Monday, 19 October 2020

மலையகத்தில் சிசுக்கொலை



குழந்தைகள் என்பது வரம். அதற்காக ஏங்கும் உள்ளங்கள் கோடி.  எனினும்  அதனை சாபக்கேடாகவும் துச்சமாகவும் கருதும் மனிதர்களும் இந்த சமுகத்தில்தான் வாழ்கின்றனர்.  இதற்கு சிறந்த உதாரணம் அண்மையில்  நாடளாவிய ரீதியில் குறிப்பாக மலையக பெருந்தோட்ட பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் சிசுக்கொலை சம்பவத்தை குறிப்பிடலாம். இது ஒரு குற்றச்செயல் எனபதனையும் தாண்டி ஒரு மனிதாபிமானமற்ற ஈவிரக்கமற்ற செயலாகும். காரணம் உலகில் பிறக்கும்  ஒவ்வொரு உயிரினமும் தான் உயிர் வாழும் உரிமையினை கொண்டுள்ளது. அதனை அழிப்பதற்கான உரிமை எவருக்குமில்லை.

இதில் கவலைக்குரிய விடயம் யாதெனில் குறித்த குற்றமானது பொதுவாக குழந்தையின் பெற்றத்தாயினாலே  புரியப்பட்டுள்ளதுள்ளது. இதற்கமைவாக குழந்தை பிறந்த குறுகிய காலத்தினுள்ளே அவற்றிற்கு கொடூர உடலூறு ஏற்படுத்தபட்டுள்ளதுடன் அவை கொடுரமாகவூம்   கொலைச்செய்யப்பட்டுள்ளன. இவ் சிசுக்கொலை குற்றமானது வெறுமனே குழந்தை பிரவிசத்த பெண்ணால் மாத்திரமே புரியப்படுவதில்லை.சில சந்தர்ப்பங்களில் இதற்கு உடந்தையாக குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள்,  அயலவர்கள், நண்பர்கள் பட்டாளம் என பலரும் காணப்படுகின்றனர். எது எவ்வாறிருப்பினும் இறுதியில் குறித்த பெண்ணே அதன் ஆபத்தான பின் விளைவுகளை அனுபவித்தாக வேண்டிய  வேண்டிய நிலை ஏற்படும். காரணம் குற்றம் புரிந்த பின்னர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது என்பதோடு  அவர்களின்  முழு எதிர்கால வாழ்வும் சிதைவடைந்துவிடும்.

இலங்கையினை பொருத்தவரை 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பாலியல் உறவினை வைத்துக்கொள்ள சட்டம் அனுமதிக்கின்றது. எனினும் வலிதான திருமணத்தின் மூலமாக குறித்த இரு தம்பதியினரிற்குமிடையே பிறக்கும் குழந்தைகளே நெறிமுறையான குழந்தைகளாக சட்டம் அங்கீகரிக்கின்றது.  இதற்கு அப்பால் பிறக்கும் குழந்தைகளின் நெறிமுறை தொடர்பில் கேள்வி எழுவதுடன் சில சந்தர்ப்பங்களில் அவை பிறந்த குறுகிய காலத்திலே (1 வருடத்திற்குள்) மேற்கூறியவிதத்தில் சிசுக்கொலையும்  செய்யப்பட்டுகிறது.அவ்விதம் கொலைசெய்யப்பட்ட சிசுக்கள் பிறந்தது ,

1. வலிதான திருமண உறவிற்கு அப்பால் வாழ்க்கை துணை அல்லாத வேறு நபருடன் கொண்டிருந்த நெறிமுறையற்ற உறவின் விளைவாக.

2. திருமண உறவு நிலைக்குழைந்த நிலையில் : வாழ்க்கை துணை இறப்பு  / கணவர் விட்டுச்செல்லல் / விவாகரத்து பெற்றிருத்தல் / நீதிமுறை பிரிவினையில் வாழுதல் போன்ற சந்தர்ப்பங்களில் வாழ்க்கை துணை அல்லாத நபருடன் கொண்டிருக்கும் உறவின் நிமித்தமாக பிறந்த குழந்தைகள்.

3. காதல் / கூடி வாழ்தல் / வேறுவகை உறவின் கீழ்  பிறந்த பிள்ளைகள்

4. பெண் பலாத்காரம் மற்றும் துஷ்பிரயோகத்தின் விளைவாக பிறக்கும் பிள்ளைகள்.

இவ்வாறு பிறந்த குழந்தைகளைகளில் 100 க்கு 99 % மான குழந்தைகள் பின்வரும் ஏதோ ஒரு காரணத்திற்காக  கைவிடல் / கொலை செய்யப்படும் நிலைக்கு ஆளாகுகின்றன.

இதற்கு பின்னனி காரணியாக  இருக்ககூடிய விடயங்கள் தான் என்ன? என ஆராயும் போது பின்வரும் விடயங்கள் நிகழ்வுகளின்  அடிப்படையில் அடையாளப்படுத்தப்படுகிறது. அவை: 

1.பெருந்தோட்டப்பகுதியில் இருக்க கூடிய சிக்கலான குடும்ப அமைப்புக்கள். உம்: பெரும்பாலும் வாழ்க்கை துணையில் ஒருவர் வேலை நிமித்தம் வெளிநாடு செல்வதும் நீண்ட கால இடைவெளியில் அங்கேயே தங்கிவிடுவதால் இங்கு இருக்ககூடிய வாழ்க்கை துணையின் பாதுகாப்பு உட்பட பெளதிக மற்றும் உளவியல் தேவைகளில் வெற்றிடம் நிலவுகிறது.  இந்த சந்தர்ப்பத்தில் ஒழுக்க விழுமிய கட்டுபாடுகளை பேணி வாழும் நபர்களும் உள்ளனர். அதே நேரத்தில் மன தடுமாற்றத்தில் தவறுகள் புரிவதும்  பிழையான உறவுகளை ஏற்படுத்தி கொள்வதன் விளைவாக குழந்தைகள் பிறக்கும் நிகழ்வு இடம்பெறுகிறது. இவ்வாறு பிறந்த குழந்தைகள் சிசுக்கொலை செய்யபட்வதற்கான சந்தர்ப்பமும் காணப்படுகிறது.

2.பொதுவில் தமிழ் சமுகத்தில் பெண்கள் மறுமணம் செய்துக்கொள்வதை ஒரு ஆரோக்கியமாக பார்க்கும் கண்ணோட்டம் குறைவு. இது எமது மலையக சமுகத்திலும் விதிவிலக்கல்ல. இதில் இளம் வயதில் விதவையான பெண்கள் தனிமையில் விடப்படுவதுடன் அவர்களுக்கான தனிப்பட்ட ரீதியில் பூர்த்தி செய்ய வேண்டிய உள மற்றும் பெளதிக தேவைகள் தொடர்பில் வெற்றிடம் உருவாகிறது..  கணவன் இறந்ததன் பின்னர் பாதுகாப்பற்ற நிலையில் தனிமையில் வாடும் பெண்கள்  பாதுகாப்பு  உட்பட சுக துக்கங்களை பகிர்ந்துக்கொள்ளவென அவர்களுக்கென புதிய  உறவினை ஒரு ஆணுடன் ஏற்படுத்திக்கொள்வதுண்டு. உறவின்  விளைவாக குழந்தை பிரசவிக்கலாம். அதே போல்  சில நேரங்களில் இவ்வாறான பெண்களுக்கு பாலியல் அச்சுறுத்தல், பலாத்காரம் என்பனவும் இடம்பெறவும் வாய்ப்புண்டு. எனவே மறுமணம் செய்யாது ஒரு விதவை பெண் கருத்தரிப்பதென்பதை சமுகம் அவதூறாகவே பார்க்கும். இவ்வாறான இக்கட்டான நிலையில் பிறக்கும் பிள்ளைகள் கொலை செய்யப்படுவதற்கும் வாய்ப்புண்டு.  

3.சில நேரங்களில் ஏற்கனவே திருமணமாகி அதன் விளைவாக பிறந்த குழந்தைகள் இருக்க, குறித்த பெண் தன் கணவர் அல்லாத வேறு ஆணுடன் கொண்டிருந்த உறவினால் / கணவன் இறப்பு அல்லது விட்டுச்சென்றப்பின் கணவர் அல்லாத ஆணுடன் கொண்டிருந்த உறவினால் பிள்ளைகள் பிறக்கும் போது அதனால் ஏற்கனவே உள்ள பிள்ளைகளுக்கு ஏற்படும் மன உளைச்சல் காரணமாக / தனது பிள்ளைகளுக்கு தன் மீதான மரியாதை குறைந்துவிடும் என எண்ணி பிறந்த சிசுவினை கொலைசெய்யக்கூடும்.

4.இவ்வாறு பிறந்த குழந்தைகள் சமுக இழுக்கு என கருதும் பெண்கள் தம் பெயர் கெட்டுவிடும்  மற்றும் குடும்ப கௌரவம் பாதிக்கப்படும் என கைவிடல் / கொலைசெய்தல்

5. அக்குழந்தைகளை பராமரிக்க முடியாத பொருளாதார நிலையும் எதிர்காலத்தில் பெரும் சுமையாக மாறிவிடக்கூடும் என்ற நிலையினால் அதனை  கைவிடல்/ கொலை செய்தல்.

6.சட்டத்தால் தண்டிக்கப்படுவோம் என்ற பயம் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக அக்குழந்தைகளை கைவிடல்/ கொலை செய்தல்.

7.இவற்றோடு மனோதத்துவ நிலை அடிப்படையில் குழந்தை பிரசவித்த தாயிக்கு பிரவத்தின் பின் இருக்க கூடிய மனநிலையால் செய்யப்படக்கூடிய   சிசு கொலைகள்.

No comments:

Post a Comment

வாசிப்பு மனிதனைப் பூரணமாக்கும்

  பொதுஅறிவுடன் மொழிவளத்தையும் வளர்ப்பது வாசிப்புப் பழக்கம்!  வாசிப்பின் ஊடாகவே ஒருவன் பூரண  மனிதனாகலாம். வாசிப்பின் ஊடாகவே அறிவுடைய சமூகத்தை...