுக்கொலை குற்றமானது வெறுமனே குழந்தை பிரவிசத்த பெண்ணால் மாத்திரமே புரியப்படுவதில்லை.சில சந்தர்ப்பங்களில் இதற்கு உடந்தையாக குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள்,  அயலவர்கள், நண்பர்கள் பட்டாளம் என பலரும் காணப்படுகின்றனர். எது எவ்வாறிருப்பினும் இறுதியில் குறித்த பெண்ணே அதன் ஆபத்தான பின் விளைவுகளை அனுபவித்தாக வேண்டிய  வேண்டிய நிலை ஏற்படும். காரணம் குற்றம் புரிந்த பின்னர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது என்பதோடு  அவர்களின்  முழு எதிர்கால வாழ்வும் சிதைவடைந்துவிடும்.

இலங்கையினை பொருத்தவரை 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பாலியல் உறவினை வைத்துக்கொள்ள சட்டம் அனுமதிக்கின்றது. எனினும் வலிதான திருமணத்தின் மூலமாக குறித்த இரு தம்பதியினரிற்குமிடையே பிறக்கும் குழந்தைகளே நெறிமுறையான குழந்தைகளாக சட்டம் அங்கீகரிக்கின்றது.  இதற்கு அப்பால் பிறக்கும் குழந்தைகளின் நெறிமுறை தொடர்பில் கேள்வி எழுவதுடன் சில சந்தர்ப்பங்களில் அவை பிறந்த குறுகிய காலத்திலே (1 வருடத்திற்குள்) மேற்கூறியவிதத்தில் சிசுக்கொலையும்  செய்யப்பட்டுகிறது.அவ்விதம் கொலைசெய்யப்பட்ட சிசுக்கள் பிறந்தது ,

1. வலிதான திருமண உறவிற்கு அப்பால் வாழ்க்கை துணை அல்லாத வேறு நபருடன் கொண்டிருந்த நெறிமுறையற்ற உறவின் விளைவாக.

2. திருமண உறவு நிலைக்குழைந்த நிலையில் : வாழ்க்கை துணை இறப்பு  / கணவர் விட்டுச்செல்லல் / விவாகரத்து பெற்றிருத்தல் / நீதிமுறை பிரிவினையில் வாழுதல் போன்ற சந்தர்ப்பங்களில் வாழ்க்கை துணை அல்லாத நபருடன் கொண்டிருக்கும் உறவின் நிமித்தமாக பிறந்த குழந்தைகள்.

3. காதல் / கூடி வாழ்தல் / வேறுவகை உறவின் கீழ்  பிறந்த பிள்ளைகள்

4. பெண் பலாத்காரம் மற்றும் துஷ்பிரயோகத்தின் விளைவாக பிறக்கும் பிள்ளைகள்.

இவ்வாறு பிறந்த குழந்தைகளைகளில் 100 க்கு 99 % மான குழந்தைகள் பின்வரும் ஏதோ ஒரு காரணத்திற்காக  கைவிடல் / கொலை செய்யப்படும் நிலைக்கு ஆளாகுகின்றன.

இதற்கு பின்னனி காரணியாக  இருக்ககூடிய விடயங்கள் தான் என்ன? என ஆராயும் போது பின்வரும் விடயங்கள் நிகழ்வுகளின்  அடிப்படையில் அடையாளப்படுத்தப்படுகிறது. அவை: 

1.பெருந்தோட்டப்பகுதியில் இருக்க கூடிய சிக்கலான குடும்ப அமைப்புக்கள். உம்: பெரும்பாலும் வாழ்க்கை துணையில் ஒருவர் வேலை நிமித்தம் வெளிநாடு செல்வதும் நீண்ட கால இடைவெளியில் அங்கேயே தங்கிவிடுவதால் இங்கு இருக்ககூடிய வாழ்க்கை துணையின் பாதுகாப்பு உட்பட பெளதிக மற்றும் உளவியல் தேவைகளில் வெற்றிடம் நிலவுகிறது.  இந்த சந்தர்ப்பத்தில் ஒழுக்க விழுமிய கட்டுபாடுகளை பேணி வாழும் நபர்களும் உள்ளனர். அதே நேரத்தில் மன தடுமாற்றத்தில் தவறுகள் புரிவதும்  பிழையான உறவுகளை ஏற்படுத்தி கொள்வதன் விளைவாக குழந்தைகள் பிறக்கும் நிகழ்வு இடம்பெறுகிறது. இவ்வாறு பிறந்த குழந்தைகள் சிசுக்கொலை செய்யபட்வதற்கான சந்தர்ப்பமும் காணப்படுகிறது.

2.பொதுவில் தமிழ் சமுகத்தில் பெண்கள் மறுமணம் செய்துக்கொள்வதை ஒரு ஆரோக்கியமாக பார்க்கும் கண்ணோட்டம் குறைவு. இது எமது மலையக சமுகத்திலும் விதிவிலக்கல்ல. இதில் இளம் வயதில் விதவையான பெண்கள் தனிமையில் விடப்படுவதுடன் அவர்களுக்கான தனிப்பட்ட ரீதியில் பூர்த்தி செய்ய வேண்டிய உள மற்றும் பெளதிக தேவைகள் தொடர்பில் வெற்றிடம் உருவாகிறது..  கணவன் இறந்ததன் பின்னர் பாதுகாப்பற்ற நிலையில் தனிமையில் வாடும் பெண்கள்  பாதுகாப்பு  உட்பட சுக துக்கங்களை பகிர்ந்துக்கொள்ளவென அவர்களுக்கென புதிய  உறவினை ஒரு ஆணுடன் ஏற்படுத்திக்கொள்வதுண்டு. உறவின்  விளைவாக குழந்தை பிரசவிக்கலாம். அதே போல்  சில நேரங்களில் இவ்வாறான பெண்களுக்கு பாலியல் அச்சுறுத்தல், பலாத்காரம் என்பனவும் இடம்பெறவும் வாய்ப்புண்டு. எனவே மறுமணம் செய்யாது ஒரு விதவை பெண் கருத்தரிப்பதென்பதை சமுகம் அவதூறாகவே பார்க்கும். இவ்வாறான இக்கட்டான நிலையில் பிறக்கும் பிள்ளைகள் கொலை செய்யப்படுவதற்கும் வாய்ப்புண்டு.  

3.சில நேரங்களில் ஏற்கனவே திருமணமாகி அதன் விளைவாக பிறந்த குழந்தைகள் இருக்க, குறித்த பெண் தன் கணவர் அல்லாத வேறு ஆணுடன் கொண்டிருந்த உறவினால் / கணவன் இறப்பு அல்லது விட்டுச்சென்றப்பின் கணவர் அல்லாத ஆணுடன் கொண்டிருந்த உறவினால் பிள்ளைகள் பிறக்கும் போது அதனால் ஏற்கனவே உள்ள பிள்ளைகளுக்கு ஏற்படும் மன உளைச்சல் காரணமாக / தனது பிள்ளைகளுக்கு தன் மீதான மரியாதை குறைந்துவிடும் என எண்ணி பிறந்த சிசுவினை கொலைசெய்யக்கூடும்.

4.இவ்வாறு பிறந்த குழந்தைகள் சமுக இழுக்கு என கருதும் பெண்கள் தம் பெயர் கெட்டுவிடும்  மற்றும் குடும்ப கௌரவம் பாதிக்கப்படும் என கைவிடல் / கொலைசெய்தல்

5. அக்குழந்தைகளை பராமரிக்க முடியாத பொருளாதார நிலையும் எதிர்காலத்தில் பெரும் சுமையாக மாறிவிடக்கூடும் என்ற நிலையினால் அதனை  கைவிடல்/ கொலை செய்தல்.

6.சட்டத்தால் தண்டிக்கப்படுவோம் என்ற பயம் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக அக்குழந்தைகளை கைவிடல்/ கொலை செய்தல்.

7.இவற்றோடு மனோதத்துவ நிலை அடிப்படையில் குழந்தை பிரசவித்த தாயிக்கு பிரவத்தின் பின் இருக்க கூடிய மனநிலையால் செய்யப்படக்கூடிய   சிசு கொலைகள்.

வாசிப்பு மனிதனைப் பூரணமாக்கும்

  பொதுஅறிவுடன் மொழிவளத்தையும் வளர்ப்பது வாசிப்புப் பழக்கம்!  வாசிப்பின் ஊடாகவே ஒருவன் பூரண  மனிதனாகலாம். வாசிப்பின் ஊடாகவே அறிவுடைய சமூகத்தை...