Tuesday, 20 October 2020

சூழல் மாசடைவின் இழிவளவாக்கம்

உலக சூழலியல் பிரச்சினைகளை குறைப்பதில் ஐக்கிய நாடுகள் சூழல் நிகழ்ச்சி திட்டத்தின் பங்குகள் மற்றும் சுற்ச்சூழல் சார்பான மாநாடுகள் பற்றிய தொகுப்புக்கள்.


1972 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் இடம் பெற்ற ஐக்கிய நாடுகளின் மானிட சூழல் தொடர்பான மாநாட்டில் ஐக்கிய நாடுகளின் சூழல் நிகழ்ச்சித்திட்டம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

2019 இன் சுற்றுச் சூழல் மாநாடு மார்ச் மாதம்  கென்யாவின் நைரோபியில் நடைபெற்றது. அதனுடன் கிகிரி என்ற இடத்தில் இதன் தலைமைக் காரியாலயம் அமையப்பெற்றுள்ளது. இவ்வமைப்புடன் இணைந்து சுகாதார அமைப்பு அடங்கலாக 06 வலய அமைப்புக்கள் காணப்படுகின்றன. அங்கத்துவ நாடுகளிலும் இதற்கான காரியாலயங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் சூழல் நிகழ்ச்சி திட்டத்தின் (UNEP) ஊடாக பல முக்கிய நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. முக்கியமாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் நிலையான அபிவிருத்தி முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.


எதிர்கால சந்ததியினரின் தேவையினைப் பூர்த்தி செய்வதுடன் தற்பொழுதுள்ள தேவையினை மேலும் அபிவிருத்தியடையச் செய்து சூழலைப் பேணி பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதுமே ஐக்கிய நாடுகளின் சூழல் நிகழ்ச்சித் திட்டத்தின் இலக்காக காணப்படுகிறது. சூழல் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பம் என்பவற்றை தேசிய அரசின் கொள்கைக்குள் கொண்டு வருதல், “அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட சிறப்பான நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டு வருவதுடன் சூழல் தொடர்புபட்ட அரச சார்பற்ற நிறுவனங்க ளோடு இணைந்தும் UNEP தொழிற் படுகிறது. அவ்வாறே அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு நிதியுதவிகள் வழங்கப்பட்டு சூழல் சார் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. சுமார் 58 அங்கத்துவ நாடுகளையும் 890 செயலக காரியாலய அங்கத்தவர்களையும் கொண்டுள்ளது. கொள்கை அமுலாக்கம் மற்றும் செயற்பாடுகள் என்பன செயலக காரியாலயத்தினால் இடம்பெற்று வருகின்றன.


நாளுக்கு நாள் தீவிரமாக மாசடையும் எம்மை சுற்றியுள்ள சூழலை பாதுகாக்கும் நோக்கில் பாரிய பங்களிப்பினை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த வகையில் :- சூழல் நிலைமையினை கண்டு பிடித்தல், சூழல் சார் ஆய்வுகளை மேற்கொள்ளல், தம் நாட்டு இயற்கை வளங்களை பாதுகாக்கும் வழிவகையினை அரசுக்கு அறிவுறுத்தல், மற்றும் உலக அளவில் சூழல் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் உலக நாடுகளை ஒன்றிணைத்தல் போன்றன இவற்றின் செயற்பாடாகும். இவ்வாறான நடவடிக்கைகள் சிறந்த பெறுபேறுகளை ஈட்டித் தருவதுடன் பூகோளத்தை தாக்கும் சூழல் பிரச்சினை தொடர்பான சில சில முடிவுகளை கண்டுபிடிப்பதற்கும் அதனை முன்னெடு ப்பதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பூகோள சூழல் பிரச்சினைகள் :-

ஐக்கிய நாடுகளின் சூழல் நிகழ்ச்சி திட்டத்தின் சுமார் 200 ஆய்வாளர்களும் விஞ்ஞானிகளும் இணைந்து 21 ஆம் நூற்றாண்டில் முகம் கொடுத்து வரும் சூழல் பிரச்சினைகளில் மிகவும் முக்கியமான பிரச்சினைகள் சிலவற்றை அடையாளம் கண்டு பட்டியலிட்டுள்ளனர் அவை காலநிலை மாற்றம், காடழிப்பு (பாலைவனமாக்கம்) நீர் தட்டுப்பாடு, நீர் மாசடைவு, உயிர்பல்வகைமை பாதிப்பு, திண்ம கழிவு வெளியேற்றம். வளி மாசடைவு, உயிரியல் வட்டம் சீரழிவு, இரசாயன பொருட்கள் வெளியேற்றம், இயற்கை அனர்த்தம், புது உயிரினத் தோற்றம், மரபணு தொழிநுட்பம், கடல் மாசாக்கம், மண் தரமிழத்தல், ஓசோன்படை தேய்வு, நகரமயமாக்கம். உயர் மீன்பிடி, கடல் அலைகளில் வித்தியாசம். கடல் மட்ட உயர்வு, எல்நினோ தாக்கம், அணுக்கரு பயன்பாடு. யுத்தம் பாதிப்பு மற்றும் இயற்கை வளங்களின் அதிகரித்த பயன்பாடு போன்றனவாகும். இவ்வாறான பிரச்சினைகள் சூழலையும் சூழல் வாழ் உயிரினங்களையும் பெருமளவில் பாதித்து வருகின்றன. எனவே இதனை தடுத்து நிறுத்த பல்வேறு நடவடிக்கைகளை UNEP மேற்கொண்டுள்ளது.

உலக சூழல் பிரச்சினையை இழிவளவாக்க UNEP மேற்கொண்டுள்ள நட வடிக்கைகள் :-


1) மாநாடுகள் ஏற்படுத்தப்படல் :


இம் மாநாடுகளின் முதல் இலக்கு கைத்தொழிலாக்கத்தினால் சூழலுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்புக்களுக்கு தீர்வுகள் தேடுவதாகும். அவ்வாறே உலகம் எதிர்நோக்கும் நடைமுறை சவால்களுக்கு சிறந்த முறையில் முகம் கொடுப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளுவதுமாகும்.

மானிட சூழல் தொடர்பான முதல் மாநாடு :

இம்முதல் மாநாடு 1972 சுவீடனின் ஸ்டொக்ஹொம் நகரில் இடம்பெற்றது. இதன்போது ஓசோன் படை தேய்வுக்குக் காரணமான CFC வாயு தொடர்பாக சர்வதேச மட்டத்தில் கலந்துரையாடப்பட்டு புவி வெப்ப நிலை அதிகரிப்பு தொடர்பாகவும் கவனம் செலுத்தியது.

அருகிவரும் உயிரினம் மற்றும் சர்வதேச வியாபாரம் தொடர்பான மாநாடு :

அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் உயிரினம் மற்றும் சர்வதேச வியாபாரம் தொடர்பாக 1973 ஆம் ஆண்டு கலந்துரையாடப்பட்டது. காட்டு வாழ் உயிரினங்களைக் கொண்டதான உற்பத்தி நடவடிக்கைகள் இம் மாநாடு ஊடாக தடுக்கப்பட்டது.

புரூண்லேன்ட் ஆணைக்குழு :

சூழல் மற்றும் விருத்திபெறும் சர்வதேச ஆணைக்குழு என்ற பெயரில் அறிமுகமான இவ்வாணைக்குழு 1983 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இவ்வாணைக்குழு மூலம் பின்வரும் நோக்கங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 2000 வருடங்களுக்கு மேற்கொள்ளப்படும் நிலைப்பேண் அபிவிருத்தி நடவடிக்கை களை சிறப்பாக கொண்டு செல்ல நீண்டகால சூழல் பாதுகாப்பு வழிமுறை களை ஏற்படுத்தல், விருத்தியடைந்த மற்றும் விருத்தி அடைந்து வரும் நாடுகளுக் கிடையில் சூழல் பாதுகாப்பிற்கான சர்வதேச உறவுகளை ஏற்படுத்தல் சூழல் நடவடிக்கைகளின் போது சர்வதேச ரீதியாக அனைத்து நாடுகளும் இணைந்து செயற்படல், நீண்டகால சூழல் பாதுகாப்பிற்கு அறிக்கைகளை வெளியிடல் என்பனவாகும்.

மொன்றியல்_மாநாடு :

O3 படை தேய்வினை இழிவளவாக்கு வதற்காக 1987 ஆம் ஆண்டு ஐ. நா. சபையினால் நிறுவப்பட்டது.

பேஸல் மாநாடு :

சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் தொடர்பாக 1989 ஆம் ஆண்டு பேஸல் மாநாடு இடம்பெற்றது. இதன் மூலமாக நச்சு வாயுக்கள் சூழலுக்கு வெளிவிடப்படும் அளவு குறைக்கப்பட்டது.

மிகிதலை மாநாடு :

ஐ. நாடுகளின் சூழல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான இம் மாநாடு, புவி மாநாடு எனவும் அழைக்கப் படுகின்றது. 1992 ஆம் ஆண்டு பிரேஸிலின் ரியோடி ஜெனிரோவில் இடம்பெற்றது. உலகில் இடம்பெற்ற பாரிய மாநாடாகவும், 172 நாடுகள் கலந்துகொண்ட நிலையில் 108 நாட்டு தலைவர்களுக்கு மத்தியில் கியோட்டோ வாசகமும் உருவாக்கப்பட்டது. காலநிலை மாற்றம், உயிர் பல்வகைமை பாதுகாப்பு என்பன தொடர்பாகவும் ஆராயப்பட்டது.


2)ஓசோன்_படையினை_பாதுகாத்தல் :


ஓசோன் படை தேய்வு என்பது குறிப்பிட்ட சில வலயங்கள் மட்டுமன்றி உலக நாடுகள் அனைத்தும் கவனம் செலுத்த வேண்டிய ஒன்றாக காணப்படுகிறது. 1987 ஆம் ஆண்டு மொன்றியல் மாநாடு உருவாக்கப்பட்டு ஓசோன் படைக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் இரசாயன துகள்களை வளிமண்டலத்துக்கு வெளிவிடும் அளவினை குறைப்பதற்காக அனைத்து அமைப்பு அங்கத்தவர்களிடமும் கோரிக்கை விடப்பட்டது.


இதன்படி CFC, ஹெலோன் வாயு, காபன் டெட்ரா குளோரைட், மெதில் குளோரோ போம், ஹைட்ரொ குளோரோ புளோரே காபன் போன்றவற்றின் பாவனை குறைக்கப்பட வேண்டும் என கால அட்ட வணையும் விருத்தி அடைந்த நாடுகளுக்கு பகிரப்பட்டது. அதன்படி CFC வாயு 1996 ஆம் ஆண்டிலும், Hydro UoroFloro Carbon 2030 ஆம் ஆண்டிலும் குறைக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருக் கின்றது. இவ்வாறான வாயுக்கள் செலுத்தப்பட்ட உபகரணங்களுக்கு பதிலாக சூழல் நேய வாயுக்கள் கொண்ட உபகரணங்கள் பயன்படுத்து மாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 1992 மிகிதலை மாநாட்டில் இதற்கு பகரமாக Hydro floro Carbon, Hydro Carbon, அமோனியா. ஹீலியம் போன்ற வாயுக்கள் அறிமுகப்படுத்தப் பட்டன.


3)பச்சைவீட்டு வாயுக்களை குறைத்தல்

பச்சை வீட்டு வாயுக்களின் விகிதாசாரத் தினை குறைக்கும் நோக்கில் பல நடவடிக்கைகள் குறிப்பாக சர்வதேச அமைப்புக்கள், பிராந்திய அமைப்புக்கள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன. 1985 ஆம் ஆண்டு பச்சை வீட்டு வாயு தொடர்பான கருத்து சபை உருவாக்கப் பட்டது. மேலும் 1988 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட உலக காலநிலை சங்கத் தினால் விஞ்ஞான பரிசோதனை கொண்டு நடத்தவும் அதன் மூலம் தொழில்நுட்ப தகவல்கள் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின் றது. உலக காலநிலை சங்கம் UNEP உலக பாதுகாப்பு சங்கம் என்பன பச்சை வீட்டு வாயுக்கள் தொடர்பான விமர்சனங்களையும் வெளியிட்டன. UNEP ஆனது பச்சை வீட்டு வாயுக்கள் தொடர்பான பரிசீலனைகளை மேற்கொண்டு வாயுக்களை கட்டுப்படுத்தும் வழிவகைகள் மற்றும் நோய்கள் தொடர்பான ஆய்வுகள். மக்கள் விழிப்புணர்வு திட்டங்கள் என்பவற்றையும் மேற்கொண்டுள்ளன.

4)மழைக்காடுகளை பாதுகாத்தல் :

அயன மழைக்காடுகளை பாதுகாத்தல் என்பது எங்கு முக்கியமாக நோக்கப்பட்டது. ஐ. நாவின் சூழல் மற்றும் அபிவிருத்தி என்ற மாநாட்டில் மழைக்காடுகளை பாதுகாத்தல் காட்டு உயிரினம் மற்றும் உயிர் பல்வகைமையினை பேணி பாதுகாத்தல் என்பன முக்கியமாக கலந்துரையாடப்பட்டது. 1994 - 2003 வரையான காலப் பகுதியை உயிர்ப் பல்வகைமை சகாப்தமாக பிரகடனப்படு த்தியது மட்டுமன்றி இவை பாதுகாக்கப்பட வேண்டிய இயற்கை வளம் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அந்த வகையில் தென்னமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியா கண்டங்களில் காணப்படும் 13 மழைக் காடுகள் பாதுகாக்க்பபட வேண்டிய பிரதேசமாக அடையாளம் செய்யப்பட்டுள்ளது. ஐவரிகோஸ்டின் டாயி தேசிய பூங்கா, பேருவின் மானு தேசிய பூங்கா, கொங்கோவின், ஸொலன் கா தேசிய பூங்கா, இலங்கையின் சிங்கராஜ வனம் என்பன உதாரணங் களாகும்.

5)மீள் காடாக்கல் தொடர்பான நிகழ்ச்சிகள் :

காடுகள் அழிக்கப்பட்ட பகுதிகளில் மீள் காடாக்கல் நடவடிக்கையினை UNEP கொண்டு செல்கின்றது. சில பகுதிகளில் மழை காடுகளை பாதுகாக்கப்பட வேண்டிய காடுகளாக வேறுபடுத்தி ஏனைய மனித தேவைக்கு (பலகை) அவசியமானது காடுகள் என வேறுபடுத்ததப்பட்டு UNEP னால் இதற்கென நிதி உதவிகளும் வழங்கப் படுகின்றது. பிரேஸில் அரசினால் ஆரம்பிக்கப்பட்ட ‘புளோரும் திட்டம்’ ஊடாக 30 வருடங்களுக்குள் 30 பில்லியன் டொலரினை பயன்படுத்தி அமேசன் காட்டு அண்டிய பகுதியில் 20 மில்லியன் ஹெக்டயர் மீள் காடாக்கல் நடவடிக்கைக்கு திட்டமிட்டுள்ளது. அவ்வாறே நைஜீரியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு மீள் காடாக்கல் செயற்திட்டங்களுக்கான நிதி உதவிகளும் வழங்கப்படுகிறது. சில நாடுகளில் கனிய எண்ணெய் மற்றும் ஏனைய தேவைகளுக்காகவும் பலகை கைத்தொழி லுக்காக காடுகள் வேறாக ஏற்படுத்தப்படுகின்றன. இது மேய்ச்சல் நிலங்களுக்கு அருகில் இடம்பெறும். இது விவசாய காடாக கருதப்படுகின்றன. பர்மாவில் டொங்கியா என்ற பெயரில் பயிர் செய்கை நிலத்துக்கு அருகாமையில் தேக்கு மற்றும் பெறுமதி மிக்க மூலிகை தோட்டங்களும் இடம்பெற்று வருகின்றது.

6)பாலைவனமாதலைகட்டுப்படுத்தும் நிகழ்ச்சி திட்டங்கள் :

உலகின் அனைத்து கண்டங்களிலும் பரவி வரும் பாலைவனமாதலை தடுப்பதற்காக பல்வேறு செயல் நடவடிக் கைகள் UNEP னால் மேற்கொள்ள ப்படுகின்றன. 2010 - 2020 இடைப்பட்ட காலப் பகுதியானது பாலைவனமாதலுக்கு எதிரான சகாப்தமாக UNEP னால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மண் தரமிழத்தல் மற்றும் காலநிலை மாற்றம் என்பற்றிலும் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் பாலைவனமாதலை தடுக்கும் வழிவகைகளை செயற்படுத்தவே இச் சகாப்தத்தின் நோக்கமாகும். விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு என்பவற்றில் அதிகளவு பாதிப்படைந்துள்ள ஆபிரிக்கா, ஆசிய நாடுகளில் பாலைவனமாதல் தீவிர போக்கைக் கொண்டிருக்கிறது. நைரோபியில் இடம்பெற்ற UNEP யின் பாலைவன மாதல் மாநாட்டில் 20 வருடங்களுக்குள் பாலைவனமாதலை தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு 4.5 மில்லியன் டொலர் அவசியப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தது. பாலைவனமாதலுக்கு உட்பட்டு வரும் 95 நாடுகள் இதில் கலந்து கொண்டதுடன் அதனை கட்டுப்படுத்துவதற்காக 28 நடவடிக்கைகளை அடையாளம் செய்தனர். காடுகள் ஒழித்தல், முறையற்ற முகாமைத்துவம். வரண்ட பகுதிகளில் குறைவான விவசாயம் மற்றும் குறைவான கால்நடை வளர்ப்புக்களை மேற்கொள்ளல் என்பன குறிப்பிடப்பட்டிருந்தன.

7)உயிர்பல்வகைமையை பாதுகாக்கும் நிகழ்ச்சி திட்டம் :

உயிர் பல்வகைமை தொடர்பாக ஐ.நா. சபை (1992) மனித நிலைப்பாட்டிற்கு அவசியமான பல்வகை கொண்ட தாவரம் மற்றும் விலங்கினங்களை பாதுகாத்து வருகின்றது.

8)ஏனைய செயற்பாடுகள் :

UNEP னால் மேற்குறிப்பிட்ட அம்சங்கள் மட்டுமன்றி ஏனைய பல துறைகளிலும் கவனம் செலுத்தி வருகின்றது. 2009 UNEP மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி 4 வருட கலந்துரையாடலின் பின் சூழலுக்கு வெளிவிடும் இரசம் தொடர்பாக சர்வதேச மட்டத்தில் நோக்கப்பட்டது. இதற்கு 144 நாடுகள் ஒத்துழைத்தன. இப்புதிய மாநாடு ‘இரசம் தொடர்பான மினமாட்டா மாநாடு” என அழைக்கப்பட்டது. உலகில் இதுவரை ஏற்பட்ட பாரிய சூழல் அனர்த்தமாக மினமாட்டா அனர்த்தத்தினை நினைவுபடுத்தும் நோக்கில் ஜப்பானில் அமைந்துள்ள மினமாட்டா நகரத்தில் 1950 களில் ஏற்பட்ட இரச மாசாக்கத்தினால் மனிதர்களுக்கு பாரியளவில் சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தின. ஏனவே இந்த இரசத்தினால் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக ஒரு விழிப்புணர்வினை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. அவ்வாறே இரசம் காணப்படும் வைத்திய உபகரணங்கள், மின் உபகரணங்கள். சீமெந்து, நிலக்கரி என்பவற்றின் பாவனை 2020 ஆம் ஆண்டாகும் பொழுது நிறுத்தப்பட வேண்டும் எனவும் இதனூடான ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகள் கட்டுப்படுத்த ப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டி ருக்கின்றது. விபிழி மின்குமிழ், ஆடம்பர வாசனை பொருட்கள், உடல் வெப்பமானி, இரத்த அழுத்தமானி என்பவற்றின் பாவனை குறைக்கப்பட வேண்டும் என UNEP அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறே முருகைக் கற்பாறை அழிவினைத் தடுப்பதற்கான நடவடிக்கை களும் UNEP யினால் மேற்கொள்ள ப்படுகின்றது. இதற்காக கடல் மற்றும் கரையோர நிகழ்ச்சித் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சூழல் நிகழ்ச்சித் திட்டத்தின் பிராந்திய கடல் நிகழ்ச்சி திட்டம் என்பனவும் மேற்கொள்ளப்படு கின்றது. இதன் மூலம் கரையோர வலயங்களின் பாதுகாப்பு, கடல் உயரின பாதுகாப்பு, கடலுக்கு வெளியேற்றும் கழிவுகள் கட்டுப்படுத்தல் என்பன ஏனைய நாட்டு நிதி உதவியுடன் UNEP மேற்கொண்டு வருகிறது. அவ்வாறே சிரியாவின் சிவில் யுத்தத்தின் பின் அந்நாட்டு காலநிலை மற்றும் வானிலை நிலைமையினை மீண்டும் உருவாக்குவதற்கு UNEP னால் உதவி வழங்கப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி பாரிய பயிர் நிலங்களை பாதுகாப்பதற்காக UNEP யினால் நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன. சுமார் 2001 ஆண்டில் 90% பயிர் நிலங்கள் சேதமடைந்திருப்பதாக UNEP செய்மதி தகவல் தெரிவித்துள்ளன. இதற்காக பயிர்நில முகாமைத்துவ நிகழ்ச்சித் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. வனமுகாமை மற்றும் பாதுகாப்பு தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்பு ணர்வை ஏற்படுத்துவதே நோக்காக இருந்தது. இதில் சதுப்பு நிலமும் உள்ளடக்கப் பட்டிருந்தது.UNEP ஆனது பல்வேறு பட்ட துறைகளை அதாவது தொழில் நுட்பம், கைத்தொழில், வியாபாரம் போன்றவற்றில் கவனம் செலுத்துவதுடன் அவற்றில் ஈடுபடும் மக்களுக்கு தேவையான உத்திகள், தொழில்நுட்ப அறிவு என்பவற்றினை சூழலுக்கு நேயமுள்ள முறையில் எவ்வாறு வகுத்துக் கொள்வது என்பதனையும் தெளிவு படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசிப்பு மனிதனைப் பூரணமாக்கும்

  பொதுஅறிவுடன் மொழிவளத்தையும் வளர்ப்பது வாசிப்புப் பழக்கம்!  வாசிப்பின் ஊடாகவே ஒருவன் பூரண  மனிதனாகலாம். வாசிப்பின் ஊடாகவே அறிவுடைய சமூகத்தை...