கடந்த 01.10.2020 நாளன்று உலகளாவிய ரீதியல் முதியோர் தினத்தை கொண்டாடப்பட்டதை தொடர்ந்து மிக முக்கியமாக பேசப்பட்ட விடயம் யாதெனில் “உலக சனத்தொகை மதிப்பீடுகளின் படி 21ஆம் நூற்றாண்டு முதியோர்களின் ஆண்டாக கருதும் அதே நேரத்தில் அண்மைய மதிப்பீடுகளின் படி இலங்கையிலும் 2041 ஆம் ஆண்டளவில் முதியோர்களின் எண்ணிக்கையானது தற்போதைய அளவிலும் பார்க்க 2 மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்பதாகும். இவ்வாறான நிலையில் இவ் முதியோர்களின் சனத்தொகை அதிகரிப்பு வீதமானது எதிர்காலத்தில் நாட்டின் அரசியல், சமுக, பொருளாதாரத்தில், மாற்றத்தை ஏற்படுத்தும் அதே வேளை முதியவர்களின் வருமானம், சுகாதாரம், கல்வி மற்றும் தொழில் வாய்ப்பு, சாதகமான சமுக சூழல் போன்ற பிரதான அம்சங்களில் முதியோர்களின் நிலைமை தொடர்பில் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை இவ் எதிர்காலத்திலத்திற்காக இவ் நிகழ்காலத்திலே முன்னெடுக்க வேண்யுள்ளது.
ஆனால் இவ்வாறான எதிர்கால நிலமை குறித்து சிந்திப்பதிலும் பார்க்க இன்றைய நிலையில் நாடளவிய ரீதியில் முதியோர்களின் சமுக பாதுகாப்பு என்பது கேள்விக்குரியான நிலையிலே உள்ளது எனலாம். காரணம் நாம் ஒவ்வொருவரும் தினசரி நாளொன்றில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் பொதுவெளியில் அநாதரவாக கிடக்கும் எத்தனையோ முதியோர்களையும் வருமான வழியின்றி நடைபாதையில் யாசகம் பெறும் முதியோர்களையும் தங்குமிட வசதிகள் இன்றி இரவு பொழுதுகளை பொது இடங்களிலும் நடைபாதைகளிலும் கண்ணீருடன் கழிக்கும் முதியோர்களையும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டு மன ஆதகங்களை எங்களிடையே கொட்டி தீர்க்கும் எண்ணிக்கையற்ற எத்தனையோ முதியோர்களையும் கடந்து கொண்டிருக்கின்றோம். இவ்வாறான நிலையில் பாலின அடிப்படையில் ஆண் முதியோர்களிலும் பார்க்க பெண் முதியோர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமானதே எனலாம். காரணம் ஆண்கள் என்பதிலும் பார்க்க ஒப்பீட்டளவில் பெண்களுக்கே உடல், உள பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ரீதியான தேவைப்பாடுகள் அதிகமானதாக காணப்படுகிறது.
அந்த வகையில் பெண் முதியோர்களுக்கு தற்காலத்தில் எவ்வாறான சமுகபாதுகாப்பின்மை நிலவுகிறது என்பதையும் அவற்றிலிருந்து அவர்களை பாதுகாப்பதற்கான காணப்படும் சட்ட மற்றும் சமுக நல ஏற்பாடுகள் குறித்தும் பின்வருமாறு சுருக்கமாக ஆராயலாம்.
பின்வருவன பெண் முதியோர்கள் தனிப்பட்ட, குடும்ப மற்றும் சமுக மட்டத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளாக காணப்படுகின்றன.
1. பிள்ளைகளால் கைவிடப்படல் : இன்றைய நவீன காலத்தில் தனிப்பட்ட சுதந்திரம், குடும்ப பொருளாதார நெருக்கடி போன்ற இன்னோரான காரணிகளால் கூட்டு குடும்பங்களின் எண்ணிக்கை அருகி வரும் நிலையலில் பெருமளவிலான பெற்றோர்கள் தன் பிள்ளைகளால் முறையான பாராமரிக்கப்படாமலும் சில நேரங்களில் கைவிடப்பட்டும் விடுகின்றனர். எனவே தங்களது அடிப்படை தேவைகளை கூட நிவர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு அநாதரவாக்கப்படுகின்றனர்.
2. குடும்ப வன்முறை : பெருமளவிலான பெண் முதியோர்கள் தங்கள் பிள்ளைகளாலும் ஏனைய குடும்ப உறுப்பினர்களாலும் குடும்ப வன்முறைக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
3. மோசடியானஃ பிறழ்வான முறையில் ஆவணங்களில் பெற்றுக்கொள்ளும் கையொப்பங்களினூடாக சொத்துக்களை சூறையாடல் : இவ்வாறான சம்பவங்கள் நாடளாவிய ரீதியில் இடம்பெறுகிறது. பெரும்பாலான முதியோர்கள் கல்வியறிவு மற்றும் விழ்ப்புணர்வு குறைவாகவும் பிள்ளளை பாசம் போன்ற உணர்ச்சி நிலை மிகுந்தவர்களாக இருக்கின்ற காரணத்தினால் எமது முதியோர்களில் அநேகமானோர் குறித்த ஆவணங்களை வாசித்து விளங்கி கொள்ளாதும் சில நேரங்களில் வெறும் நம்பிக்கையின் அடிப்படையிலும்; வெற்று கடதாசிகளில் கையொப்பங்கள் ஃ கைவிரல் அடையாளங்களை இடுவதுண்டு. இவ்வாறான முறைகளினூடாக பெற்ற பிள்ளைகளால் மட்டுமன்றி பிற நபர்களாலும் சொத்துக்களை சூறையாடும் நிகழ்வுகளும் ஏற்படுகிறது. இச் சந்தர்ப்பங்களில் மோசமான பின்விளைவுகளை அறியாது செயற்படுவதினால் முதியோர்கள் தங்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுதல் முதலான பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும்.
4. முதியவர்கள் புத்திசாலித்தனமற்ற வகையில் சொத்துக்களை வழங்குவதும் பின் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்படலும் : பெண் முதியோர்கள் பெரும்பாலும் தமது சொத்துக்களை பிள்ளைகளின் மேல் உள்ள பாசம் , நம்பிக்கை அடிப்படையில் எவ்வித நிபந்தனைகள் இன்றி தாங்கள் வாழும் வரையான காலப்பகுதியல் அதனை அனுபவிக்கும் உரிமையை தம்மிடம் வைத்துக்கொள்ளாது அவர்களுக்கு முழுவதுமாக கையளித்தோ ஃ நன்னொடையளித்தோ விடுகின்றனர். ஆனால் பின்னரான சந்தர்ப்பங்களில் சில பிள்ளைகள் சொத்துக்களை பெற்றுக்கொண்டதன் பின்னர் பெற்றோர்களை கைவிட்டுவிடுவதுண்டு.
5. தொழில் இடங்களில் சம்பள மோசடி : இன்றைய காலகட்டத்தில் எத்தனையோ முதியவர்கள் வயது முதிர்ந்த காலத்திலும் வயிற்று பிழைப்பிற்காக தொழில் செய்து வருகின்றனர். ஆனால் சில தொழிலிடங்களில் அவர்களக்கான உரிய கொடுப்பனவுகளை கொடுக்காது மோசடி செய்யப்படுகின்றனர்.
6. அடிப்படை வசதிகளை வசதிகள் இன்றி வாழ்தல் :இன்றைய காலக்கட்டத்திலும் உண்ண உணவு, உடுத்த உடை மற்றும் தங்களுக்கென சொந்த அல்லது தற்காலிக தங்குமிட வசதிகள் இன்றி; பல முதியோர்கள் நிர்க்கதியாய் இருக்கின்றனர்.
7. கடுமையான அங்கவீனமுற்ற நிலையில் மருத்துவ வசதிகளை பெற்றுக்கௌ;ள முடியாது நோய்நிலைகளை எதிர்நோக்கும் பெண் முதியோர்கள் : குணப்படுத்த முடியாத மற்றும் குணப்படுத்தக்கூடிய நோய் நிலைமைகளை கொண்டிருக்கும் சில முதியோர்கள் அதற்கான மருத்துவ செலவீனங்களை பெற்றுக்கொள்ள முடியாது உதவிகளுக்கு ஆதரவின்றி போரடியும் வருகின்றனர்.
No comments:
Post a Comment